ads

Thursday 29 November 2012

தெரியுமா உங்களுக்கு?


கதவு மூடிய பிறகு ஆலயத்திற்கு முன்பு நின்று சாமியை வணங்குதல் கூடாது. 

சாமிக்கு அலங்காரம் செய்வதற்காக திரை போட்டு இருந்தாலும், அந்த நேரத்தில் வணங்குதல்  தவறு.

கற்ப்பூர தீபமாக இருந்தாலும், சாமிக்கு காட்டிய திருவிளக்கு தீபமாக இருந்தாலும், அதை வணங்கும் போது, கரங்களை தீபத்திற்கு வெளிப்புறம் இருந்து குவித்து, கையில் கரி படாமல் வணங்க வேண்டும்.

சுப காரியங்கள் செய்யும் போது ஒரு கோடு கோலம் போடக்கூடாது.



அசுப   காரியங்கள் செய்யும் போது இரட்டை   கோடு கோலம் போடக்கூடாது

துளசி மாடத்திற்கு பூஜை செய்யும் போது வேறு செடியில் இருந்து தான் தளங்களை பறிக்க வேண்டும்.

கோவில் மண்டபத்தில் படுத்து உறங்க கூடாது. அது குருமார்களாக இருந்தாலும் சரி. அப்படி உறங்கினால் அடுத்த பிறவியில்   மலை பாம்பாக  பிறப்பார்களாம்.  தர்மசாஸ்திரம் சொல்கிறது.


அதிகாலை சூரிய உதயத்திற்கு சற்று முன்பும், மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு சற்று சற்று முன்பும் விளக்கு ஏற்ற வேண்டும்.

இல்லறததொடர்பு இல்லாமல் தனித்து தூங்கி எழுந்த பின் முகம் கழுவி, தூங்க செல்லும் முன்,  குளித்த உடன், வெளியில் புறப்படும் முன், சூரியன் உதிக்கும் போது, சூரியன் மறையும் போது, நல்ல காரியம் துவக்கும் முன், சாப்பிடுவதற்கு முன்பும் விபூதி அணியலாம்.

ஆலயத்தில் வணங்கும் போது இறைவனின் இடப்புறத்தில் பெண்களும், வலப்புறத்தில் ஆண்களும் நின்று வணங்க வேண்டும்.

Wednesday 28 November 2012

பைரவர் நிர்வாணம் ஏன்?




பைரவரை பற்றி மிக விரிவாக பேசப்போகும் தொடர் இது. 

அகில உலகையே காத்து ரட்சிக்கும் சிவனின் அம்சம் இவர். முதலில் இவரின் திரு உருவ தோற்றம் பற்றி பார்ப்போம். 

இவர் நான்கு கரங்கள் கொண்டவர். சில அம்சம்களில் இரு கரங்கள் உண்டு. கரங்கள் அனைத்திலும் ஆயுதம் தாங்கிய இவர் ஆடை அணிவதில்லை. 

காரணம் என்ன?  கபாலிகர் தங்கள் இஷ்ட தெய்வமாக பைரவரை வணங்குவதால், அவர் ஆடை இல்லாமல் இருக்கிறார். அது மட்டும்மல்ல எட்டு திக்குகளையும் ஆடையாக அணிந்து கொண்டதால்,தனியாக ஆடைகளை  அணிவதில்லை.

இருக்கட்டும் , யாரிந்த கபாலிகள்.

தற்காலத்தில் அகோரிகள் என்று அடையாளம் காட்டப்பட்டவர்கள். நிர்வாண சாமியார்கள்.நரபலிக்கு அஞ்சாதவர்கள் என்று சொல்லப்படுகிறது. 

இவர்கள் தங்கள் இஷ்ட தெய்வமாகவும், குலதெய்வமாகவும் வழிப்பட்டது பைரவரை.

ஹிந்து மதத்தை பொறுத்தவரை இன்றளவும் கடைபிடிக்கும் ஒரே அம்சம் இதுதான். இறைவனை வேறுப்படுத்தி பார்ப்பதில்லை. தங்களில் ஒருவராக பார்ப்பவர்கள்.

தாங்கள் உண்ணும் உணவையே இறைவனுக்கு படைத்து மகிழ்பவர்கள். தாங்கள் உடுத்தும் ஆடைகளையே அணிவித்து மகிழ்பவர்கள்.


அதனால்தானோ என்னவோ தெய்வங்கள் பெரும் சக்தி படைத்தவர்களாக  விளங்கிய போதும், சாதாரண குடும்ப வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள்.

மனித வாழ்க்கையில் வரும் சண்டை, சச்சரவு, பூசல், குடும்ப பிரிவு, விரோதம் எல்லாமே இறைவன் மற்றும் இறைவியின் வாழ்விலும் நடந்திருக்கிறது.

அந்த வகையில் கபாலிகர் என்னும் அகோரிகள் தங்கள் பண்பாடு, கலாச்சாரத்தையே இறைவனுக்கு அறிமுக படுத்தி இருக்க வேண்டும். அதனால்தானோ என்னவோ பைரவர் நிர்வாண நிலையில் இருக்கிறார்.


Monday 26 November 2012

கவலைக்கு மருந்து


வாழ்க்கை வாழ்வதற்கே 

கடவுள் மனிதனை படைத்து நல்லபடியாக வாழ்ந்து வா என்றுதான் அனுப்பி வைக்கிறான்.  நாம்தான் நந்தவனத்து ஆண்டியாக வாழ்க்கையை  போட்டு உடைத்து விடுகிறோம். 

கவலை மூட்டைகளை சுமந்துக் கொண்டு வாழ்க்கையை சுமையாக்கி விடுகிறோம். 

எது நடந்தாலும்,  நாம் அந்த வாழ்க்கையை வாழ்ந்துதான் ஆகவேண்டும் என்கிறபோது, எது நடக்கப்போகிறதோ அது நன்றாகவே நடக்கும் என்று மனதை சந்தோஷமாக வைத்துக்கொண்டு, சந்தோசஷமாக எதிர்கொள்வதில் என்ன நஷ்டம்.

பீஷ்மர் போர்முனையில் கூட சந்தோஷமாக இருந்தாராம். சாவின் விளிம்பிலும் அனைவருக்கும் நீதி சொல்கிறார். விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்கிறார்.

சண்டையின் போது சிரிக்க தெரிந்தவன் எதிரியை கொஞ்சம் கொஞ்சமாக வெல்கிறான் என்கிறது உளவியல்.

சந்தோசமான மனநிலையை வளர்த்துக் கொண்டால் கவலைகளை வென்று விடலாம். காலையில் எழுந்திருக்கும் போதே உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக என்ற சந்தோசத்தோடு எழுந்திரியுங்கள். உண்மையில் அந்தநாள் உங்களுக்கு உற்ச்சாகமாகவே அமையும்.

இந்த உலகில் பிரச்சனை இல்லாத மனிதர்கள் யாரும் இல்லை. பில்கேட்ஸ்க்கு கூட பிரச்சனைகள் இருக்கிறது. அவர் கம்பெனிமேல் நிறைய வழக்குகள் போடப்பட்டு நடக்கிறது.

அவர் எப்போதும் தன்னை நம்பர் ஒன்னாகவே வைத்திருக்க போராட வேண்டி இருக்கிறது.

ஆனாலும் அவர் பிரச்சனைகளை பற்றியே நினைத்து கொண்டிருந்தால் அவரால் வெற்றி பெறவே முடியாது. 

