ads

Friday 16 May 2014

நோட்டா பொத்தானை அழுத்தியவர்கள் விவரம்



நாட்டிலேயே அதிகபட்சமாக நோட்டா பொத்தானை அழுத்தியவர்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. 

இந்த நாடாளுமன்ற தேர்தலில்தான் முதன்முறையாக 49ஓ எனப்படும் முறை கொண்டுவரப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரத்தின் கடைசி வரிசையில், மேலேயுள்ள யாருக்கும் நான் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை பதிவு செய்ய ஒரு பொத்தான் வைக்கப்பட்டது. 

நாட்டில் கட்சிக்கொடிகள் பல பறக்கும் நிலையில், இந்த பட்டனுக்கு அவ்வளவாக வேலை இருக்காது என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றம்தான். 

ஏனெனில் சில தொகுதிகளில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களைவிட நோட்டாவுக்குதான் அதிகம் பேர் 'வாக்களித்துள்ளனர்'. 

அந்த சாதனையில் முதலிடம் தமிழ் நாட்டின் நீலகிரி தொகுதிக்குத்தான். இத்தொகுதியில் 46 ஆயிரத்து 559 பேர் வேலைமெனக்கட்டு வாக்குச்சாவடிக்கு போய் நோட்டாவில் ஓட்டு போட்டுள்ளனர். 

இதைப்போல, பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திரமோடி போட்டியிட்ட குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியில் 18 ஆயிரத்து 53 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர். 

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் 11 ஆயிரத்து 320 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகியுள்ளன. எல்லா கட்சிக்கும் நாங்கள்தான் மாற்று என்று கூறிய ஆம் ஆத்மிக்கு பதிலாக, நோட்டாவுக்கு மக்கள் வாக்களித்துள்ளதை வைத்துப் பார்த்தால், ஆம் ஆத்மியை மக்கள் ஒரு மாற்றாக நினைக்கவில்லை என்றே நினைக்க தோன்றுகிறது. 

ஏனெனில் மேற்கண்ட மூன்று தொகுதிகளிலுமே நோட்டாவை விட ஆம் ஆத்மி வேட்பாளர்கள் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளனர். 


நாடு பிரம்மச்சாரிகள் கையில்!

பிரதமர் நாற்காலியில் ஒரு புதிய பிரம்மச்சாரி வருகிறார். திருமணமானவர் என்றாலும் கூட மோடியும் இப்போதும் தனிக்கட்டைதான். 


பாஜகவிலிருந்து பிரதமர் பதவிக்கு வந்துள்ள 2வது பிரம்மச்சாரியும் இவர்தான். இதற்கு முன்பு வாஜ்பாய் பிரதமராக இருந்தார். அவர் ஒரு கட்டை பிரம்மச்சாரி. ஆனால் நமது மோடியோ, கல்யாணமாகியும் பிரம்மச்சாரி. 

நரேந்திர மோடி பிரதமராகப் போகிறார். 

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஒரு நீண்ட கால பேச்சலர். 



டெல்லி அரசியலில் முக்கியத்துவம் வகிக்கப் போகும் முதல்வர் ஜெயலலிதா ஒரு பேச்சலர். 



திரினமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி இன்னொரு பேச்சலர்.




மோடி!!






Saturday 10 May 2014

வேதாளமும் வேதியனும்

  வாமனர் இப்படி செய்யலாமா?

 தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத வேதியன் புளிய   மரத்தில்   தொங்கிக் கொண்டிருந்த  பிரேதத்தைக்   கீழேத் தள்ளி அதை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். 

 அப்போது அந்த உடலில் குடியிருந்த வேதாளம் பேச ஆரம்பித்தது. 

வேதியா!  உன் முயற்சியைப் பாராட்டுகிறேன். விடாமுயற்சியே வெற்றியைத் தரும் என்பதை புரிந்து வைத்திருக்கிறாய்.

சரி, எப்போதும் போல் நான் உனக்கு ஒரு கதை சொல்லிக் கொண்டு வருகிறேன்.  வேறுவழியில்லை .. நீ கேட்டுத்தான் ஆகவேண்டும்.  கேட்டுக் கொண்டே வா..

