ads

Sunday 5 February 2012

கிரகணத்தில் குழந்தை பிறந்தால்?

கையையும் காலையும் வைச்சுகிட்டு கம்முன்னு இருக்கானா,  சரியான கிரகணத்தில் பிறந்த பய. 

காற்று வாக்கிலாவது இது போன்ற வார்த்தைகள் உங்கள் காதுக்கு வந்திருக்கும்.  அது என்ன கிரகணம்?

உங்களுக்கு தெரியாத விஷயமல்ல.  இருந்தாலும் சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன் பாருங்க.  

சூரியனை நிழல் மறைத்தால் சூரிய கிரகணம்.  சந்திரனை நிழல் மறைத்தால் சந்திர கிரகணம்.  

அடடா....  அற்புதமான விளக்கம்.  மேலே சொல்லுங்க.  

சொல்றேன்.

இப்போ சொல்லியது பாமரத்தனமான விளக்கம்.  என்றாலும் சாஸ்த்திரத்தில் கிரகணத்தை பற்றிய விளக்கம் இல்லாமல் இல்லை.  சாஸ்திரத்தில் கிரகண கிரகங்கள் இரண்டு.  அவை ரகு மற்றும் கேது.  

இதை நிழல் கிரகம் என்றும்.  பாம்பு கிரகம் என்றும்,  சாயா கிரகம் என்றும் சொல்வதுண்டு.  இவர்கள் தான் கிரகணம் ஏற்பட காரணமானவர்கள்.  

ஆனால் அறிவியல் ரீதியாக விளக்கம் என்பது வேறு.

என்னவாம்?

சுற்றி வரும் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வரும்போது ஏற்படும் நிழல் சந்திர கிரகணம்.  

சுற்றி வரும் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும் பொது ஏற்படும் நிழல் சூரிய கிரகணம்.  

நமக்கு அறிவியலை பகுத்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.  என்னதான் அறிவியல் வளர்ந்து வியத்தகு சாதனை புரிந்தாலும்,  அந்தநாள் கடவுள் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியாது.    

காரணம் அறிவியலுக்கு அப்பாற்பட்ட விஷயம் ஆன்மீகம். போகட்டும்.  

சூரிய கிரகணம் என்பது அமாவாசையில் ஆரம்பித்து பிரதமையில் முடியும்.  

சந்திர கிரகணம் என்பது பவுர்ணமி இல் ஆரம்பித்து பிரதமையில் முடியும்.   இது ஏதோ கிரகங்களின் தனிப்பட்ட விஷயம் என்றோ,  நமக்கு அதில் தொரர்பு இல்லை என்றோ முடிவு செய்ய முடியாது.

ஏன்?

காரணம் இருக்கிறது.  கிரகண காலத்தில் ஏற்படும் கதிர் வீச்சுகள் பூமியில் உள்ள ஜீவராசிகளை பாதிக்கும்.  

இதில் நீங்களும், நானும்,  அவனும் அவளும், இவரும் அவரும் விதி விளக்கல்ல.  அனைத்து தரப்புக்கும் பொதுவான அம்சம்.

என்னவோ?

சொல்றேன்.

கிரகண நேரத்தில் உணவு அருந்துவதை தவிர்க்க வேண்டும்.  வெற்று கண்ணால்  பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்பதெலாம் ஊர் அறிந்த ரகசியம்.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக ஒரு விஷயம்.... கிரகண காலத்தில் ஆண் பெண் சம்போகம் அறவே கூடாது.  

ஏன்?

அப்போது கருவாகும் குழந்தை  உருவாகும்  விதம் என்னவோ ஒன்றுதான்..  ஆனால் அவய குறைவுக்கு ஆளாகலாம்.  அல்லது வளரும் விதத்தில் வாழ்க்கை முறையில் வேறுபாடு வரலாம்.

எப்படி?

முன்கோபம், முரட்டுதனம், எகத்தாளாம்.  எடுத்தெறிந்து பேசுவது, தன்னை மீறி எதுவும் இல்லை என நினைப்பது, அடாவடி செயல்களில் துணிந்து இறங்குவது என்று வில்லத்தனத்தின் மொத்த விள்ளசமாகவே திகழும்.

அல்லது மந்த புத்தி, மறதி குணம், எத செயலிலும் ஈடுபாடு அற்ற நிலை, என்று அசுமஞ்சமாகவே இருக்கும்.  அப்படி பட்ட மனிதனுக்கு அடித்தளம் விழுந்து விடும்.

ஓகோ அப்பறம்.

பொதுவாக தாவர வகையில் தர்ப்பைதான் கவரும் ஆற்றலில் காந்தத்துக்கே முன்னோடி.  அதோடு தாமிரம் மற்றும் தங்கம் மட்டுமல்ல,  தரப்பையும் மின் கடத்தலில் முன்னோடி.  
அதனால்  தான் கிரகண காலத்தில் வெளிப்படும் ஊதா கதிர்களை உறிஞ்சும் வல்லமை பெற்ற தர்ப்பையை,  உணவு பதார்த்தம், குடிநீர் இவற்றில் வைக்க சொல்லவதும், ஆகர்சன சக்தியை அதிகம் பெறுவதற்கு விக்கிரகத்தின் மேல் தர்ப்பையை வைத்து பூஜை அறையை பூட்ட சொல்வதும் இதற்குதான்.

கிரகண நேரத்தில்  மந்திரம் ஜபித்தால் ஒரு மந்திர வார்த்தை 100 முறை சொல்லியதற்கு சமம் என்று சொல்வார்கள்.  


1 comment:

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...