பல கஷ்டங்கள் நாமே உருவாக்கி கொண்டதுதான்.  நம்மால் அவற்றை போக்கி கொள்ளவும் முடியும். அதில் புதைந்து போகவும் முடியும். புதைந்து போன மனிதன் புலம்பிதான் திரிவான். ஆனால் சிந்திக்க தெரிந்த மனிதன் சிரித்துத்தான் வாழ்வான். 

கவலைக்கு மருந்து


சிரிக்க திறக்கும் உதடுகள் வழியே துன்பம் வெளியேறிவிடும் என்கிறார் கவிபேரசு.  சிரிபொலி கேட்கும் வீட்டின் திண்ணையில் மரணம் உட்காருவதே இல்லை. 

ஒவ்வொரு சிரிப்பிலும் சில மில்லிமீட்டர் உயிர் நீளக்கூடும். மரணத்தை தள்ளிப்போடும் மார்க்கம் தான் சிரிப்பு என்கிறார் அவர். 

கவலைக்கு மருந்து

ஒரு ஜென் ஞானி இறக்கும் தருவாயில் இருந்தார். சுற்றிலும் சீடர்கள் சோகமாக நின்றுக் கொண்டிருந்தனர். அவரது தலைமாட்டில் நிற்கும் சீடரை பார்க்கிறார் ஞானி. சீடர் வெளியே ஓடுகிறார். குருவிற்கு பிடித்த இனிப்பு பலகாரத்தை  வாங்கி  வருகிறார்.  

குருவுக்கு சந்தோசம். அதை ஆசையோடு வாங்கி சாப்பிடுகிறார்.  பின் அந்த சீடரை அருகில் அழைக்கிறார். கடைசியாக உபதேசம் செய்யத்தான் அழைக்கிறார் என்று நினைத்த சீடர் அருகில் சென்று குனிகிறார்.

குருவின் உதடுகள் மெல்ல அசைகின்றன. ஆஹா என்ன ருசி. சொல்லிவிட்டு முகத்தில் அந்த இறுதி சிரிப்புடன் கண்களை மூடுகிறார்.

சீடருக்கு குருவின் உபதேசம் புரிகிறது. வாழ்வின் கடைசி நிமிடம் வரை வாழ்க்கையை ருசிக்க கற்றுக் கொள்ளுங்கள் என்பதே அந்த உபதேசம். வாழ்க்கை ஒரு சந்தோஷ சாகரம். இதை தெரிந்து கொண்டவன் முத்தெடுக்கிறான். தெரியாதவன் மூச்சு திணறுகிறான்.

உங்கள் புன்னகை தான் மற்றவரை உங்களை நோக்கி இழுத்து வரும். புலம்பல்கள் அல்ல.

-மதிவாணன் 

Sunday 25 November 2012

மதமும் மனிதனும்

ப. முத்துகுமாரசாமி, சென்னை

சிந்திக்கும் திறன் மனிதனுக்கு தரப்பட்டிருக்கிறது. ஆன்மீகத்தின் தொடர்பு இல்லாமல் போனால் மனிதனது வாழ்க்கை நல்ல நோக்கம் கொண்டதாக இருக்க முடியாது. 

உண்பதும், வாழ்வதும், உறங்குவதும், மனிதனுக்கும், மிருகத்திற்கும் ஒரே மாதிரியாக இருக்கிறது. ஆனால் மிருகத்திற்கு ஆன்மிகத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளும் அறிவு கிடையாது. 

ஆகையால் தனது புத்திசாலித்தனத்தினால் எதையும் தீர்மானம் செய்யும் மனிதன் படைப்புகளின் மகுடம் என்றழைக்கப்படுகிறான். 

அவனது சிந்தனையும் வார்த்தைகளும், செயல்களும் ஒரே மாதிரியாய் இருக்க வேண்டும். தனக்குள் மத நல்லிணக்க மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது நேர்மையான வாழ்வுக்கு வழிவகுப்பது திண்ணம்.

நமக்கு நேரும் சிக்கல்களை எதிர்கொண்டு அவைகளை தீர்ப்பதற்குரிய வழிமுறைகளை சுட்டிக் காட்டி மனிதனுக்கு உதவுவது மதம்.

உயர்ந்த மனிதனாக தன்னை உருவாக்கிக் கொள்ள பலவகையான சந்தர்ப்பங்கள் அவனுக்கு தரப்பட்டிருக்கிறது. அவனை உயர்ந்த நிலைக்கு  உயர்த்தி உண்மை என்ற உலகத்திற்கு மதம் தான் அழைத்து செல்கிறது.

பரம்பரையாக நிலவும் நன்னெறிகளை கடைப்பிடித்து ஒரு நாகரீகமான வாழ்க்கை பாதையில் செல்ல காலம் காலமாய் மதம் தான் மனிதனை  ஊக்குவிக்கிறது.

மதத்தை இழந்து விட்ட சமுதாயம் நாளடைவில் பண்பாடற்ற சூழ்நிலைக்கு தாழ்ந்து போகிறது.


மதம் மனிதனுக்கு விழிப்புணர்வை தந்து பல்வேறு கருத்துக்கள் கொண்ட மனிதர்களை ஒன்றிணைத்து, தோழமையுடன் ஒருங்கிணைத்து சிந்தித்து செயல்பட வைக்கிறது.

பண்பாட்டு பிணைப்புக்களை இழந்து விட்டால் எந்த நாடாக இருந்தாலும் அங்கே வாழும் மக்கள் பலவகையான துன்பங்களை அனுபவிக்க நேரிடுகிறது.

ஒரு நாட்டின் அரசியல் வளர்ச்சிக்கு ஆன்மீகம் வழிகாட்டியாய் விளங்கினால் அந்த நாட்டின் வளங்கள் பெருகும். மதம் மனித வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே திகழவேண்டும்.




ராமாயணம் மகாபாரதம் ஒரு ஒப்பிடு


ராமாயணம் மகாபாரதம் என்கிற இரண்டு இதிகாசங்களும், நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள். இவற்றில் இருந்து நாம் பெற்றுக் கொள்ளும் படிப்பிங்கள் ஏராளம்.

முறையற்ற பெண்ணாசையும், அதீத மண்ணாசையும் கூடாது என்பதை இந்த பெரும் காவியங்கள் வழியாக அறிந்தாலும், மனித வாழ்க்கைக்கு அடிப்படியை இருக்க வேண்டிய பல உன்னத நெறிகளை அவை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. 

சந்தேகமற இந்த இரண்டுமே நமது இரு கண்ணாய் திகழ்கின்றன என்பது உண்மை.


விதுர நீதியையும், பீஷ்ம நீதியையும், ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் கீதை உபதேசங்களையும் மகாபாரதம் தன்னகத்தே கொண்டிருந்தாலும், மனித நேயத்தை, அன்பின் உச்சத்தை எடுத்து காட்டும் காவியமாய் ராமாயணம் திகழ்கிறது. 

ஒரு குடும்பத்தில் நிகழும் அண்ணன் தம்பி பாசம், நட்பு, கணவன் மனைவி உறவின் புனிதம், தந்தை மகன் நேசம், தனி மனித ஒழுக்கம், பக்தி இவற்றை எல்லாம் எடுத்துக் காட்டும் உன்னத சித்திரமாய் ராமாயணம் அமைந்திருக்கிறது.


மகாபாரத்தில் கண்ணன் என்ற ஒரு மாபெரும் பாத்திரம், கதை முழுவதும் உலாவி, நமை வியக்க வைத்தாலும், ராமன் என்னும் மா மனிதன் தன் உயர்வான குணத்தின் மூலம், நம் உள்ளங்களில் ஒட்டி கொள்கிறான். 

