ads

Saturday 13 April 2013

மீண்டும் தாக்கப்பட்ட உதயன்!!




யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன்நாளிதழ் மீது இன்று அதிகாலை மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது.

துப்பாக்கிகளுடன் உள்நுழைந்த இனந்தெரியாதவர்கள் சரமாரியாகச் சுட்டபடி அச்சகத்தினுள் புகுந்து அச்சு இயந்திரத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன் பெட்ரோல்  ஊற்றி இயந்திரத்தையும் தீயிட்டுக் கொழுத்தியுள்ளனர். 

அச்சு இயந்திரம் இயங்க முடியாத அளவுக்கு பழுதடைந்திருப்பதுடன் அச்சு இயந்திரப் பெருமளவான அச்சுத் தாள்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

உதயன் நாளிதழினை முடக்கும் நோக்குடன் நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதலினால் பத்திரிகை அச்சிடும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. 

மேல் விபரம் பின்வருமாறு.

இன்று 13ஆம் தேதி  அதிகாலை 4.30 மணி அளவில் உதயன் அலுவலக வாசலுக்கு தலைக் கவசம் அணிந்தபடி வந்த மூவரில் ஓருவர் துவேஷ வார்த்தைகளால் பாதுகாப்பு ஊழியர்களை திட்டியபடி , அங்கிருந்து ஓடுமாறு விரட்டியபடி வான்நோக்கி துப்பாக்கியால் சுட்டுறிக்கிறான். . . 

அவனோடு வந்த மற்றைய இருவரும் பிரதான அச்சு இயந்திரம் வைக்கப்பட்டிருக்கும் அறைக்குச் சென்று பணியாளர்களை வெளியேறுமாறு கூறி  துப்பாக்கி காட்டி மிரட்டி இருக்கின்றனர். 

அச்சகப் பணியாளர்கள் மீதான துப்பாக்கிப் பிரயோகத்துக்கு 9மில்லி மீட்டர் பிஸ்டல்  பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. 

துப்பாக்கிச் சூட்டில் மயிரிழையில் உயிர் தப்பிக் கொண்ட பணியாளர்கள் அச்சுக் கூடத்தை விட்டுஓடித் தப்பி விட்டனர்.  



துப்பாக்கி ஏந்தி வந்தவர்கள். அச்சு இயந்திரத்தின் மீதும் பிரதான மின்மார்க்கத்தின் மீதும் துப்பாக்கியால் சுட்ட பின்னர் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த அச்சடிடிக்கும் பேப்பர்கள் மீது தீயிட்டு கொழுத்தி அச்சு இயந்திரத்தின் பிரதான பகுதிகள் மீதும் பெட்ரோல்  ஊற்றிக்கொழுத்தியுள்ளனர். 

இந்த குற்றத்தை செய்தவர்கள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

அது எப்படி செய்வாங்க.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட தாக்குதல் படங்கள்.





No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...