 ஆதி   காலத்தில் இப்பூமியில் காஸ்யப முனிவர் என்ற மகரிஷி வாழ்ந்து வந்தார். அவருக்கு திதி, அதிதி என்ற மனைவிகள்  திதிக்கு பிறந்தவர்கள் அசுரர்களாகவும், அதிதிக்கு பிறந்தவர்கள் தேவர்களாகவும் இருந்தனர்.

சத்யயுகத்தில் திதிக்கு இரு அசுரக்குழந்தைகள் பிறந்தன. ஹிரண்யாக்ஷன், ஹிரண்ய கசிபு என்பவர்களே அவர்கள் . இருவரும் மிகவும் வலிமைபடைத்தவர்களாக திகழ்ந்தார்கள்.

இதில் ஹிரண்யாக்ஷன் பூமியை எடுத்துக் கொண்டு சமுத்திரங்களுக்கடியில் மறைத்து வைத்துவிடுகிறான். மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து   அவனைக் கொன்று , பூமியை மீட்டு வருகிறார்.

ஹிரண்ய கசிபு பிரம்மனை எண்ணித் தவமிருந்து, மனிதர்களாலும், தேவர்களாலும்,  விலங்குகளாலும், கர்ப்பப்பையில் பிறந்த எந்த உயிர்களாலும், ஆயுதங்களாலும், வீட்டிலும், வெளியிலும், இரவிலும் பகலிலும், மண்ணிலோ விண்ணிலோ எனக்கு மரணம் வரக்கூடாது என்று வரம் வாங்கிக் கொள்கிறான். 

மூவுலகங்களையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டுவருகிறான்.  தன் தம்பியைக் கொன்ற விஷ்ணுவைக் கொன்று பழிதீர்க்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாய் இருக்கிறான். 

அவனது மனைவி பெயர் கயது. அவள் விஷ்ணு பக்தை. இவர்களுக்கு பிறக்கும் நான்காவது ஆண் குழந்தையே பிரகலாதன்.  சதா விஷ்ணுவின் நாமத்தையே உச்சரித்துக் கொண்டிருக்கிறான். 

எனவே பிரகலாதனைக் கொல்ல பல முயற்சிகளை மேற்கொண்டு தோற்று போகிறான் ஹிரண்ய கசிபு.  முடிவில்  தூணை பிளந்து கொண்டு மகாவிஷ்ணு மனிதனும் அல்லாது விலங்கும் அல்லாமல் மனித உடலில் சிங்கத் தலையுடன் நரசிம்ம அவதாரம் எடுத்து வருகிறார். 

இரவும்  பகலும் சந்திக்கும் அந்தி வேளையில், வீடும் இல்லாமல் வீதியும் இல்லாமல் வாயிற்படியில் அமர்ந்து, வானும் இல்லாமல் பூமியும் இல்லாமல்,  அவனை தன் துடையில் வைத்து கூரிய நகங்களாலேயே அவன் வயிற்றைக்கிழித்து,  குடலை உருவி  கொன்றொழிக்கிறார்.

ஹிரண்ய கசிபுவிற்கு பிறகு  ஆஹ்லாத் என்ற சகோதரனை அசுரலோகத்திற்கு  அரசனாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறான் பிரகலாதன். ஆனால் முடிவில் பிரகலாதன்  அசுரலோகத்தின் அரசனாகிறான். ஒரு நல்ல அரசனாக நேர்மையான தலைவனாக ஆட்சி செய்கிறான். அவனது மனைவி திருதியை என்பவள்.

இவர்களுக்கு பிறக்கும் மகன் வீரோசனன். அசுர குரு சுக்ராச்சாரியாரிடம்  கல்வி கற்கிறான்.  மிகவும் திறமைசாலியாக திகழ்கிறான். கடுமையான தவங்கள் இயற்றி அரிய பல வரங்களைப் பெறுகிறான். 

தன் தந்தை போலன்றி தன் பாட்டனார் ஹிரண்யனைப் போல் அசுர குணமுள்ளவனாக இருக்கிறான்.  சூரியனை எண்ணி தவமிருக்கிறான். அவன் தவத்தின் தீவிரத்திற்கு மகிழ்ந்த சூரியன் வீரோசனனுக்கு தங்கத்திலான கிரீடம் ஒன்றைத் தருகிறார். அந்தக் கீரிடத்தை அணிந்திருக்கும் போது  அவனுக்கு மரணம் என்பது நிகழாது.