நினைத்து  நினைத்து வியப்படையும், பெருமிதம் கொள்ளும் மகாபுருஷனாக உயர்ந்து நிற்கும் ராமன் பாத்திரம் போற்றப்படக்கூடிய பாத்திரம் மட்டும் அல்ல.  நாமும் பின்பற்ற வேண்டிய பாத்திரமாகும். 

அண்ணன் தம்பியின் சகோதர பாசத்தை ராமாயணத்தை போல் மகாபாரத்தில் காணமுடியவில்லை.

தன் ராஜ்ஜியத்தையே தம்பிக்காக விட்டு கொடுத்து விட்டு, தன் மனைவியுடன் கானகம் வருகிறான் ஒருவன்.

தன்னுடைய சகோதர்களுக்காக ஐந்தடி நிலம் கூட தரமுடியாதென தன் உடன் பிறப்புக்கள் அனைவரின் உயிர்களையும் பலிக்கொடுக்கிறான் ஒருவன்.

வேடனான குகனையும், எதிரியின் தம்பி விபிஷணனையும் தன் சகோதரனாக ஏற்றுக் கொண்டு பாசத்தை பொழிகிறான்  ராமன்.

அனுமனை தன் மைந்தனாகவே அங்கிகரிக்கிறான். ஜடாயு என்ற பறவையை  தன் தந்தை ஸ்தானத்தில் வைத்து போற்றுகிறான். இறுதி சடங்கு செய்கிறான்.அன்பினால் பறந்து விரிகிறது ராமனின் இதயம்.

மகாபாரத்தில் இதன் சகோதர பாசம் சற்று குறைவாகவே சித்தரிக்கப் படுகிறது. தன் மூத்த சகோதரனான தர்மனை, அர்ச்சுனனும், பீமனுமே எதிர்த்து பேசும் சம்பவங்கள் மகாபாரத்தில் இடம் பெறுகின்றன.

இறுதிவரை அண்ணனின் நிழல் போல் நின்று அண்ணனின் சொல் மீறாமல் நடக்கும் லச்சுமணன் இங்கே நம்மை வியக்க வைக்கிறான். அண்ணன் கானகம் புறப்படும் முன் அவனுக்கு முன்னர் புறப்பட்டு தயாராகிறான்.

அண்ணனின் வாயில் இருந்து ஒரு ஆணை வந்தால் போதும், வில்லில் இருந்து புறப்படும் அம்பை போல் விரைந்து அதை நிறைவேற்றி வைக்கிறான். ராமனே பல இடங்களில் லச்சுமணனை வியந்து பாராட்டுகிறான்.

ராமனின் ஒரு தம்பி இப்படி இருக்க, இன்னொரு தம்பியோ தன் தாயின் வரத்தினால் ராமன் ராஜ்ஜியத்தை துறந்து கானகம் சென்றுவிட்டானென்று கேள்விப் பட்டு பதறி துடித்து ஓடி வருகிறான். 

அண்ணனின் காலில் விழுந்து, திரும்ப வந்து ராஜ்ஜியத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று மன்றாடுகிறான். ராமன் அவனை சமாதானப் படுத்தி திருப்பி அனுப்பும் போது, ராமனின் பாதுகைகளை பெற்றுக்கொண்டு அவற்றை தன் சிரசில் சுமந்து கொண்டு அயோத்தி திரும்புகிறான். 

அதை அரியணையில்  வைத்து நாட்டை நிர்வாகம் செய்கிறான். ராமன் திரும்ப வரும்வரை ஒரு துறவியை போல் வாழ்கிறான். பாசத்திற்கு முன் ராஜ்ஜியம் பதவி எதுவுமே பெரிதில்லை என நிரூபிக்கிறான். 

ராமனோ இதற்கு ஒரு படி மேலாக நின்று, தன் தம்பிகளின் மேல் பாசம் பொழிவதல்லாமல், குகனையும் கட்டி தழுவி நாங்கள் நான்கு பேர், உன்னையும் சேர்த்து இப்போது ஐந்து பேர் என்று தன் தம்பியின் ஸ்தானத்தை குகனுக்கு தந்ததும், கல்லாய் சமைந்திருந்த அகலிகையின் மேல் கால் வைத்து அன்னை என்று அழைத்து தாயின் ஸ்தானத்தை தந்ததும், அனுமனையும், சுக்கிரிவனையும்  கட்டி தழுவி நட்பு பாராட்டியதும், அங்கதன் மேல் அன்பு காட்டியதும், விபிஷனனையும் தங்களில் ஒருவனாய் ஏற்றுக்கொண்டதும், சபரியின் நேசத்தை அங்கிகரித்ததும், ராமனை அன்பின் இலக்கணமாய் காட்டுகிறது. 

தாயினும் சாலப் பரிந்து என்று இறைவனின் அன்பைப்பற்றி கூறுவார் அப்பர் பெருமான். 

அதைப்போல ராமனின் அன்பு தாயன்பை விட மேலானதாகவே இராமாயண காப்பியத்தில் சித்தரிக்கப் பட்டிருக்கிறது. 

இந்த இரண்டு இதிகாசங்களில் மகாபாரதம் முடிவில் ஒருவித சோகத்தை வெறுமையை நம் நெஞ்சில் நிழலாட வைக்கிறது. ராமாயணம் ராமனின் பட்டாபிழேகத்துடன் சுபமாய் முடிந்து ஒரு நிம்மதி பெருமூச்சை எழுப்புகிறது. 

இந்த கதைகளை பற்றி நாம் பேச காரணமே.... அன்பு மகத்தானது. உறவுகளை ஒன்றிணைக்க வல்லது. எத்தனையோ நம் குடும்பங்களில் அண்ணன் தன்பிகள் எதிரிகள் போல் பிரிந்து கிடக்கின்றனர்.

சகோதர சகோதரிகள் ஒருவருக்கொருவர் வெறுப்புடன் நடந்து கொள்கின்றனர்.

இப்படி வெறுப்பினால், சண்டையினால் உடைந்து பிரிந்து போன உள்ளங்களை ஒட்டவைக்கும் சக்தி அன்பிற்கு மட்டுமே உண்டு.


இந்த பிறவியில் நாம் அவர்களோடு ஒன்றாக வாழும் பாக்கியம் நமக்கு கிடைத்திருக்கிறது. இறந்த பின் யாருக்கு யாரோ....

ஒரு தாயின் கருவறையில் பிறந்து, ஒன்றாய் வளர்ந்த உள்ளங்களுக்குகிடையே வெறுப்பினை வளர்த்துக் கொள்ளாதீர்கள்.

மன்னிப்பு கேட்பவன் பெரிய மனிதன். மன்னிக்க  தெரிந்தவன் அதைவிட பெரிய மனிதன் என்பார்கள்.

நம்மால் மன்னிக்கப்பட வேண்டியவர்கள் பலர் இருப்பார்கள். நாம் மன்னிப்பு கேட்க வேண்டியவர்கள் அதைவிட அதிகமாக இருப்பார்கள் என்பதை நினைவில் வையுங்கள்.

சந்தர்ப்பம் வரும்போது சரி செய்து  கொள்ளுங்கள். உறவினை புதுப்பித்து கொள்ளுங்கள்.

நான் மனிதர்கள் என்பதை எப்போதும் ஞாபகத்தில் இருத்திக் கொள்வோம். உயர்ந்த மனிதராக வாழ்வோம்.

-  மதிவாணன்

Thursday 22 November 2012

கசாப்பிற்கு மரணதண்டனை சரியா?



