ads

Saturday 7 July 2012

பெண்கள் அழகு குறிப்பு

தினம் காலையில் வெறும்  வயிற்றில் பொரிகடலை உட்கொண்டால் மாதவிலக்கு ஒரு நாள் தாமதமாக வரும்.

ஒரு வாரம் தாமதமாக  வரவேண்டும் என்று நினைத்தால் தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட வேண்டும்.

ரெத்த சிகப்பு அணுக்களை  அதி வேகமாக புதுபிக்கும் சக்தி 100 கிராம் கேரட்டிலும் 150 கிராம் பீட்ருட்டிலும் உள்ளது.

நல்லெண்ணை வேப்பம்பூ கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்..

மாதவிலக்கின் போது ரெத்த போக்கு அதிகமானால் சாதம் வடித்த கஞ்சியில் மோர் கலந்து குடித்தால் நின்றுவிடும்..

பல் ஈறு வீக்கம் உள்ளவர்கள், பல்  கூ ச்சம் உள்ளவர்கள் நெல்லிக்கனியை மென்று வருவதினால் பற்கள் பலமாகும்.

கொத்த மல்லி பொடியை கொதிக்க வைத்த நீரில் கலந்து காலை உணவிற்கு பிறகு குடித்து வர உடலில் உள்ள கொழுப்பு நீங்கும்.

கை கால்களில் சொறிசிரங்கு இருந்தால் கொத்த மல்லி போட்டு கொதிக்க வைத்த நீரில் கழுவி வர குணமாகும்..

வில்வ இலைகளை காயவைத்து மிக்ஸ்சியில் போட்டு பொடி செய்து குளிக்கும் போது இந்த பொடியை உடல் முழுவதும் தேய்த்து குளிக்க சரும நோய்கள்  முற்றிலும் குணமாகும்..

ஆரஞ்சு தோலை காய வைத்து பொடி செய்து கொள்ளவும். அதனுடன் பால் கலந்து  முகம் முழுவதும் தடவ வேண்டும்..  அரை  மணி  நேரம் கழித்து தண்ணீரில் முகம் கழுவ முகம் பளபளக்கும்.



வேப்பிலை, புதினா, துளசி இலைகளை சமமாக எடுத்து அரைத்து பொடி செய்து கொள்ளவும்..அதனுடன் ஒரு ஸ்பூன் பன்னீர் கலந்து முகத்தில் தடவி அரை மணிநேரம் கழித்து முகம் கழுவ முகம் பளபளக்கும்..

1 comment:

  1. நல்லதொரு பதிவு ! ! தொடர வாழ்த்துக்கள் ! பகிர்வுக்கு நன்றி !

    ReplyDelete

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...