ஆனால் கிரீடம் இல்லாதபோது எவரேனும் அவன் தலையில் கைவைத்தால் அக்கணமே அவன் தலைவெடித்து மரணம் சம்பவிக்கும். ஆனால் வேறு எந்தக் காரணத்தினாலும் அவனுக்கு மரணம் சம்பவிக்காது.  எனவே உறங்கும் வேளைத் தவிர அவனது தலையில் கிரீடம் இருந்து கொண்டேயிருந்தது.

(வீரோசனன் விசாலாக்ஷி என்ற தேவாம்பாளை மணம் செய்து கொள்கிறான்.  இவர்களுக்கு பிறக்கும் குழந்தையே மகாபலி.)

பிரகலாதன் தன் மகனை அரசனாக்கி விட்டு சந்நியாஸம் மேற்கொள்கிறார்.

வீரோசனன் தனது வலிமையாலும் , கர்வத்தாலும் அனைவரையும் மிரட்டி அடிபணிய வைக்கிறான். அசுரனின் தலையில் கிரீடம் இல்லாத போது அவன் தலையில் கைவைத்து அவனைக் கொல்லும் தைரியம் எவருக்கும் இல்லை. 

 பரம் பொருளே மோகினிப் பெண்ணாய் வந்து அவனை மோகம் கொள்ள வைத்து,  மதிமயங்கிய வேலையில்,  அவனே அவன் தலையில் கை வைத்து உயிரிழக்க வைக்கிறார். 

அவனுக்கு பிறகு அவனது மகன்  மகாபலி அசுரர்களின் மன்னனாகிறான்.  சோணபுரத்தை சீரும் சிறப்புமாய் ஆட்சிசெய்கிறான்.  மகாபலி தன் பாட்டனாரைப்போல் விஷ்ணுபக்தனாகத் திகழ்கிறான். விஷ்ணுவை வணங்குவதோடு விஷ்ணு பக்தர்களையும் உபசரித்து மகிழ்கிறான். 

அதனால் விஷ்ணுவின் அடியவர்களான அந்தணர்கள் , மகாபலியின் சிறப்புக்காக விஸ்வஜித் என்ற யாகத்தை நடத்துகின்றனர்.   அதன் பலனாக  வானில் பயணம் செய்யும் வண்ணம் தங்கமயமான ரதமும், வெண்ணிறக்குதிரையும், சிம்மக் கொடியும், வில்  மற்றும் அழகான கவசமும்  மகாபலிக்குக் கிடைத்தது. 

மகாபலி வித்யாவதி என்ற குலமகளைத் திருமணம் செய்து கொள்கிறான்.  (அவர்களுக்கு பிறக்கும் மகனுக்கு   பாணாசுரன் என்று பெயர் சூட்டுகின்றனர்.  தந்தையின்  யாகப் பயனால் ஆயிரங்கரங்கள் கரங்கள் கொண்ட வலிமையோடு பிறக்கும் அவனே  பிற்காலத்தில்  சிறந்த சிவ பக்தனாகத் திகழ்கிறான்.)  

மூவுலகமும் வியக்கும் வண்ணம் மகாபாலியின் ஆட்சி திகழ்ந்தது. மாதம் மும்மாரி பொழிந்தது. முப்போகம் விளைந்தது. மக்கள் செல்வாக்காய்  வாழ்ந்தனர். நீதியும் நேர்மையும் மிக்க மன்னனின் ஆட்சியில் கள்ளர்கள் பயமின்றி மக்கள் மகிழ்வுடன் வாழ்ந்தனர். 

வெளியில் செல்லும் போதும் யாரும் தங்கள் கதவுகளைக் கூடப் பூட்டிவிட்டுச் செல்வதில்லை. காரணம் திருடருக்கு அந்நாட்டில் வேலையில்லை. நாடு செல்வச் செழிப்பாக விளங்கியது. அனைத்து மக்களுக்கும் பலியின் ஆட்சி பொற்காலமாக அமைகிறது. வறுமையில்லை. நோய்நொடியில்லை. அமைதியும் சந்தோஷமும் எங்கும் நிலவுகிறது.  

