ads

Thursday 1 August 2013

மலேசியாவில் சர்ச்சைக்குரிய கல்வித் திட்டம்!!

மலேசியாவில் சர்ச்சைக்குரிய வகையில், அரசு அறிமுகப்படுத்தவுள்ள தேசிய கல்விப் பெருந்திட்டத்துக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

உண்மையில் தமிழ் தெரியாத தமிழர்கள் உண்டு. ஆனால் மலாய் தெரியாத மலேசியர்கள்  இல்லை என்றே சொல்லலாம். நிலைமை இப்படி இருக்க. கட்டாய மொழிப்பாடம் கொண்டு வரப்படுகிறது. 



ஒரு நாடு ஒரு மொழி’ எனும் கொள்கையை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் சிறுபான்மை மக்களை பெரிதும் பாதிக்கும் என்றும் சீன மற்றும் தமிழ் தரப்பினர் கூறுகிறார்கள்.

இந்த ஆண்டின் இறுதிப் பகுதியிலிருந்து 2025 ஆம் ஆண்டுக் காலப்பகுதிக்கான தேசிய கல்விப் பெருந்திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம் கல்வி நடவடிக்கைகளில் பெரிய மாறுதலை கொண்டுவர அரசு எண்ணியுள்ளது.



மலாய் மொழியில் கல்வி

ஆரம்பப் பள்ளிகளில் மலாய் மொழிக் கல்வி அறிமுகமாகிறது.

இதன் மூலம் நாட்டில் அனைத்து இன மக்களும் ஒரே சூழலில் ஒன்றிணைந்து பழகி தேசிய அளவில் வலுவான இணக்கப்பாடு ஏற்படும் என்று அரசு கூறுகிறது.



அரசின் புதிய கொள்கையின்படி, அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் பாஷா மலேசியா எனப்படும் மலாய் மொழி வழியிலான கல்வி கட்டாயமாக்கப்படுகிறது.

நாட்டிலுள்ள அனைத்து ஆரம்ப பாடசாலைகளும், அது எப்படிப்பட்டதாக இருந்தாலும் நான்காம் ஆண்டு முதல் சமச்சீரான மலாய் மொழியிலான பாடத்திட்டம் அறிமுகமாகிறது என்று அரசு கூறியுள்ளது.

“இனவாதக் கொள்கை”


ஆனால் காலங்காலமாக அனைத்து இன மக்களும் தமது தாய்மொழியில் ஆரம்பக் கல்வியை பயின்று வரும் சூழலில், அரசின் இந்த முன்னெடுப்பு இந்திய தமிழ் மக்கள் மற்றும் சீன மக்களின் பண்பாட்டு கூறுகளையும், மொழியையும் அழித்து அவர்களின் இன அடையாளத்தை இல்லாமல் செய்யும் என்று இதற்கு எதிரானவர்கள் கூறுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு எதிரான ஒரு திட்டமிட்ட நடவடிக்கையே இந்த புதிய  தேசிய கல்விப் பெருந்திட்டம் என்று பிபிசி தமிழோசையிடம் கூறினார், 

மலேசிய மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் கா.ஆறுமுகம்.அரசின் இந்தக் கொள்கைத் திட்ட விளக்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கூட சமர்பிக்கப்படவில்லை என்றும் ஆறுமுகம் கூறுகிறார்.

கடந்த ஆண்டு இந்தத் திட்டம் குறித்த கருத்துக்கள் கேட்கப்பட்ட போதே, தம்மைப் போன்றவர்கள் தெரிவித்த கருத்துக்களையும், எதிர்ப்பையும் புறந்தள்ளி தமது செயல்பாடுகளை அரசு முன்னெடுத்துள்ளது என்றும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...