ads

Saturday 23 March 2013

புத்தாண்டு பலன்கள் - நட்சத்திர ரீதியாக!!



அசுவினி 

இந்த புத்தாண்டு நம்பிக்கை அளிப்பதாக இருக்கும். நமக்கு நல்ல காலம் வராதா என்ற கேள்விக்கே இடமில்லை. தொலைந்து போன சந்தோஷமும், கலைந்து போன கனவுகளும் கைகூடும்.

பரணி 

பொம்மை ராசாவாக இருந்த நிலை மாறும். சிலருக்கு சிம்மாசனமும் தேடி வரும். சொந்த வீடு வாகன யோகம் சிக்கலின்றி முடியும். உங்கள் அணுகு முறை, அதிரடி குறையாத ஆக்ஸன் இவை இரண்டுமே வெற்றியை தேடி வரும். 

கார்த்திகை 

நீண்ட நாளாய் மனதில் மையம் கொண்டிருந்த கேள்விக்கு விடை தெரியும். தோலை தூர பயணங்கள்  இனிக்கும். இதில் பக்தி மார்க்கமும் ஓன்று.  உங்கள் நலம் விரும்புவோர்கள் எல்லாம் அன்பை பொழிவார்கள். பதவியில் அங்கீகாரம் கிட்டும்.




கார்த்திகை 

இந்த புத்தாண்டில் பணம் பண்ணவும் தெரியும் அதை பயனுள்ள வகையில் செலவு செய்யவும் தெரியும். முதலில் தப்பாகி விடுமோ, தலைகிழாய் மாறி விடுமோ என்ற ஐயம் தோன்றினாலும், வழி திறக்கும், ஒளி பிறக்கும்.

ரோகினி 

திடீர் மாறுதலை சந்திக்கலாம். லாபங்கள் நஷ்டங்கலாகலாம். அந்த நஷ்டங்ககள் கஷ்டங்களை தரலாம். எதிர்ப்புகள், ஏளனங்கள் , உருட்டல், மிரட்டல்கள், அவமானங்களை இவற்றை  சந்திக்கலாம்.

அதனால் இதுநாள் வரை வரம் தந்த சாமியை சிரம் தாழ்த்தி வணங்குங்கள் துயரங்கள் குறையும்.

மிருகசீரிஷம்

இருக்கிற பணியில் நிரந்தரம், அல்லது புதிய பதவியில் அங்கீகாரம் என்பது கேள்வி குறியாக தெரியும். கனவுகள் நிறைவேறவும், லச்சியங்கள் ஈடேறவும் சிறிது அவகாசம் தேவைப்படும். என்றாலும் எதிர்ப்பார்த்த அதிஷ்ட வாய்ப்பொன்று உங்களை வந்து சேரும்.



மிருகசீரிஷம்

உங்கள் எண்ணங்களுக்கு வலு கூடும். விரையங்கள் கட்டுப்படும். எதிரிகள், கடன் தொல்லை, இனம் புரியாத நோய் தொல்லை, இவைகளில் இருந்து விடுபட்டு வியத்தகு சாதனை புரிய போறிங்க. கணவன் மனைவி ஒன்றுமை ஓங்கும். பிள்ளைகளால் பெருமை கொள்ளலாம்.


திருவாதிரை

உங்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும். வரவேண்டியது வரும். பணவசதியை இழந்ததும், மனநிமதி குறைந்ததும் இனி மாறும்.

நீங்கள் விரும்பிய வாழ்க்கை வெகு விரைவில் தேடிவரும். உங்களை சுற்றி ஒன்றும் இல்லாதவர்கள் உயர்ந்தார்கள். தகுதி இருந்தும், தனித்திறமை இருந்தும் தடுமாறிய நிலை இனி இல்லை.


புனர்பூசம்

கஷ்டகாலத்திலும் நல்ல காலம் என்பது போல், இஷ்ட தெய்வம் தான் இதுவரை காத்தது. நீங்கள் விழுந்துவிடவில்லை. இதுவரை எழுந்துவிடவும் இல்லை.  தடுமாறிக் கொண்டிருகீங்க.இனி தலை நிமிரலாம். இளைய தலைமுறையை  பற்றிய சிந்தனைக்கு இனி விடிவு காலம் பிறக்கும்.





புனர்பூசம்

உங்களது கடமைகளை மிக சரியாக முடிக்கலாம். பணம் தேவைக்கு ஏற்ற மாதிரி வந்து கொண்டிருக்கும். எல்லாம் சரியாக நடந்தாலும் சின்ன குறை ஓன்று மனதில் ஒட்டிக் கொண்டிருக்கும். உங்களின் நீண்ட நாள் கோரிக்கை ஓன்று நிறைவேறும்.


