ads

Thursday 22 March 2012

ராசிகளின் ரகசியங்கள் - RAASIKALIN RAGASIYANGAL KUMBHAM

நீங்கள் கும்ப ராசியில் பிறந்த்தவரா... அப்படியானால்  வண்ணத்தில் நீலத்திற்கு சொந்த்தகாரர், கருப்பை ஆள்பவர், கர்ம வினை கிரகம், உழைப்பை அதிகமாக்கி ஊதியத்தை குறைத்து கொடுப்பவர், சூரிய புத்திரன்,  சர்வேச்வரனுக்கு இணையாக ஈஸ்வர பட்டம் பெற்றவர் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் சனி பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்.

 சனி பகவானின் பரிபூரண ஆதிக்கத்தில் பிறந்தவர்கள்.   ஆள பிறந்தவர்கள்,  மற்றவரை ஆழம் பார்பவர்கள். 

மாற்று கருத்தை அறியும் முன் மனக்கதவை திறப்பதே இல்லை.  மௌனசாமியார் மாதிரி இருப்பிங்க.  தேவைபட்டால் தேளை விட மோசமாக கொட்டுவீங்க. 

வேண்டியவருக்கு வேண்டியதை செய்யும் நீங்கள் வேண்டாதவரை வேரறுக்கும் வரை ஒயமாட்டிங்க.  விதி வழி வாழ்க்கை என்பது உங்களை பொறுத்தவரை ஒரு சம்பிரதாய வார்த்தைகள்.   எதையும் மதியால் வெல்ல நினைப்பவர்கள்.

நினைத்ததை அடைய நிறைய மெனக்கடுவீர்கள்.  வெற்றி இலக்கை விரைந்தும் பிடிப்பிங்க.  உங்கள் வாழ்க்கை பாதையில் யோகங்கள் வரும்.  அது பின்னால் வரும் என்பது சாஸ்த்திர சான்று.

விட்டேனா பார் என்று வீராப்பு காட்டினாலும், சில சமயம்  தட்டி கொடுக்கவும் தயங்காதவர்கள்.  பிக் திங்கர்.

எதையும் ஆராயாமல் அடி எடுத்து வைப்பதில்லை,  முடியாது என்பது உங்கள் அகராதில் இல்லை. தாராள மனம், தயாள குணம்  இரண்டும் உண்டு. 

எதிலும் ஒரு நேர்த்தி, கலையழகு இருக்கும்.  அதாவது நீங்கள் செய்யும் காரியங்களில்.   

கடமையை செய் பலனை எதிர் பார் என்பது உங்கள் சித்தாந்தம். 

துப்பறியும் புலி 007 ரேஞ்சுக்கு தோண்டி துருவி பார்க்குறதுதான் மற்றவர்களுக்கு எரிச்சல்.  மற்றபடி நீங்கள் ஒரு காந்தியவாதி.  நீங்கள் ஒரு ஹிட்லர். 

காந்தியவாதியாக இருக்கும் போது, ஹிட்லரின் இருப்பிடம் தெரியாது. ஹிட்லராக இருக்கும் போது காந்தியை பற்றி அறவே புரியாது.  ஒரு தினிசான குணம்.  

ஆனால் கடின உழைப்பு, கடமை உணர்ச்சி, விடா முயற்ச்சி இது உங்களுக்கே சொந்தமானது. 

சில சமயம் மூளை எந்திரம் மாதிரி இருக்கும்.  பல சமயம் தந்திரமாக செயல் படும்.  எப்படியோ ..... நான் முதன்மையானவர் என்பதையும், முன் மாதிரி என்பதையும் உணர வைப்பிர்கள். 

பெரும்பாலும் உங்கள் ஆரம்பகால வாழ்க்கைக்கு அடித்தளம் இருக்காது. பிற கால வாழ்க்கையில் பிரச்சனையே இருக்காது.  

கடலில் தூக்கி போட்டாலும் கரை ஏறும் வீரதீர பராக்கிரமசாலிகள்.  

சாதனையாளர்கள், சரித்திரம் படைப்பவர்கள்.  பிற்காலத்தில் சரித்திரமாக வாழும் நீங்கள்,  வரம் கொடுக்கும் சாமியை சிரம் தாழ்த்தி வணங்கி,  வேண்டியதை பெற்று, வேண்டியவரை அரவணைத்து, உயர உயர போவீர்கள்.


No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...