அசுரகுரு சுக்ராச்சாரியாரின் ஆலோசனைப்படியும்,  மந்திரிகளின் ஆலோசனைப்படியும் , பாதாள உலகம் , தேவலோகத்தையும் கைப்பற்றுகிறான் மகாபலி. இந்திரன் தேவர்களோடு தேவலோகத்தை விட்டு ஓடி ஒளிகிறான்.

சுக்ராச்சாரியார்  மகாபலியிடம் ஆசைவார்த்தைக்   கூறி,  நீயே இனி இந்திரப் பதவியில் அமரத் தகுதியானவன் ,  அஸ்வமேத யாகம் செய்வோம் என்று கூறுகிறார்.  நர்மதைக் கரையில் 99 யாகம் வெற்றிகரமாக முடிகிறது. தேவலோகத்தில்  நூறாவது யாகம் வெற்றிகரமாக முடிந்தால் மகாபலியை எவராலும் வெல்ல முடியாது. இந்திரப் பதவியிலிருந்து அவனை யாராலும் அகற்றமுடியாது. நூறாவது யாகம் நடைபெறுகிறது.

காஸ்யப முனிவரின் மனைவியும், இந்திரன் மற்றும் தேவர்களுக்கெல்லாம் தாயான , அதிதி கவலையுறுகிறாள். தன் பிள்ளைகளும் அவர்களின் குழந்தைகளும் காட்டிலும் மேட்டிலும் ஒளிந்து அவதிப்படுவதைப் பார்த்து அவள் மனம் கலங்குகிறது.

மகாபலியின் யாகம் நிறைவேறினால் அவன் இப்போது பெற்ற வெற்றியும் தேவலோகவாசமும் நிரந்தரமாகிவிடுமே, பிறகு தேவர்களின் கதி? 

தவத்திலிருந்த காஸ்யபர் , குடிலுக்கு திரும்பி வருகிறார். மனைவியின் கவலைப்படர்ந்த முகத்தை பார்த்து காரணத்தை உணர்ந்து கொள்கிறார். 

தேவர்களும் அவரின் பிள்ளைகளே , அசுரர்களும் அவரின் பிள்ளைகளே!  அவர் யாருக்கு ஆதரவாக பேசுவது.

அதிதி! கவலையைப் போக்க ஒரு வழியிருக்கிறது. பிரமன் எனக்கு உபதேசித்த பயோவிரதத்தை கடைபிடி, அற்புதமான விரதம்.  யாகங்கள் செய்வதற்கு இணையான விரதம். இதை கடைபிடித்தால் உன் எண்ணம் நிறைவேறும். நல்லவையே நிகழும் என்கிறார்.

விரதம் பற்றி மனைவிக்கு விளக்குகிறார்.

பங்குனிமாதம் வளர்பிறை பிரதமை நாளில் ஆரம்பித்து திரயோதசி வரை பனிரெண்டு நாட்கள் கடைபிடிக்க வேண்டும். விரத காலத்தில்  அதிகாலையில் தினமும் நீராடி, நித்யகர்மாக்களை முடித்து, சூரியன், அக்னி ,பூமி , பரிசுத்தமான தீர்த்தம் இவற்றில் ஏதேனும் ஒன்றில் இறைவனை ஆவாஹனம் செய்து பக்தியுடன் துதிக்க வேண்டும். 

பிறகு துதிப்பாடல்களால் பகவானை வழிபட்டு, அர்க்யம், பாத்யம் ஆகியவற்றால் பூஜித்து, பால் அபிஷேகம் செய்து  ,வஸ்திரம் சந்தனம், புஷ்பம், அட்சதை தூப தீபங்களால் உபசாரங்கள் செய்து, துவாதசாக்ஷர மந்திரத்தை அர்ச்சித்து வழிபட வேண்டும். பால் அன்னம் நிவேதனம் செய்வது சிறப்பு. 

விரதகாலத்தில் மகாவிஷ்ணுவை மூல மந்தரம் ஜபித்து வழிபடுவதும், ஏழைகளுக்கு உணவளிப்பதும் சிறப்பு. மூன்றுவேளை நீராடி பாலை மட்டும் ஆகாரமாகக் கொண்டு, வாசுதேவனையே தியானித்து வரவேண்டும். 