பூசம்

குடும்ப சந்தோசம் கூடும்.  உறவினர் தொல்லை, பங்காளிகள் தொல்லை இனி இல்லை. சூரியனை கண்ட பனிபோல் விலகும்.

தாம்பத்திய சுகம் குறையவோ, கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படவோ வழியில்லை.  எதிர்ப்பார்ப்பில் ஏமாற்றம் இருக்காது. எதிர்பாராத அதிஷ்ட வாய்ப்பொன்றும் உண்டு.

ஆயில்யம்

இதுவரை இருந்த இடர்பாடுகள் இனி இருக்காது.  இதுவரை கொடுத்ததை எல்லாம் கெடுத்து, கேள்வி கேட்ட உங்களை பதில் சொல்லும் நிலைக்கு உள்ளாக்கி வைத்திருந்த கால நேரம் விலகி  விட்டது.

இனி நீங்கள் நீங்களாக இருப்பிர்கள். முயற்சிகள் பலிதமாகும், முன்னேற்றம் அதிகமாகும்.



மகம்

முயற்சிகளில் தடை, முன்னேற்றத்தில் குளறுபடி, எதிர்ப்பார்ப்பில் ஏமாற்றம், வேண்டியவருடன் விரோதம், வேண்டாதர்களின் குரோதம் என்று எதிர் மறையான  பலன்கள் எதிர்பட்டாலும் சமாளித்துக் கொண்டுதான் இருப்பிங்க.

விதியை மதியால் வெல்ல முடியாமல் சதி வலையில் சிக்கினாலும், புதிய பாதை தெரிவதால் பயணத்தை தொடரலாம். தைரியமா இருங்க.

பூரம்

எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, நஷ்ட வியாபாரத்தை லாபத்திற்கு மாற்றும் முயற்சி. விரோதமானவர்களின் வீராப்பு, மிரட்டல், சங்கடங்களை சமாளித்து சரிவில் இருந்து மீள்வது, எண்ணிய காரியங்களை எளிதாய் முடிப்பது என்று தொடரும் கேள்விகளுக்கு சில சாதகமாகவும், சில பாதகமாகவும் முடியலாம். இருப்பினும்  அது உங்களை பாதிக்காது.

உத்திரம்

நீங்கள் பலவகையிலும் அலைகழிக்கப்பட்டீங்க. அன்றாட வாழ்க்கையிலும் அல்லல்கள், வரவுக்கு மீறிய செலவுகள், பதவி பற்றிய பயம்,  அந்தஸ்திற்கு  ஆபத்து வருமோ என்ற அச்சம் ஒருபுறம் நீடித்தாலும்  விட்டதை பிடிப்பதற்கும் விரும்பியதை பெறுவதற்கும் முயற்சிக்கலாம்.




உத்திரம்

குடும்ப பிரச்சனைகள் தீருமா என்பது முதல் கேள்வி, வேலை செய்யலாமா சொந்தமாக ஏதாவது செய்யலாமா என்பது மறுகேள்வி. பிக்கல்  புடுங்கல் இல்லாமல் வாழ்க்கையை எப்படி நடத்துவது என்பது இன்னொரு கேள்வி, எதிர்காலத்தை எப்படி திட்டமிடுவது என்பது மற்றொரு கேள்வி. எல்லா கேள்விக்கும் விடை கிடைக்கும்.

ஹஸ்தம் 

ஒரு இக்கட்டான நிலைதான். செலவுகள் அதிகமாகி வரவுகள் குறையும். உறவாடிய சில உறவுகள் உங்களை உதறி தள்ளலாம். 

எதையும் தள்ளி போடவும் முடியாமால், செயல்படுத்தவும் முடியாமல் ரெண்டும் கேட்டான் நிலை தொடரவே செய்யும்.  சின்ன தலைவலிக்கே பெரிய செலவுகளை சொல்லி டாக்டர் பயமுறுத்தலாம். 

சித்திரை 

திருமண வயதில் உள்ளவரா? தடையும் தாமதமும் தவிர்க்க முடியாது. கொஞ்ச காலத்திற்கு அடுத்தவர் திருமணத்தை பார்த்துதான் ஆனந்த படவேண்டி வரும். 

சில வில்லங்க விவகாரங்கள் தீர்ந்தாலும், புதிய பூதம் ஓன்று வரலாம். மற்றபடி இடமாற்றம், பதவி மாற்றம் ஏற்படவும் சான்ஸ் இருக்கு.





