ads

Thursday 26 April 2012

உங்கள் ஜிமெயிலை பாதுகாப்பது எப்படி?

எவ்வளவுதான் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வைத்தாலும் இந்த கணினி திருடர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. 

சட்டத்தின் ஓட்டைகளில் இருந்து குற்றவாளிகள் தப்பி விடுவது போல், இந்த கணினி திருடர்களும் தப்பி விடுகிறார்கள்.  அதனால்  நாம் தான் விழிப்பாக இருக்க வேண்டி இருக்கிறது.

இந்த விஷயத்தில்  ஆனானப்பட்ட அமெரிக்காவே ஆடிபோய்விட்டது. 

விஷயம் இதுதான்.

அமெரிக்காவிற்கு இணையாக சைனாவும் நவீன தொழில் நுட்பத்தில், அறிவியல் வளர்ச்சியில், அணு ஆயுத தயாரிப்பில் முன்னிலையில் இருக்கிறது.

எப்படி?

இங்கேதான்  சைனா தன் தகிடு தித்தங்களை அரங்கேற்றியது. அமெரிக்காவின் ராணுவ கம்யூட்டர்களின் கடவு சொற்களை எப்படியோ தெரிந்து கொண்ட சைனா தினசரி அவர்கள் நடவடிக்கைகளை  கண்காணிக்க தொடங்கியது.

உள்ளது உள்ளபடி சொன்னால்... அமெரிக்க கம்பியூட்டர்களை சைனா இயக்கியது என்று சொல்லலாம்.

ராணுவ ரகசியங்களையும், அறிவியல் தொழில் நுட்ப பைல்களையும் சைனா சுட்டு கொண்டது.

இதை மிக தாமதமாக தெரிந்து கொண்ட அமெரிக்க அதிர்ச்சியில் உறைந்து போனது. இதை வெளியே சொல்லவும் முடியாது.  சொன்னால் வெட்கம், சொல்லாவிட்டால் துக்கம் என்பது போல் ரெண்டும் கெட்டான் மனநிலையில் மாட்டி கொண்டது.

காரணம் ...ஹைடெக் பாதுகாப்பு எங்களுடையது என்று மார்தட்டும் அமெரிக்கா  தன் முகத்தில் சைனா  கரி பூசியது என்று சொல்ல முடியுமா. 

ஆனால் இந்த தகவல் இணையதளங்களில் கசிய தொடங்கியபோது அமெரிக்கா மறுக்கவும் இல்லை. ஒத்து கொள்ளவும் இல்லை.  மவுனமாகி விட்டது.

ராணுவ ரகசியங்களையே திருடும் பலே கெட்டிகார்கள் இருக்கும் நாமெல்லாம் எம்மாத்திரம். 

உண்மையில் ஒரு விஷயத்தை நாம் யோசித்து பார்க்க வேண்டும். நாம் எவ்வளவுதான் ரகசியமாக செய்திகளை பறிமாறி கொண்டாலும், அதையும் தாண்டி நம் செய்திகள் கண்காணிக்க படுகின்றன என்பது உங்களுக்கு  தெரியுமா?

அமெரிக்கா ரஷ்யா சைனா என்றில்லை, நீங்கள்  மன்மோகன் சிங், ஜெயலலிதா, கருணாநிதியாக கூட இருக்க வேண்டிய அவசியம் இல்லை. குப்பன், சுப்பன், கோவிந்தனாக இருந்தாலும் கூட உங்கள் கம்பியூட்டர் கண்காணிக்கபடும்..

உங்கள்  வீட்டில்  உள்ள கம்பியூட்டரில் அடிக்கடி நீங்கள் போகும் தளம் என்பது ஓன்று  இருக்கும். 

உதாரணமாக நீங்கள் பேஸ்புக் பிரியர் என்று வைத்து கொள்வோம். நீங்கள் கூகுள் போய்,   சர்ச் பாக்ஸ்யில்   f  என்று முதல் எழுத்தை தட்டியதும் facebook என்று முதலில் வரும். மற்ற வலை தளங்கள் பிறகுதான் வரும்.  

எப்படி?

உங்கள் செயல்பாடுகளை உன்னிப்பாக கண்காணித்து வரும் கூகள் தான் காரணம். 

உங்களின் அணைத்து ரகசியங்களையும் அறிந்த கூகுள் தான் இப்படி செய்கிறது.  அதற்காக கூகுள் தான் இப்படி தகிடு தித்தங்களை செய்கிறது என்று சொல்லவில்லை. அவர்களுக்கு தெரியாமல் எதுவும் நாம் செய்யமுடியாது என்பது தான் எதார்த்தம்.

சரி நாம் விஷயத்திற்கு வருவோம்.

இன்று பெரும்பாலும் ஜிமெயில் ஆக்கவுட்ன்ட் வைத்திருப்பவர்கள் அதிகம். அதிகம் பாதிக்க படுவதும் இந்த ஜிமெயில் தான். 

பலர் பலரின் மெயில் கணக்குகளை திருடி விடுவது அன்றாட நடவடிக்கையாகி விட்டது. இதை நாம் எப்படி தடுப்பது? இன்னும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எப்படி எடுப்பது? அதற்கு கூகுள் வலை தளமே டிப்ஸ் தருகிறது அதை பாப்போம்.

இதை பற்றி   நான் சொல்வதை விட நீங்களே போய் விடியோ பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் கூகுளே போய் www .google.com goodtoknow என்று டைப் செய்து ஓகே கொடுத்தால் ஒரு விடியோ ஓபன் ஆகும் அதில் டிப்ஸ் இருக்கிறது. தெரிந்து கொள்ளுங்கள்.

அல்லது

u  tub போய் 5 tips for staying safe on tha web என்று டைப் செய்யுங்கள் விடியோ வரும்.  அதில் உங்களுக்கு தேவையான தகவல்கள் இருக்கிறது.

அதை பின் பற்றி உங்கள் mailai பாதுகாத்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...