ads

Wednesday 4 January 2012

அடியே பெண்ணே காதல் கண்ணே

என்னை தவிர்க்க எத்தனை வழிகள்!
அத்தனை வழியும் நூதன முறைகள் !

காலையில் சந்திக்க வரவா என்றேன்
காலேஜ் இருக்கு முடியாதென்றாய் !

மாலையில் சந்திக்க வரவா என்றேன்
டியூஷன் இருக்கு போகணும் என்றாய் !

விடுமுறை நாளில் பார்போம் என்றேன்
அம்மா  விட்டால் தானே
சமைக்க சொல்லி படுத்துறாள் என்றாய்!

என்னை தவிர்க்க எத்தனை வழிகள்!
அத்தனை வழியும் நூதன முறைகள் !

கோவிலில் பாப்போம் வாயேன் என்றேன்
கூட்டமாய்  இருக்கும் ஐயோ என்றாய்!

காந்தி பூங்கா வாயேன் என்றேன்
காவல்காரர் தெரிந்தவர் என்றாய்!

ஆற்றாங்கரைக்கு  வாயேன் என்றேன்
சும்மா இருங்க தூரம் என்றாய்!

என்னை தவிர்க்க எத்தனை வழிகள்!
அத்தனை வழியும் நுதன முறைகள் !

செல்லில் பேச அழைத்தேன் உன்னை
அப்பா இருக்கிறார் அப்பறம் என்றாய்!

மெசேஸ் அனுப்பு பேசுவோம் என்றேன்
பேலன்சே இல்லை  எப்படி என்றாய்!

டாப் அப் போட்டு விடவா என்றேன்
நெட் ஒர்க் பிராபளம் வேண்டாம் என்றாய்!

என்னை தவிர்க்க எத்தனை வழிகள்!
அத்தனை வழியும் நுதன முறைகள் !

அடியே பெண்ணே உண்மை சொல்லு!
அமெரிக்க மாப்பிள்ளை வந்தாராமே !

அம்பத்தூர் டாக்டர் கேட்டாராமே !
மில்லு ஓனர் பையன் ஜாதகம்
பொருத்தம் வருவது  நிஜம் தானே !

அடியே பெண்ணே காதல் கண்ணே 
உயரே கருகுது உண்மை சொல்லு!

 ஆத்தா கோவிலில் அடித்து சொன்னாய்
நீதான் எனக்கு எல்லாம் என்றாய் !

ஓடி வரவா... உயிரை  விடவா
சாமி சத்தியம் என்றே சொன்னாய்

காதல் என்பது கனவு என்று
கவிஞன் சொன்னது நிஜம்தானா

அடியே பெண்ணே காதல் கண்ணே 
உயிர் கருகுது உண்மை சொல்லு!

1 comment:

  1. vera nalla velai irunthal poi parunggal.
    Don't waste time with useless poems.

    ReplyDelete

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...