சித்திரை 

உங்கள் பூர்வீக பலம் குறைந்தாலும், பிள்ளைகளால் புது பிரச்சனைகள் முளைத்தாலும், பூர்வீக சொத்துக்களை ஏமாற்றி பறித்தாலும் நீங்கள் கலங்க போவதில்லை. வலிகளுக்கும் வேதனைகளுக்கும் ராஜ வைத்தியம் இருக்கு, கவலை வேண்டாம்.

சுவாதி

நீங்கள் அரசியல்வாதியா? பந்தியில் உட்கார முடியாவிட்டாலும் சந்தியில் நிற்க மாட்டிங்க. சில முடிவுகளில் உடன்பாடு இல்லாவிட்டாலும் ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் வரும்.

உங்களை பகடை காயாக்கி விளையாடியவர்கள் இனி பயந்து விலகலாம்.

விசாகம்

விரும்பியது கிடைக்காவிட்டாலும் விரும்பாத ஒன்றை விரும்ப வேண்டி வரும்.  காரணமில்லாமல் கவலை பட்டதும், வழி தெரியாமல் விழி பிதிங்கியதும் போதும் என்ற முடிவுக்கு வருவீர்கள். 

உங்கள் முன்னேற்றத்திற்க்காக இதுவரை சிறு துரும்பை கூட தூக்கி போடமுடிய  வில்லை.   இனி வரும் காலத்தில் எதை செய்யணும் அதை எப்படி செய்யணும் என்பதை புரிந்து கொள்ளலாம். 




விசாகம்

இனி தான் திருப்பங்கள் ஏற்ப்பட போகின்றன. கை விட்டு போனதும், கஷ்ட நஷ்டங்களை எற்படுத்தியதும் மாறும். வாழ்வா, சாவா என்ற நிலையில் இருந்து விடுபடபோறிங்க.

அனுஷம் 

கர்ணன் கவச குண்டலத்தோடு பிறந்த மாதிரி உங்களை காத்து ரட்ச்சிக்கும் ஆன்மீக பலம் இப்போதும் இருக்கிறது. எப்போதும் தப்பு கணக்கு போடாத நீங்கள் சரியான கணக்கை போட்டு சரிவில் இருந்து மீள்வீர்கள். 

தொழில்துறையில் அபரீதமான லாபம் வரும். ஏதாவது முக்கிய முடிவுகள் எடுக்கும் போது மட்டும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து எடுங்களேன்.


கேட்டை 

எதிர்பார்ப்பு சின்னதாக இருப்பினும் எதிர்ப்புகள் பெரிதாய் இருந்த நிலை இனி இருக்காது.  கஷ்டப்பட்டு சேர்த்த செல்வமும், செல்வாக்கும் மறைந்து செல்லாக்காசாகி விடுவோமோ என்று கடந்த காலங்களில் நடந்தவற்றை எண்ணி உள்ளம் வெதும்ப்பினீங்க. 

இனி ஒரு விதி செய்வோம் என்று சொல்லலாம் ஓகேவா.



மூலம்

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பது மாதிரி, உங்களை வெல்லவும் கீழே தள்ளவும் சில தீய சக்திகள் முயற்சித்தாலும் தெய்வ சக்தியால் வெல்லலாம்.

இது வரை ஒன் மேன் ஆர்மியாக இருந்த உங்களுக்கு, இல்லற துணையின்  ஆதிக்கம் அதிகமாகலாம். தொழில்த்துறை வளர்ச்சி  சீராக இருக்கும் கவலை வேண்டாம்.

பூராடம் 

உங்கள் தைரியம், தன்னம்பிக்கை, கூடவே பிறந்த விடாமுயற்ச்சி குறையலாம். நடக்க கூடாத எதுவும் நடந்து விடுமோ, செய்தொழில் வியாபாரம் படுத்து விடுமோ என்ற கேள்வி எழும்.  

இருப்பினும் பெரும் விலை கொடுத்தே மீள வேண்டி வரும். புதிய முயற்சிகளில் முட்டுக் கட்டை என்பது தவிர்க்க முடியாத ஓன்று.


உத்திராடம்

உங்களை உதை பந்தாக்கவும் முடியாது, உதாசீனப்படுத்தவும் முடியாது. பாதி கிணறு   தாண்டிய மாதிரி, சில காரியங்கள் அந்தரத்தில் இருந்தாலும், இந்திர லோகத்தை ஆளும் முயற்ச்சிக்கு முதல் படி தெரியும். வரவுகள் சீரடையும்.