கசாப்பிற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு விட்டது.  

கசாப் யார் என்பது தெரியும். அவரின் குற்ற பின்னணி என்ன என்பது தெரியும். இருப்பினும் கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்பது  போல், ஈவு இரக்கமற்ற முறையில் மரணதண்டனை விதிப்பது தவறு. 

மனிதநேயத்தை விரும்பும் எவரும், நாகரீக சமூகத்தை விரும்பும் எவரும், இது போன்ற கொடூர தண்டனையை விரும்ப மாட்டார்கள் என்று சிலர் வாதிடுகிறார்கள். 


நல்லது. 

நல்ல கருத்து தான்.  நாமும் இதை வரவேற்போம். மனிதன் மனிதனை கொல்வது தவறுதான். 

தவறு செய்தவர்களை தண்டிக்க சட்டத்தில் எத்தனையோ வழிகள் இருக்கிறது என்பதும் உண்மைதான். 

பெரும் குற்றம்  செய்தவர்களை வாழ்நாள் முழுவதும் கூட, தனிமைச் சிறையில்  வைத்து தண்டிக்கலாம் என்பதும் உண்மைதான். 

ஆனால் இந்த  மனித நேய   காவலர்கள் ஒரு விஷயத்தை   உணர மறுக்கிறார்களே ஏன்? 

மனித உயிர்களின் மகத்துவத்தை பற்றி பேசும் போது, மறக்கப்படுவது மனிதநேயம் என்பதை ஏன் மறந்து விடுகிறார்கள். 

இறந்து போனவர்கள் மனிதர்கள் இல்லையா? அவர்களுக்கு என்று குடும்பம் இல்லையா? 


ஒரு உயிர் பிரிகிறது என்றால் அவரை நம்பி இருக்கும் எத்தனை பேர் ஆதரவற்று போகிறார்கள்.  அந்த அவலத்திற்கு என்ன பதில்?

இந்த சம்பவத்தை கண்டிக்கிறோம். வன்மையாக கண்டிக்கிறோம் என்று அறிக்கை விட்டு விட்டு போய்விட்டால் போதுமா. யாருக்கு வேண்டும் உங்கள் அனுதாபம். கொண்டுபோய் குப்பை கூடையில் போடுங்க. 


இது என்ன எதேச்சையாக நடந்த ஒரு சம்பவமா?

கல்குவாரிக்கு வெடிமருந்து கொண்டு செல்லும்போது எதிர் பாராமல் வெடித்த கதையா?

திடிரென நடத்து விட்ட ஒரு விபத்தா? 

இல்லையே... பலவருடம் திட்ட மிட்டு, குழுவாக செயல்பட்டு நடத்தப்பட்ட கொடுரம்தானே இது.  அதுவும் அந்நிய நாட்டில் இருந்து ஊடுருவி.

அதே சமயம்.......இன்னொரு பக்கம் வேறு விதமான செய்திகள் வருகிறது.  அவர் ஹீரோ.  அவர் வரலாற்றில் இடம் பெற்று விட்டார். புனித போரின் போராளி என்றெல்லாம் புகழாரம் சூட்டுகிறார்கள். எல்லைக்கு அப்பால் இருந்து. 

மனிதநேய புனிதர்கள் பதில் சொல்வார்களா? 



இன்னும் மனித உயிர்களை கொல்ல இப்போதே பலரை தயார்  படுத்துகிறார்களே   இதற்கு உங்கள் பதில் என்ன? 

அதற்கும் கண்டிக்கிறோம், வன்மையாக கண்டிக்கிறோம் என்பது தான் உங்கள் பதிலா?

கசாப் யார்?

அந்நிய நாட்டு கைக்கூலி.  இந்திய நாட்டின் இறையாண்மைக்கு சவால் விட வந்தவர்.  இந்த தேசத்தின்  பாதுகாப்பை உலக அரங்கில் கேள்வி குறியாக்கியவர்.

ஒன்றும் அறியாத அப்பாவிகளை கொன்று குவித்து வெறியாட்டம் போட்டவர். இதுபோன்ற குற்றவாளிகளை இவ்வளவு நாள் வைத்திருந்ததே தவறு. இந்தியா போன்ற ஜனநாயக  நாட்டில் மட்டும் தான் இது நடக்கும்.

பாகிஸ்தானை விட்டு வரும்போதே  கசாப்பிற்கு தெரியும் . நாம் சாகப்போகிறோம் என்று.

மூளைசலவை செய்து, மனநோயாளியாக்கி கொல்... கொல்... என்று கட்டளையை பெற்று வந்து கொடூர தாண்டவம் ஆடிய கசாப்பை கசாப்பு கடைக்கு அனுப்பி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அப்போதுதான் உயிர் வலி என்ன என்பது புரிந்திருக்கும். கண நேரத்தில் கண் மூடிய கசாபிற்கு கொடுக்கப்பட்டது தண்டனையே இல்லை.

இன்றும் தீவிரமான மத சட்டங்களை கடைபிடிக்கும் அரபு தேசங்களில் குற்றத்தின் தன்மை கருதி மரண தண்டனை நிறைவேற்றப் படுகிறது.

காரணம்... மனித நேயமற்ற செயல் அல்ல. குற்றத்தின் தீவிரத்தை குறைக்க. மீண்டும் இது போன்ற குற்றங்களை யாரும் செய்யக்கூடாது என்பதற்காக.

கசாப்பிற்கு வழங்கப் பட்ட தண்டனை கூட அந்த ரகம் தான்.

Wednesday 21 November 2012

கசாப்புக்கு தூக்கு சரியா?



நாட்டின் வர்த்தக தலைநகர், மும்பைக்குள் நுழைந்து, ஈவு இரக்கமின்றி, 166 பேரை கொன்று குவித்த, பாகிஸ்தானின், லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாதிகளில், உயிருடன் பிடிபட்ட அஜ்மல் கசாப்புக்கு, 25, புனே நகரின், எரவாடா சிறையில் நேற்று முடிவுரை எழுதப்பட்டது.- செய்தி. 

நாகரிகமான மனித சமுதாயத்தை விரும்பும்  உலகில் ஈவு இரக்கமற்ற மரணதண்டனைகள் தேவையா என்று கேள்வி எழுப்புகிறார்கள் ஒரு சாரார். 

இதை பற்றி ஒரு விரிவான கட்டுரை இன்று இரவு  வெளிவரும். 

சின்ன சின்ன யோசனைகள்!


புக் செல்ப்புக்ளில் பூச்சிகள் தொல்லயா? பாச்சா உருண்டைதான் போடவேண்டும் என்பதில்லை.  வீட்டில் கர்ப்பூரம் இருந்தால் போட்டு வையுங்கள். பூச்சிகள் மாயமாய் மறைந்து போகும். 

என்னதான் பல் துலங்கினாலும் பற்களில் கரை போகவில்லையா? புதினா, எலுமிச்சை தோல் இது இரண்டில் எதையாவது ஒன்றை நன்கு காய வைத்து  பொடி செய்து, அந்த பொடியுடன் உப்புத்தூளுடன் சேர்த்து பல் துலக்கி பாருங்கள். பற்கள் பளிச்...

மல்லிகை, முல்லை செடிகள் நன்கு செழித்து வளர வில்லையா? அவற்றின் இலைகளை உருவி அந்த செடிக்கே உரமாக போட்டால் செடி செழித்து வளரும். 

கைக்குழந்தைகள் இரவில் தூங்காமல் அழுது கொண்டிருந்தால் 1 /2 மேசைக்கரண்டி தேன் கொடுத்தால் நன்கு தூங்கும்.

