ads

Monday 29 July 2013

முதல்தரமான ராஜயோகம்!!


வாழ்க்கையில் யோகம் வேண்டும். அது முதல்தரமான யோகமாக அமைய வேண்டும். அந்த யோகமும் இளமையில் வரவேண்டும். வந்தால் அந்த ஜாதகன் பாக்கியவான்.

சரி... முதல்தரமான ராஜயோகம் என்பது எது?

தாராளமான பணவசதி, கௌரவமான வேலை, உயரிய அந்தஸ்து, மனதுக்கு பிடித்த மாதிரி மணவாழ்க்கை, நல்ல அறிவுள்ள, ஓழுக்கமான குழந்தைகள், நோய்நொடிகள், கடன் தொல்லைகள் இல்லாத வாழ்க்கை அமைந்தால் அதை முதல்தரமான ராஜயோகம் என்று சொல்லலாம்.

மேஷலக்னத்திற்கு முதல்தரமான ராஜயோகம் என்று பார்த்தால் செவ்வாய் குரு சேர்ந்திருபதே என்று சொல்லாம். அதுவும் லக்னம், நான்கு, ஏழு, ஐந்து, ஒன்பதாம் இடங்களில் அமையப்பெற்றால் மிக சிறப்பு.

குரு சனி சேர்க்கை என்பது தர்மகர்மாதிபதி யோகத்தை தந்தாலும் நீடித்த ராஜயோகத்தை தருவதில்லை.  காரணம் சனியின் இயற்கை சுபாவம்.

ரிஷப லக்னத்திற்கு முதல்தரமான ராஜயோகம் என்று பார்த்தால் சுக்கிரன் ஆட்சி உச்சம் பெறுவது பெரும் ராஜயோகத்தை தரும். சனி சந்திரன் சேர்க்கை என்பது ராஜயோகமாக குறிப்பிடப்பட்டாலும், அது கொடுத்து கெடுக்கிற அமைப்பாக இருக்குமே தவிர நிலையான யோகத்தை தராது.

மிதுன  லக்னத்திற்கு முதல்தரமான ராஜயோகம் என்று பார்த்தால் சுக்கிரன் முதல் இடத்திலும், இரண்டாம் இடத்தில் குரு மற்றும் புதன் வருகிறார்கள். சுக்கிரன் ஐந்தாம் இடத்திலோ, பத்தாம் இடத்திலோ இருந்தால் நீடித்த யோகம் இருக்கும்.  மீனத்தில் அமராத புதனும், மகரத்தில் இல்லாத குருவும் சுபப்பலனைத் தருவார்கள்.

கடக லக்னத்திற்கு முதல்தரமான ராஜயோகம் என்று பார்த்தால் சந்திரன், செவ்வாய், குரு மூவரும் வருகிறார்கள்.  குருவும் சந்திரனும் கூடி இருந்தால் குருசந்திரயோகம், குருவும்  செவ்வாயும் கூடி இருந்தால் குரு மங்கள யோகம், சந்திரனும் செவ்வாயும் கூடி இருந்தால் சந்திர மங்கள யோகம் என்று பிரபலமான யோகத்தை தரும்.

இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னத்தில் சந்திரன், 5ல் செவ்வாய், 9ல் குரு என்ற அமைப்பில் பிறந்தால் பெரும் பெயரும், புகழும் பெறுவார்கள்.

சிம்ம லக்னத்திற்கு முதல்தரமான ராஜயோகம் என்று பார்த்தால் குருவும் செவ்வாயும் முதன்மையானவர்கள். இரணடாம் இடத்தில் சூரியன் வருகிறார். குரு செவ்வாய் இணைந்து கேந்திரம் அல்லது திரிகோண நிலையில் இருந்தால் பிரபலயோகம்.  சித்திரை மாதத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனால் உயரிய பதவியும், உரிய அங்கீகாரமும் வந்து சேரும்.

கன்னி லக்னத்திற்கு முதல்தரமான ராஜயோகம் என்று பார்த்தால் சுக்கிரனே முதன்மை பெறுகிறார்.  இந்த சுக்கிரனோடு புதன் சேர்க்கைப் பெற்றால் தனவான். நல்ல குணவான் என்று சொல்லாம்.  எந்த வகையிலாவது உயரிய வாழ்க்கை அமைந்துவிடும்.

துலாம் லக்னத்திற்கு முதல்தரமான ராஜயோக கிரகம் என்று பார்த்தால் சனிதான் வருகிறார். இவர் ஆட்சி உச்சம் பெற்றால் யோகம் வரும். அதுவும் பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றான சகயோகம் அல்லது சஸ யோகம் வரும்.

வந்தால்?

வந்தால் வளர்ச்சிதான்.  திடீர் குபேர யோகத்தை தருவார். என்ன நடக்கிறது யூகித்து அறிவதற்குள் ஜாதகர் பிரமாண்டமாக வளர்ந்து விடுவார்.

விருச்சிக லக்னத்திற்கு முதல்தரமான ராஜயோக கிரகம் என்று பார்த்தால் சந்திரன், குரு, சூரியன் என்று பெரிய கூட்டணியே வருகிறது.  

ஆவணி மாதத்தில் பிறந்த ஜாதகர் புனர்பூசம் நான்காம் பாதம், பூசம் அல்லது ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தால் வாழ்க்கைப் பாதை சீராக அமையும்.  பூத்து குலுங்கும் பூஞ்சோலை மாதிரி கவலை இல்லாத மனிதர் பட்டியலில் இணைந்து விடுவார்.

தனுசு லக்னத்திற்கு முதல்தரமான ராஜயோகம் என்று பார்த்தால் சூரியன் வழியாகவும், புதன் வழியாகவும்தான் வரவேண்டும். இவர்கள் இருவரும் ஆட்சி பலம் பெற்று இருந்தாலே போதும், ராஜயோகம் வந்துவிடும்.

மகர லக்னத்திற்கு முதல்தரமான ராஜயோகம் என்று பார்த்தால் தருமாதிபதியான புதனும், கருமாதிபதியான சுக்கிரனும் பெரும் ராஜயோக கிரகங்கள். இவர்கள் ஒன்று சேர்ந்தால் பெரும் ராஜயோகம் வந்துவிடும்.

கும்ப லக்னத்திற்கு முதல்தரமான ராஜயோகம் என்று பார்த்தால் புதன், சுக்கிரன், செவ்வாய் மூவரும் ராஜயோக கிரகங்கள்.  இந்த மூவரில் புதன் சுக்கிரன், புதன் செவ்வாய், சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை இருந்தால் அந்த ஜாதகருக்கு முதல்தரமான ராஜயோகம் வந்துவிடும்.

மீன லக்னத்திற்கு முதல்தரமான ராஜயோகம் என்று பார்த்தால் குருபகவானும், பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான செவ்வாயும் ஒன்று சேர்ந்தால் ராஜயோகம் வரும். அல்லது சந்திரனோடு குரு சேர்ந்தாலோ, அல்லது சந்திரனோடு செவ்வாய் சேர்ந்தாலே போதும் ராஜயோகம் வரும்.

1 comment:

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...