ads

Monday 11 March 2013

காயத்திரி மந்திர மகிமை!!



விஷ்வாமித்திரர் ஆரம்பத்தில் கௌசிகன் என்னும் பெயருடைய அரசனாக இருந்தார். 

அப்போது வசிட்ட முனிவருடைய தவ வலிமையை கண்டு தானும் அவ்வாறு பிரம்மா ரிஷியாக வேண்டும் என்று மனதில் எண்ணம் கொண்டார். 

தனக்கென்று பெரிய நாடு, அணி, தேர், குதிரை ஆட்பெரும் படை போன்றவைகளை கொண்ட கோமகன் கௌசிகன். 

அத்தகைய மாமன்னன்  கட்டிற்க்குள் காவி கட்டி கமண்டலம் ஏந்தி, ருத்ராச்ச மணிமாலைகள் அணிந்து, அரச போகமும் அரண்மனை வாழ்வும் துறந்து தவம் மேற்கொண்டார் என்பது வரலாறு.

பிரம்ம பலத்தை பெறுவதற்காக கடுமையான தவத்தை மேற்கொண்டார். அதுசமயம் சுரியவம்சத்து அரசனான திரிசங்கு மனித உடலுடன் சொர்க்கலோகம் போக வேண்டும் என்று வசிட்ட முனிவரிடம்  வேண்டினான். 

வசிட்ட முனிவரோ அது முடியாது என்று மறுத்தார். அந்தனை கேள்வியுற்ற விஷ்வாமித்திரர் தனது தவ வலிமையால் திரிசங்குவை தேவலோகம் நோக்கி அனுப்பினார்.

திரிசங்கு மனித உடலுடன் மேலே வருவதை கண்ட இந்திரன் தனது தவ வல்லமையால் திரிசங்குவை கிழே போக செய்தான். கெளசிகருக்கு கோவம் வந்தது.  திரிசங்குவை அந்தரத்தில் நிற்க வைத்தார். 

சிரிசங்குவிற்கு தனியாக சொர்க்கம் அமைத்து கொடுத்தார். அதுதான் திரிசங்கு சொர்க்கமானது.

கௌசிகர் மீண்டும் தவத்தை தொடங்கினார். அவரது உக்கிரமான தவத்தை கண்டு தேவர்களும், அருந்தவசியர்களும், அஞ்சினர். முடிவில் வசிட்டர் விசுவாமித்திரரை அமைதிபடுத்த பிரம்மரிஷி விசுவாமித்திரரே என்று நேருக்கு நேர் அழைத்தார்.

இப்பேற்பட்ட தவவலிமையுள்ள விசுவாமித்திர மகரிஷியால் நமக்கு கிடைத்த ஞான பொக்கிஷம்தான் காயத்திரி மஹா மந்திரம்.


அஸ்திரங்களுக்குள்  வலிமைபெற்றது பிரம்மாஸ்திரம். அந்த பிரம்மாஸ்திரம் என்னும் இணையற்ற அஸ்திரங்களுக்கு காயத்ரி மந்திரமே ஆதாரம். இதனை விஷுவாமித்திரரே பிரம் தேஜோபலம் என்று  வாய் மொழிந்தார்.

இந்த காயத்திரி மந்திரத்தின் அதிதேவதை ஸ்ரீ காயத்திரி தேவி. அவரவர் சக்தி நேரம் இவைகளுக்கு ஏற்றவாறு 1008-108-28 முறை என்ற எண்ணிக்கையில் காயத்ரி மத்திரத்தை ஜெபம் செய்யலாம்.

மனதுக்குலேயே ஒரு நிலை உணர்வோடு மனனம் செய்வது நல்லது.

மனதுக்குள் ஆழ்நிலை தியானத்தில் முணுமுணுத்து ஜெபிப்பது நல்லது.

பிறர் காதில் விழும்படி உயர்ந்த குரலில் உச்சரித்து ஜெபிப்பதும்.

உயர்ந்த குரலில் ஜெபிப்பதை விட முணுமுணுத்து ஜெபிப்பதை விட மனதை ஒரு நிலைப்படுத்தி ஜெபிப்பது ஆயிரம் மடங்கு உயர்ந்தது.


ஓம் பூர்புவஸ்ஸுவ
தத்ஸவதுர்வரெனியம் 
பர்க்கோ தேவஸ்ய தீமஹி 
தியோ யோ ந 
பிரசோதயாத் 

1 comment:

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...