அருகம்புல்லை சுத்தமாக கழுவி வாயில் போட்டு நன்றாக மென்று பல்வலி உள்ள இடத்தில் அடக்கி வைத்து கொண்டால் பல்வலி குறையும்.


பெண்களுக்கு ஏற்ப்படும் பல நோய்களுக்கு வாழைப்பூ சிறந்த மருந்தாகும், வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்து கொள்வது நல்லது.  ஆண்கள் வாழைத்தண்டை சமைத்து உண்ண வேண்டும்.

அதிக நார் சத்த்துள்ள வெங்காயத்தை அதிக அளவு உணவில் சேர்த்து கொள்வதால், ரத்த அழுத்தம் வராமல் தடுத்து கொள்ளலாம். உடலில் வெப்பத்தை குறைக்கிறது. மலச்சிக்கல்  வரமால் தடுக்கும்.

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சண்ட காய்ச்சி பால் சக்கரை சேர்த்து காலை மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு நீங்கும்.

அடிக்கடி நாவறட்சி ஏற்ப்பட்டு தண்ணீர் குடிக்க வேண்டும் போல் இருக்கிறதா.  கொஞ்சம் துளசி இலையை பறித்து நன்றாக மென்று விடுங்கள். நாவறட்சி மட்டுப்படும்.

வாழை தண்டை சுட்டு அதன் சாம்பலை எண்ணையில் கலந்து தீப்புண், சீழ்வடிதல், மற்றும் ஆறாத காயங்கள் மீது தடவி வந்தால் காயங்கள் விரைவில் குணமாகும்.

உங்கள் வீட்டு தோட்டத்தில் ஒட்டு கொய்யா, மா, சப்போட்டா போன்றவை வாங்கி வளர்க்கிறிங்களா? முதல் வருடம் பூக்கும் பூக்களை உருவி விட்டு விடுங்கள். அடுத்த வருடம் அமோகமாய் காய்க்கும்.


Monday 19 November 2012

மகாமேரு- 2



இப்போது....!

முத்தி தரும் சக்தி பீடத்தை பற்றி தெரிந்து கொள்ள, யுகங்கள் பல கடந்து செல்லப்போகிறோம். 

இது கலியுகத்தில் இருந்து பின்னோக்கி நகர்ந்து, இதிகாச காலத்தை கடந்து, புராண காலத்தை தாண்டி, அதற்க்கு முந்தைய நிலைக்கு செல்லப்போகிறோம்.

செல்வோமா?

அப்போதுதான் இந்த பிரபஞ்சம் தோன்றியது எப்படி? திருஷ்ட்டிகர்த்தாக்கள் யார்? உயிரின உற்பத்தியின் காரணம் என்ன? என்றெல்லாம் அறிந்து கொள்ள முடியும். 

இந்த ஆய்வு விரிந்து கொண்டே செல்லும் விண்வெளி போன்றது. இதற்கு முடிவே இருக்காது.


அதனால் மிக சுருக்கமாக கோடியில் ஒரு பங்கை கோடிட்டு பார்க்கப் போகிறோம். 

முதலில்...

உலக இயக்கத்தை பற்றியும், உற்பத்தி துவக்கத்தை பற்றியும் தெரிந்து கொள்ளும் முன், ஒரு சில வரிகள். இந்த பிரபஞ்சம் பஞ்சபூதங்களால் ஆனது. இந்த பஞ்சபூத சக்திகள் தனித்தும், பிரிந்தும் செயல்படுகிறது. அது செயல் படும் இடம் விண்வெளி.



அது முடிவே இல்லாத பரவெளி. அந்த பரவெளியை ஆள்பவரை பற்றி இருவேறு தகவல்கள் உண்டு. 

நாம் வாழ்வது பூமியில். இதில் யாருக்கும் சந்தேகம் வராது. ஆனால் இது உண்மையிலை. புராண தகவலின் படி பூலோகத்தில் வாழ்கிறோம்.

பிரம்மலோகம், சத்தியலோகம், இந்திரலோகம்,நாகலோகம்,நரகலோகம், சொர்க்கலோக வரிசையில் வருகிற ஈரேழு பதினாலு லோகத்தில் பூலோகத்தில் வாழ்கிறோம்.  

அதாவது பூமியின் மேற்பரப்பிலும், விண்வெளியின் ஆரம்ப முனையிலும் வாழ்கிறோம். இதுதான்  பூலோகம். 

விண்வெளியில் எப்படி பஞ்சபூத சக்திகள் தனித்தனியே செயல்படுகிறதோ, அதைப்போல, பூலோகத்திலும் பஞ்சபூத சக்திகள் ஒன்றிணைந்து செயல்பட்டு உற்பத்தி செய்யும் பிரம்மலோகமாக செயல்படுகிறது.. உற்பத்தி என்பது உயிரின உற்பத்தி.

இப்போது நான் சொல்லும் தகவல், மேலோட்டமாக ஆன்மீகம் அறிந்தவர்களுக்கும், ஒரு சில சமய நூல்களை படித்தவர்களுக்கும், மாறப்பட்ட தகவலாக தோன்றும்.ஆனால் இப்படி ஒரு தகவல் இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

அது இதுதான்.

பரபிரம்மா. இவர்தான் கோலங்களாய் சுற்றும் கோள்களையே உற்பத்தி செய்தவர். ஆதியில் அனாதியாய் தோன்றியவர். மூவர்கள் என்று போற்றப்படும் மூலங்களுக்கு எல்லாம் முன்னுரை எழுதியவர்.

பரபிரம்மா.


பர என்றால் எலாவற்றிற்கும் அப்பாற்பட்டது என்று பொருள். பிரம்மம் என்றால் உற்பத்தி என்று பொருள். இவர் விஸ்வகர்மா என்று போற்றப்படுகிறார்.

ஐந்து முகங்களும், பத்து கரங்களுடன் தோன்றியவர். இவர்தான் முழுமுதல் கடவுள். இவரின் ஐந்து முகங்களை சத்யோஜாத, வாமதேவ, அகோர, தத்புருஷ, ஈசானம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஐந்து முகங்களும் மேற்கு, கிழக்கு, தெற்கு, வடக்கு திசைகளையும், ஈசான முகம் மேல் திசையை குறிக்கும் விதமாகவும் அமைந்து உள்ளது.


இவரோடு தோன்றிய பெண்தான் விஸ்வகர்மினி என்கின்ற காயத்ரி.



இவர்கள் ஒன்றிணைந்து பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், இந்திரன், சூரியன் என்ற ஐந்து தேவர்களை ஈன்றனர்.

இவர்களுக்கு துணையாக சரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதி, இந்திராணி, சவிதாதேவி என்ற ஐந்து பெண்களை ஈன்று, உடன் பிறப்புக்களான இவர்களை உருமாற்றம் செய்து, உணர்வுகளை மாற்றி கணவன்  மனைவியாக மாற்றியதாக சொல்லப்படுகிறது.

இவர்கள் மூலம்தான் பஞ்சபூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் சக்திகள் இயக்கப்படுகிறது.

இவர்களிடம்தான் ரிக், யசூர், சாம, அதர்வண, வேதமும், பிரணவ என்னும் ஐந்தாம் வேதமும் அடக்கம்.

ரிக், யசூர். சாம, அதர்வண வேதம் நமக்கு  தெரியும். ஆனால் பிரணவ என்னும் வேத சூத்திரம் பிரம்மாவிற்கு உரியது. இது உற்பத்தி செய்யும் சூச்சமங்கள் அடங்கியது. மூச்சு தொடர்பான ரகசியம் பொதிந்தது. இப்படித்தான் போகிறது முதல் தகவல்.