உத்திராடம்

வருமானம் பல வகையில் வரும். வராத பணமும் வரும். இழந்த புகழ் செல்வாக்கை, மீண்டும் பிடித்து விட முடியும். குடும்ப மகிழ்ச்சி அதிகரிக்கும். விட்டதை விட்ட இடத்திலேயே பிடிக்கலாம்.

திருவோணம்

இதுவரை கண்டாதி கண்டங்கள் பலவற்றை சந்தித்தாகி விட்டது. தொழில் உத்தியோகத்தில் தேக்க நிலை, முயற்ச்சிகளில் முன்ற்றமின்மை, இனம் புரியாத பயம், எதிர்கால கேள்வி குறி என்று ஏகப்பட்ட விஷயங்கள் வரலாம். ஆனாலும் நாளடைவில் சீரடையும். திருமண முயற்சிகள் கை கொடுக்கும்.

அவிட்டம்

நீங்கள் கேள்வி நாயனாக மாறலாம். பல கேள்விகள் எழும். விட்டானா பார் என்ற வீராப்பை விட நமக்கு நல்ல பாடம்தான் என்று ஒதுங்கி இருப்பதே நலம்.

இது கஷ்டகாலம். இதுவரை குறி தவறாமல் சென்று தாக்கிய உங்கள் பிரம்மாஸ்த்திரம், இப்போது இலக்கு தவறி  உங்கள் மேலேயே விழலாம்.எதிலும் தடையும் விடை தெரியாத நிலையும் வரும்.




அவிட்டம்

நிறைய நம்பிக்கையை ஏற்படுதுகிற விதமாக ஆரம்பமாகிறது. விரக்தியின் உச்ச கட்டத்தில் சில சமயம் விபரீதமான முடிவுகளை எடுக்க வைக்கும். அவசரம் வேண்டாம். காத்திருங்கள்  கதவு திறக்கும்.

சதயம் 

விடியலை எதிர் பார்த்திருக்கும் பறவை மாதிரி சில விஷயங்களுக்காக  காத்திருக்க நேரலாம். கடன் தொல்லை, நோய் தொல்லை, பொய் வழக்கு, புனையல் கேஸ், இஷ்ட ஜன பந்துக்களின் விரோத பார்வை என்று வாழ்க்கையின் மறுபக்கத்தை சந்திக்க நேரலாம்.

இருப்பினும் தடம் மாறாமல் இருப்பீர்கள். ஜாமீன் கையெழுத்து வேண்டாம். அளவுக்கு அதிகமான நம்பிக்கை வேண்டாம். கடன் வாங்கி கடன் கொடுக்கும் முயற்சியும் வேண்டாம். 

பூரட்டாதி

பதவி, புகழ், செல்வம், செல்வாக்கு, சுற்றம், நட்பு இவற்றில் ஏதாவது ஒன்றை இழக்க நேரலாம்.  நீங்கள் விழுந்து விடுவீர்கள் என்பது நீங்களே எதிர்பாராத ஒன்றுதான். என்ன செய்ய.... விழுந்து தான் எழணும்.

புது வீடு வாகன யோகத்திற்கு வாய்ப்புகள் உண்டு. அது கடன் வாங்கி தான் காரியம் நடக்கும்.



பூரட்டாதி

புதிய அங்கீகாரம், புதிய பதவி, தகுதிக்கு மீறிய செல்வாக்கு, சுதந்திரம் எல்லாமே கிடைக்கும்.  தடைகளை மீறி வாய்ப்புகள் வரும். சிறிய அளவில் மனக்குறையும் இருக்கும்.

உத்திரட்டாதி

நம்மளை யாரும் புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறார்களே என்று ஏங்குவீர்கள். பொதுவாக உயர்வு என்பது உங்களின் ஒரு வரி மந்திரமாக இருப்பினும், தந்திரமாக காலம் கழிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. 

அதனால் வார்த்தைகளில் கவனம். செயல்களில் முழு கவனம் என்பது முக்கியம்.

ரேவதி

பெரிய மாற்றம் இல்லாவிட்டாலும் சிறிய மாற்றமாவது இருக்கும். குடும்ப குழப்பம், வீண் தொல்லைகள், வியாதிகள், விரோதிகள், பணியில் பிரச்சனை என்று பல தொல்லைகள் இருக்கும்.

அதில் சிலவற்றுக்கு தீர்வும், சிலவற்றுக்கு சமாதானமும் அடையலாம். செலவுகள் அதிகமாகும்.

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...