ads

Saturday 10 August 2013

கோச்சடையான்’ படத்தோட கதை இது!!



‘கோச்சடையான்’ படம் டிராப்பாகி விட்டது, ரஜினியை ஷங்கர் மீட் பண்ணிட்டு வந்திருக்கிறதால அவர் தான் ரஜினியோட அடுத்த படத்தை டைரக்ட் செய்யப்போறார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன.

இந்த நிலையில், தான் ‘கோச்சடையான்’ இந்த வருஷத்துக்குள்ள கண்டிப்பாக ரிலீஸாகிடும், ரஜினி சாரே படத்தை பார்த்துட்டு சூப்பரா இருக்குன்னு சொல்லிட்டார் என்றெல்லாம் சொன்னார் தயாரிப்பாளர் முரளி மனோகர்.

இதனால் ரசிகர்களில் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் ‘கோச்சடையான்’ கதை தற்போது லீக்காகியிருக்கிறது. அதாவது இதுவும் ஒருவகையில் பொலிடிக்கல் பேஸ்ட்டு ஸ்டோரி தான் போலிருக்கிறது.

கதைப்படி, அப்பா ரஜினிகாந்த் ஒரு நாட்டை ரொம்ப நல்லமுறையில் ஆட்சி செஞ்சிக்கிட்டு வர்றார். நாட்ல இருக்கிற செல்வங்கள் எல்லாத்தையும் மக்களுக்கு ஷேர் பண்ணி கொடுக்கிறார்.

ஆனால், நல்லா போய்க்கிட்டிருக்கிற ஆட்சியை துரோகிகள் சும்மா விடுவாங்களா..? அவரது அமைச்சரவையிலேயே இருக்கும் சிலர் அவருக்கு எதிராக சதி பண்றாங்க, சில அசிங்கமான உத்திகளைக் கையாண்டு அப்பா ரஜினியோட ஆட்சியை கவுத்துடுறாங்க…

அப்போதுதான் அவருக்கு மகன் ரஜினிகாந்த் பிறக்கிறார். அப்பாவோட திறமையான பயிற்சியில் அவர் நல்ல புத்திசாலியா திறமைசாலியா வளர்கிறார்.

பிறகு காட்டில் வீரப்பன் ரேஞ்சில மறைவா ஒரு டீமை பார்ம் பண்றார்.

அதுக்குப் பிறகு அப்பாவோட ஆட்சியைக் கவிழ்த்து நாட்டை ஆண்டுக்கிட்டிருக்கிற துரோகிகளோட கையிலிருந்து எப்படி புரட்சி பண்ணி நாட்டை மீட்டெடுக்கிறார்ங்கிறது தான் கோச்சடையானின் ஸ்டோரியாம்.

ஹாலிவுட்டில் ரிலீஸான அவதார் மற்றும் டின் டின் ஆகிய படங்களுக்கு நிகராக படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கிறதாம். இந்தக்காட்சிகள் தமிழ்ரசிகர்கள் புது அனுபவமாக இருக்கும் என்று நம்பிக்கொண்டிருக்கிறது கோச்சடையான் டீம்.

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...