ஆனால் இரண்டாவது தகவல் வேறு.

தொடரும் .....

இதன் முதல் பகுதியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் 

பலிகிடா!!



ஏதாவது ஒரு பிரச்சனை. வில்லங்கம், விவகாரம் என்றால், அதில் சமந்தப் படாத நபர் சொல்கிற முதல் வார்த்தை.. இதில் நான் தான் பலிகிடாவா?

இந்த சொல்வழக்கு எப்படி வந்தது தெரியுமா?   தெரியாவிட்டால் தெரிந்து கொள்ளுங்கள்.


மேஸபடோமியா என்ற ஆதி நாகரீகம் முளைத்த பகுதியில் வாழ்ந்த மக்கள் செய்த சாதனை என்ன தெரியுமா? 

அந்த காலத்தில் யூதர்களிடம் ஒரு பழக்கம் இருந்தது. வருடத்தில் ஒரு நாள் நன்றாக கொழுத்த ஆட்டுகிடாவை பிடித்தது வருவார்கள்.

எதற்கு?

அந்த ஊர் மக்கள் எல்லாம் தாங்கள் செய்த பாவத்தை போக்கி கொள்வதற்காக.

புரியலையே....!

அதாவது பிடித்து வந்த ஆட்டை ஊரின் மத்தியில் கட்டி வைப்பார்கள். அந்த ஊரில் உள்ள மக்கள் எல்லாம் அந்த வருடம் தாங்கள் செய்த பாவத்தை எல்லாம் அந்த ஆட்டின் மீது சுமத்துவார்கள்.

இப்போது அந்த பாவப்பட்ட ஆடு பரிதாபமாக முழித்து கொண்டு நிற்கும் போது, இவ்வளவு பாவங்கள் செய்த ஆட்டிற்கு தண்டனை தருகிறேன் என்று பூசாரி ஆட்டிற்கு தண்டனை தருவான்.

தண்டனை... ஒரே வெட்டு.

இப்படிதான் இந்த சொல் வழக்கத்திற்கு வந்ததாம். பாவம் பலி கிடாக்கள்.  இந்த ஆடுகள் எப்படி வீட்டு பிராணியாக வந்தது என்று தெரியுமா?


மேஸபடோமியா என்ற ஆதி நாகரீகம் முளைத்த பகுதியில் வாழ்ந்த மக்கள் தான்,  காட்டில் இருந்த ஆட்டை வீடு விலங்காக மாற்றிய பெருமைக்கு உரியவர்கள்.  

இது ஓன்று குத்துமதிப்பான குண்டு அல்ல. தொல்பொருள் ஆய்வு நூல் கூறுகிறது.

அதன் பின் ஈரான் ஈராக் நாடுகளில் தான் ஆடுகள் வளர்க்கப்பட்டன என்கிறது வரலாறு. 

- மதிவாணன் 

Sunday 18 November 2012

ஆளப் பிறந்தவனே ஓடிவா !!


வாழ்க்கையில் என்னங்க வேணும்?

நிம்மதி வேணும், சந்தோசம் வேணும், அதோடு வேண்டியது வரணும், விரும்பியதை பெறனும்.  

போதுமா?

இன்னும் இருக்கே... ஊருக்காக உழைத்து ஓடா தேயுறதை விட, நமக்காக உழைத்து, நம்மை சார்ந்தவர்களை வாழவைக்கணும்.

அப்பறம். 

அடுக்கு மாடி கட்டலைன்னாலும், அடக்கமா ஒரு வீடு,

படகு மாதிரி இல்லைன்னாலும் பயணம் செய்ய ஒரு காரு,

அடடா.. அப்பறம்..!

அன்பா இருக்கிற மனைவி, அழகா ஒரு பொஞ்சாதி.

ஒ... ஒன் பிளஸ் ஒன்னா?

ஐயையோ... ரெண்டும் ஒன்னுதாங்க.

சரி..இன்னும் உங்க கிட்டே இருந்து எதிர்ப்பார்க்கிறேன். சொல்லுங்க.

கார்ல  ஊரை சுத்தணும்..  கொஞ்சி  பேசுற பொஞ்சாதி பக்கத்திலே இருக்கணும்.

பிரமாதம்... பிரமாதம்

A.T.M மிஷீன் வீட்டிலே இல்லைன்னாலும், தேவைக்கு ஏற்ப பணம் தேடி வரணும்.

நியாயமான கோரிக்கைதான் அப்பறம்.

அப்பறம் என்ன என்ன அப்பறம்.  நாமளும் அழுது    நம்மை சார்ந்தவர்களையும் அழவைக்காத ஆரோக்கியம் வேணும். அதோட நீட்டி படுத்தா நிம்மதியா தூக்கம் வர்ற மாதிரி பிக்கல் புடுங்கல் இல்லாத வாழ்க்கை வேணும்.

நல்லது. நல்லவரான உங்களுக்கு நல்லதே நடக்கும். வருவதும் பெறுவதும் நல்லதாவே இருக்கும். அதுக்கு கடவுள் துணை கண்டிப்பா இருக்கும். நானும் பிராத்திக்கிறேன்.

அப்பறம்... நீங்க நல்லவரா இருந்தால் மட்டும் போதாது.வல்லவராவும் இருக்கணும்.

அதுக்கு என்ன செய்யணும்?

ஆக்க பூர்வமா சிந்திக்கணும். அறிவுபூர்வமா செயல்படனும். தோல்வி வரும் வழியை தொடந்து கவனிக்கணும்.

அடுத்து...

ஏறி வந்த ஏணியை மிதிப்பதும், மற்றவரை ஏளனமாய் பார்ப்பதும் தப்பு.

சரி..!

ஒருத்தன் ஏழையாய் இருக்கிறான் என்று ஏளனமாய் பார்க்காதே. எந்த பிறவியில் என்ன  பாவம் செய்தானோ, இந்த பிறவியில் இல்லாமல் தவிக்கிறான். அவனிலும் உயர்ந்த வாழ்க்கையை கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்.

சொல்றேன்..

வஞ்சனை செய்வதும் தவறு, நிந்தனை செய்வதும் தவறு.

செய்தால்?

வினை விதைத்தால் வினையை அறுக்கணும், தினை விதைத்தால் தினையை அறுக்கணும்.

வேண்டாம் சாமி... வேண்டாம்.

நல்லது.


சக்திக்கு மீறிய செயல்களில் புத்தியை செலுத்தாதே.

செலுத்தினால்?

பாதை மாறிய பறவை மாதிரி, வண்டியை தவறவிட்ட பயணி மாதிரி தவிப்பாய்..அதனால்  உள்ளதை வைத்து நல்லது செய்.

ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் போங்கோ. அடுத்து.


நீ முதலாளியா?

சந்தோசம். வேலைக்காரன் வியர்வை காயும்முன் சம்பளம் கொடு. இல்லாவிட்டால் உனக்கு கூலி குடுக்க நாள் குறிக்கப்படும் மறந்து விடாதே.


நீ வேலைக்காரனா?

உழைக்காமல் பிழைக்க நினைத்தால்..இருப்பவன் கொடுக்கிறான்,இல்லாதவன் பெறுகிறேன் என்று தத்துவார்த்தமாக யோசித்தால், ஒன்றை பெறுவாய்... வேறு ஒன்றை இழக்க வேண்டிவரும். காத்திரு.

ஐயோ..


மாற்று கருத்தை அறியும் முன் மனதை திறக்காதே.

