ads

Saturday 3 March 2012

குட்டி கதைகள் / short story

இது ஒரு தமாஷ் கற்பனை கதைதான்.

வானலோகத்தில் ஒரே பரபரப்பா பேசிக்கிட்டாங்க.  பூலோகவாசிகள் புது புது போதை வஸ்த்துக்களை கண்டுபிடிச்சு ரொம்ப  சந்தோசமா இருக்காங்க.  ரம், பீர், விஸ்க்கி, பிராண்டி, ஜின்னு, வோட்கா,  ஓய்ன்,  கல்லு, கஞ்சா, அபின் இப்படி ஏகப்பட்ட சந்தோசங்களை சாதாரண மானிடர்கள் பயன்படுத்துகிறார்கள்.  

ஆனால் வானலோகத்தில் இன்னமும் சோம பானமும் , சுறா பானமும்தான் குடித்து கொண்டிருக்கிறோம்.  

இந்த வஸ்த்துக்கள் எப்படி இருக்கும்? 

இதை தெரிந்து  கொள்ள ஒரு நாள் கடவுள் மனித ரூவத்தில் ஒரு பாருக்கு வந்தாரு.  சப்ளை பன்ற பையன் வந்து என்ன சார் வேணும்னு கேட்டான்.  

குழந்தாய்...என்ன இருக்கு?

எல்ல ஐட்டமும் இருக்கு உங்களுக்கு என்ன வேனும். 

சரி... பீர் கொண்டு வா.  பையன் கொண்டு வந்தான்.

ஒன்னு குடிச்சார்   போதை வரலை.  ரெண்டு குடிச்சார் போதை வரலை.  பத்து குடிச்சார் போதை வரலை.  

என்னடா இது..  இதை குடித்தா பூலோகவாசிகள் போதையில் ஆடுகிறார்கள்.  

குழந்தாய்... பிராண்டி கொண்டு வா.  

குவாட்டரா, ஆப்பா . புல்லா, 

இது என்ன அளவு.  கடவுளுக்கு புரியவில்லை.  சரி எதுவாக இருந்தால் என்ன.  முதலில் வரட்டும் என்று நினைத்தவராக.... ஒரு புல்லு கொண்டு வா மகனே.  

ஒரு பாட்டில் குடிச்சார் போதை வரலை, ரெண்டு குடிச்சார் போதை வரலை, பத்து குடிச்சார் போதை வரலை.

கடவுளுக்கு குழப்பம்.  இருக்கும் அத்தனை வகையிலும் பத்து குடித்தும் கொஞ்சம் கூட போதை ஏறவே இல்லை.  

இதை பக்கத்தில் இருந்து கவனித்து கொண்டிருந்தான் ஒரு குடிமகன்.  

இவ்வளவு குடிச்சுட்டு  கல்லு மாதிரி உட்காந்து இருக்கியே நீ யாருயியா என்றான்.  

அதுக்கு அவர் நான் தான் கடவுள் என்றார்.

யோவ்.... இவ்வளவு நேரம் ஒன்னை ஒன்னும் செய்யலை.  இப்பதான் புல் போதைல இருக்கே என்றான்.



இது பட்டிமன்றம் ஒன்றில் கேட்ட கதை.

குடியில மூன்று வகை இருக்கு.


1 . கௌரவ குடி.

2 . மர்ம குடி

3 . மானம் கெட்ட குடி

முதாலாவது  மூன்றாவது மனிதனுக்கு தெரியாமல் வாங்கி வந்து வீட்டிலேயே வைத்து குடிப்பது.  இது கௌரவ குடி.

 வெளி உலகத்திற்கு தெரியாமல்,  தன் வீட்டிற்கு கூட தெரியாமல் குடித்து விட்டு நல்ல பிள்ளை மாதிரி இருப்பது மர்ம குடி.

கடைசி... மானம் கெட்ட குடி. டிப் டாப்பா சலவை சட்டையை போட்டுக்கிட்டு போய்,  பார்ல குடிச்சுட்டு,  ஆ உவ் ன்னு கத்தி அலம்பல் பன்றது. கடைசியா   ரோட்டோரத்துல சாக்கடை ஓரமா  விழுந்து கிடக்கிறது.

இது மானம் கெட்ட குடியாம்.  சாக்கடைன்னு சொன்னதும் இன்னொரு கதை நினைவுக்கு வருது.  


ஒரு முனிவரை மன்னன் ஒருவன் அவமதித்து விட்டான். கோவமடைந்த முனிவர் ..... மரியாதை தெரியாத மடையா..நீ பன்றியாக கடவது என்று சபித்து விட்டார்.

மன்னனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.  கவலையுடன் மகனை அழைத்தான்.  நான் பன்றியாகி பாவத்தை  கழிக்கிறேன்.  நீ..... நான் எங்கிருந்தாலும் கண்டுபிடித்து கொன்று விடு.

என் சாபமும், கேவலமான பன்றி வாழ்க்கையும் முடிவுக்கு வரட்டும் என்று மகனுக்கு உத்தரவிட்டான்.

ஒரு வருஷம் முடிந்தது விட்டது. மன்னனின் மகன் தன் தந்தையை பன்றி கூட்டங்களில் தேடி அலைந்தான். இறுதியில் ஒரு காட்டில் சேறு நிறைந்த குட்டை ஒன்றில் தன் தந்தையை அடையாளம் கண்டான்.

அந்த பன்றி ஒரு பெண் பன்றியுடன் சேர்ந்து ஆறு குட்டிகளை  ஈன்று இருந்தது.  அதை கொள்ள தன் வில்லை எடுத்தான்.  உடனே பன்றியாக இருந்த மன்னன் மகனிடம் ஓடி வந்து கெஞ்சியது.

மகனே என்னை கொள்ளாதே.  இந்த வாழ்கையும் எனக்கு பிடித்திருக்கிறது.  இதோ இவள் தான் உன் சிறிய தாய்.  உனக்கு ஆறு சகோதரிகள் இருக்கிறார்கள்.  நான் சந்தோசமாக இருக்கிறேன்.

நீ நாட்டை ஆட்சி  செய் என்றது.  மகன் தலை குனிந்த படியே திரும்பினான்.

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...