திறந்தால்?

நீ யார் என்பது அவர்களுக்கு தெரிந்து விடும்.

நல்லது அப்பறம்...!

அதற்காக பேச வேண்டிய தருணங்களில் அமைதியாக இருந்து விட்டால், அமைதியான தருணங்களில் நிம்மதியாக இருக்க முடியாது.

அற்புதம்... அப்பறம்..!


எந்த வகையிலாவது சந்தர்ப்பம் மனிதனை சந்திக்கும். சிந்திக்காமல் விட்டு விட்டால்?

விட்டு விட்டால்?

உழுகிற நேரத்தில் ஊருக்கு போனால் அறுக்கிற நேரத்தில் அருவாள் தேவையில்லை.


கடந்த காலங்களுக்காக வருந்தாதே. அது வரும் போகும். எதிர்காலத்திற்காக திட்டமிடு. எப்போதும் ஜெயிக்கிற இடத்தில் இருப்பாய்.

உண்மை.. உண்மை...!


என் நண்பர் மதிவாணன் சொல்வது போல், காலை உணவு உண்பதற்கு முன், கடவுளுக்கு நன்றிசொல். உன்னை போல் மற்றவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்று பிராத்தனை செய்.

ஏற்று கொள்கிறேன். அடுத்து.

குறுப்பிட்ட இடைவெளியில் உணவு உட்கொள். பசித்திருக்கும் போதே ருசிப்பதை நிறுத்து.

நிறுத்தினால்?

வைத்தியன் வீட்டுக்கு வருவதை தவிர்க்கலாம்.


ஒவ்வொரு  இரவும் மரணத்திற்கான ஒத்திகை என்பதை மறந்து விடாதே. அதனால் இன்று நம் வாழ்வின் கடைசி இரவு என்று நினைத்து சந்தோசமாக உறங்கு.

நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு   உண்மை... விழித்தால் உயிர் பிழைத்தால் எல்லாம் வரும். சொந்தம் பந்தம் சொத்து சுகம்.எல்லாம்.

புரிஞ்சா சரி.

பயமற்ற வீரனை போலவும், பாசாங்கற்ற குழந்தையை போலவும், நட.. இரு. உலகம் உன்னை விரும்பும். மதிக்கும்.


சத்திய வார்த்தை.

கடைசியாக ஓன்று... பழைய செருப்பை கழட்டி எரிவது போல்,படுக்கையை விட்டு எழு. உற்சாகமாய் உழை. உண்மையை விரும்பு, உண்மையாய் இரு.

இருந்தால்?

எட்டி ஓடும் காலத்தை கட்டி இழுத்து வரலாம். நீ ஜெயிப்பாய்.










Saturday 17 November 2012

பில்லி சூனியம் செய்வினை கோளாறுகள் அகல!


narasimmar
சிங்கமுகம், மனித உடல், பார்ப்பதற்கு பயம் காட்டும் கோரை பற்கள் கொண்டவர்தான் நரசிம்மர். 

அவதார நாயகன் விஷ்ணு பகவான் எடுத்த அவதாரங்களில் இவருக்கென்று தனி சிறப்பு உண்டு. 

அப்படி என்ன சிறப்பு?

சொல்றேன். தெய்வ தரிசனங்கள் எப்போது கிடைக்கும். தவம் செய்த பிறகும், பிராத்தனைகள் செய்த பிறகும் கிடைத்ததாய் புராணங்கள் சொல்கிறது. 

அதாவது மேலான பக்தி கொண்டவர்களுக்கு மட்டும். அதனால் தான் ரிஷிகள், ஞானிகள், முனிவர்கள் அந்த பாக்கியத்தை பெற்றார்கள். 

ஆனால் எந்த வேண்டுகோளும் இல்லாமல், வேண்டுதலும் இல்லாமல் ஒரு சிறுவனுக்காக வந்த அவதாரம் தான் நரசிம்மம். 

ஹிரண்ய கசிபுவின் கோவமான கேள்விக்கு பதில் சொன்ன பிரகலாதன், நான் வணங்கும் ஹரி...  தூணிலும் இருப்பார் , துரும்பிலும் இருப்பார் என்று நம்பிக்கையோடு சொன்னான். 

narasimmar and hiranya hasipu
அந்த நம்பிக்கையை மெய்யாக்க தூணில் இருந்து வெளி வந்தவர்தான் நரசிம்மர்.

பைரவர், சக்கரத்தாழ்வார் போன்று நரசிம்மரும் பக்தர்க்களுக்கு பாதுகாவலானாக இருக்கிறார். இவரை வணங்க எந்த தயக்கமும் தேவையில்லை. நம்பிக்கை ஒன்றே பிரதானம். 

pairavar


sutharsanam
பார்ப்பவர்களுக்கு பயம் காட்டும் உருவமாக இருந்தாலும் தன்னை நாடியவர்களுக்காக ஓடிவருபவர்தான் நரசிம்மர்.

சிங்கம் குருர குணம் கொண்ட கொடூர விலங்குதான். பசி என்று வந்தால் எந்த விலங்காக இருந்தாலும் கொன்று தின்னும் குணம் கொண்டதுதான். ஆனால் அந்த கொடிய சிங்கத்தினுள்ளும் ஒரு மென்மையான மனம் உண்டு. 

தான் ஈன்ற குட்டிகளிடம் கடுமை காட்டுவதில்லை. கொஞ்சி விளையாடும், துள்ளி ஓடி விளையாட்டு காட்டும். 

அதுபோல் தான் நரசிம்மரும். அரக்கர்களுக்கு, அநீதி இழைப்பவர்களுக்கு, நயவஞ்சக பேர்வழிகளுக்கு எமனாக இருக்கும் நரசிம்மர், தன்னை வணங்கும் பக்தர்களுக்கு இனியவர். 

சிவ ரூபங்களில் பைரவர் ஆலய பாதுகாப்பிற்கு உரியவர். கோவில் நடை சாத்த பட்ட பிறகு, இவரிடம் கோவில் சாவியை வைத்து பிராத்தனை செய்து விட்டு செல்வது ஆதிகால பழக்கம்.

ஆனால் இன்று பைரவர் வழிப்பாடு குறைந்து விட்டது. காரணம் கபாலிகா வழிபாடு என்று சொல்லி கொண்டு நரமாமிச படையல் போடும் அகோரிகளால் இந்த வழிபாடு குறைந்து விட்டது.

அவர்கள் பைரவரை தான் வணங்குகிறார்கள். பைரவருக்குத்தான் மாமிச படையல் செய்கிறார்கள்.

இந்த பைரவர் ஆலய பாதுகாப்பிற்கு உரியவர் என்றால், ஆலயத்திற்கு கும்பாபிழேகம் செய்யும் போது, மூலவிக்கிரகங்களை எடுத்து பின் மருந்திட்டு பிரதிஷ்ட்டை செய்யும் போது நரசிம்ம மந்திரம் சொல்லித்தான்  செய்வார்கள்.

சரி.. நரசிம்மரை வழிபட்டால் கிடைக்கும் நன்மை  என்ன?

எந்த நிலையிலும் பில்லி, சூனியம், செய்வினை கோளாறுகள் உங்களை தீண்டாது. உங்கள் ஜாதகத்தில் ராகு திசையோ, கேது திசையோ நடந்தால் இது போன்ற மாந்திரிக கோளாறுகள் பாதிக்க இடம் உண்டு.

அதனால் ராகு கேது திசைகள்  நடந்தால் நரசிம்ம வழிபாடு செய்யலாம்.

உங்கள் வீட்டில் துஷ்ட்ட சத்திகள் இருந்தாலோ, உங்கள் வீட்டில் துர்மரணங்கள் நடத்து ( மருந்து குடித்தல், தூக்கு மாட்டி கொள்லுதல், கொலை போன்ற சம்பவங்கள் ) இருந்தாலோ அதனால் எந்த பாதிப்பும் வராது.

எதிரிகள், எதிர்ப்புகள், பொய்வழக்கு தொல்லைகள், புனைகதைகளால் பாதிக்கப்படும் சூழல் இவற்றை முற்றிலும் விலக்கும்.

ஜய ஜய நரஸிம்ஹாய ஸர்வக்ஞாய 
மஹாதே ஜோபல வீர்யாய சுவாஹா 


ஐம் கிலீம் ஸ்ரீம் ஹும்பட்


நரசிம்ம வழிபாடு  செய்து நலம் பெற வாழ்த்துகிறோம்.



Friday 16 November 2012

மங்கையர்களே உங்களுக்காக!



ஆள்பாதி ஆடை பாதி. ஆடை இல்லாத மனிதன் அரைமனிதன். இவை எல்லாம் உடைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பழமொழிகளாகும். 

உடுத்தும் உடை ஒருவரின் தோற்றத்தை உயர்த்தி காட்டுகிறது. இன்று வேலை வாய்ப்பிற்காக நேர்முக தேர்வுக்கு போகும் போது கூட, உடையின் நேர்த்தியையும் கவனிக்கிறார்கள். 

கோட்சூட் போட்டிருந்தால் உயர் அதிகாரி. டை கட்டியிருந்தால் உயர் பதவியில் இருப்பவர். சட்டையை இன் செய்து உடுத்தி இருந்தால் பெரிய படிப்பு படித்திருக்கிறார். 

காவி கட்டி இருந்தால் சாமியார். வேஷ்டி சட்டை போட்டிருந்தால் சாதாரண நபர் என உடையை ஒட்டிய கருத்து பார்ப்பவர் உள்ளத்தில் உடனே பதிவாகிறது. 

சில விதி விலக்கு இருக்கிறது. விவேகானந்தர் காவியுடன் தான் வெளிநாடுகளுக்கு சென்றார். மகாத்மா காந்தி வேஷ்டி துண்டுடன் தான் லண்டன் சென்றார். 

இருப்பினும் அவரை அரை நிர்வாண பக்கிரி என்று அவமான படுத்தினார்கள். ஆனால் இன்று உலகமே அவரை மகாத்மா என்று அழைக்கிறது.

நாகரீகத்தோடு சம்மந்தப்படுத்தி பார்க்கப்படுகிறது என்பதால் நன்றாக உடை உடுத்துவதற்கு நாம் முக்கியத்துவம் தருகிறோம்.

நிர்வாணமாகத்தான் பிறந்தோம். ஆதிகாலத்தில் மனிதர்கள் நிர்வாணமாகத்தான் வாழ்ந்தார்கள்.


காலம் செல்ல செல்ல, மனம் விசாலமடைய நாகரீக உணர்வு தோன்ற ஆரம்பிக்க நிர்வாணம் என்பது ஆபாசம் என்ற உணர்வு வந்தது.

ஆண் பெண் ஈர்ப்பு, கவர்ச்சி போன்ற விஷயங்களை மனித மனம் உணர ஆரம்பித்ததும், வித்தியாசப்படுத்தி பார்க்க ஆரம்பித்ததும், மனதிற்குள் கல்மிஷம் நுழைய ஆரம்பித்து விட்டது.

உடலின் பாகங்களை மறைத்து கொள்ள ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் இலைகளை, மரபட்டைகளை பயன்படுத்தினார்கள். பிறகு துணி உருவாயிற்று. இப்படித்தான் மனிதர்களுக்கு உடுத்திக்கொள்ளும் பழக்கம் வந்தது.


அதாவது உடை என்பது உடலை மறைத்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். அதன் பின் நாகரீகத்தை காட்டும் அடையாலாமாகி விட்டது.

வீட்டில் இருக்கும் போது உடுத்தும் உடை.  வெளியில் செல்லும்போது உடுத்தும் உடை.  கோவிலுக்கு செல்லும்போது உடுத்தும் உடை என்று நிறைய வித்தியாசங்கள் வந்து விட்டது.


நமது பாரம்பரிய உடை வேஷ்டி சட்டை சேலை போன்றவைதான். இன்று சுடிதாரும் நம் பாரம்பரிய உடையாகி விட்டது.



கோவில் வழிபாடு, திருவிழாக்கள்,திருமண நிகழ்வுகள் போன்ற சமயங்களில் இவற்றை நாம் உடுத்துகிறோம். அலுவலகத்திற்கு செல்லும் போது அவற்றிற்கு என்று தனி உடை இருக்கிறது.


அதன்படி உடுத்தி செல்லும் போதுதான் நமக்கும் மரியாதை. அலுவலக உடைகள் கூட கண்ணியத்தை, கம்பீரத்தை வெளிப்படுத்துவதாகத்தான் இருக்கிறது.

இப்போது வெளியில் வரும்போது உடுத்தும் உடை சில சமயம் உறுத்தலாய் இருக்கிறது. உடலை மறைக்க ஏற்பட்ட உடை, உடலின் கவர்ச்சியை வெளிகாட்டுகிற உடையாக மாறிவிட்டது.


இன்று சினிமாவில் வரும் நடிகைகள் துண்டும் வேண்டாம் துணியும் வேண்டாம் என்ற அளவில் தான் நடிக்கிறார்கள்.

படம் பார்க்க வரும் ரசிகனை ஈர்ப்பதற்காக செய்யப்படுகிற மாயாஜால வேலை. ஆனால் ஓவர் கவர்ச்சியோடு படம் இருந்தால், நல்ல உறவுகளோடு படம் பார்க்க முடியாத சுழல் உருவாகிறது என்பதை சம்மந்த பட்டவர்கள் உணர்வார்களா.

கவர்ச்சியாய், ஆபாசமாய் வெளியில் சென்றால், அதை நான்கு பேர் பார்க்கத்தான் செய்வார்கள். உடன் தந்தையோ, சகோதரனோ செல்லும் போது, அந்த தந்தை, சகோதரின் நிலை தர்மசங்கடத்துல்லாகும்.


உடைகளை  பற்றி பேசும் போது சற்று உணர்ச்சி பூர்வமான விஷயம்தான். என் இஷ்டம் உடுத்துகிறேன். இதற்கு கூடவா சுதந்திரம் இல்லை.

ஆணாதிக்க சமூகம் இப்படித்தான்  பேசும் என்று கூட விமர்சனம் எழலாம். அழகாக உடுத்துவது நல்லதுதான். நாம் ஒன்றும் பழைய பஞ்சாங்கம் இல்லை.

ஆனால் ஆபாசமாக உடுத்துவது உங்களுக்கே ஆபத்தை உண்டு பண்ணி விடும் என்பது உண்மை.

உங்களை பார்த்து கும்பிட தோன்றுவதும், கூப்பிட  தோன்றுவதும் உங்கள் உடை தான் என்பதை மறந்து விடாதீர்கள்.

உடையை வைத்து நம் குணத்தையும் இச்சமூகம் எடை போடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

நீங்கள் கவர்ச்சி கன்னியாய் உலா வந்தால்  உங்கள சுற்றி இருக்கும் உறவுகளுக்கும் அவப்பெயரை உண்டு பண்ணக்கூடும் என்பதை மறந்து விடாதீர்கள்

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...