இப்படி தினமும் வழிபட்டு கடைசி நாளில் பகவானுக்கு பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து, பாலில் கலந்த அன்னம் சமர்ப்பித்து பூஜையை முடிக்க வேண்டும் , தேவி, சகல யாகங்களும் செய்த பலனைத் தரும் இது. நீ முறைப்படி கடைபிடித்து பகவானை வழிபடு. நல்லது நடக்கும் என்கிறார்.

மிகுந்த பக்தியுடன் முறைப்படி பயோ விரதத்தை கடைபிடிக்கிறாள் அதிதி.   அதற்கான பலன் அவளுக்கு கிடைத்தது. அவளது வயிற்றில்  ஒரு அவதாரம்  அவதரித்தது.

தேவர்களின் குரு பிரகஸ்பதி, ஸ்ரீவைகுண்டத்தில் ஸ்ரீமந்நாராயணனின் முன் நின்றுகொண்டிருக்கிறார். தேவகுருவின் கண்களில் தெரிந்த கலக்கத்தைக் கண்டு பகவான் புன்முறுவல் பூக்கிறார்.

தேவ குருவே! மகாபலி பக்திமான்! தன் குலம் பொருட்டு  ஒரு தலைவனாக அவனது கடமைகளைச் செய்கிறான். அவன் செயல்களில் என்னால் குற்றம் காணமுடியவில்லை. 

பிரகலாதனின் வம்சம் அவன். பிரகலாதனிடம் நான் ஒரு வரம் கொடுத்திருக்கிறேன். அவன் வம்சத்தில் வந்த எவரையும் நான் அழிப்பதில்லையென்று. ஆனாலும் அவன் புண்ணிய பலன்களை முடிவுறும் காலம் நெருங்குகிறது.  

இந்த உலகம் முறைப்படி இயங்கிட, நான் அவதாரம் செய்ய வேண்டிய காலமும் நெருங்குகிறது. நீங்கள் செல்லுங்கள். இனி நடப்பது தேவர்களுக்கு நன்மையைத் தரும் என்கிறார்.  நிம்மதியான மனதுடன் தேவகுரு செல்கிறார்.

காஸ்யபருக்கும் அதிதிக்கும் ஒரு ஆண்  குழந்தை பிறக்கிறது.  பிறந்த குழந்தை உடனே  வாமனனாய் குள்ள உருவில் பிரம்மச்சாரியாய் மாறி  நிற்கிறது. 

 ஒரு ஓலைக் குடையுடன் இன்னொரு கையில் சிறிய கமண்டலத்தை ஏந்திய வண்ணம் , மகாபலி யாகம் செய்யும் யாகசாலையை நோக்கிச் செல்கிறார் வாமனனாய் அவதாரம் எடுத்த விஷ்ணு பெருமான்.

யாகம் இறுதிக் கட்டத்தை நெருங்கிய தறுவாயில் , யாக சாலையை நோக்கி நடந்து வரும் அந்தணச் சிறுவனைப் பார்த்து மகாபலிக்கு வியப்பேற்படுகிறது.  குள்ளனாய் இருந்தாலும் அவன் முகத்தில் தெரியும் ஒளி  மகாபலியை ஆச்சரியப்படுத்துகிறது.

வரவேற்று அமர வைக்கிறார்.  வந்த நோக்க்ம் குறித்து வினவுகிறார். அரசே தாங்கள் யாகம் செய்வதைக் கேள்விப்பட்டேன் தங்களிடம்  தானம் கேட்க வந்தேன்.

மிக்க மகிழ்ச்சி தங்களுக்கு என்ன வேண்டும்? தாங்கள் எதை விரும்பினாலும் தருகிறேன்.

மன்னா! எனக்கு பேராசை ஒன்றும் இல்லை. என் காலடி அளவில் மூன்றடி நிலம் மட்டுமே தந்தால் போதும், நான் பெரிதும் மகிழ்வேன். வாமனச் சிறுவன் கேட்கும்போதே, 

குரு சுக்ராச்சாரியார் இடைமறித்து மகாபலியைப் பார்த்து சைகை செய்கிறார்.
மன்னிக்கவும், தாங்கள் காத்திருங்கள் இதோ வந்துவிடுகிறேன் என்று வாமனரிடம் கூறிய  மகாபலி குருவினை நெருங்குகிறார்.

மகாபலி, வந்திருக்கும் சிறுவனைப் பார்ததால் சாதாரணமானவனாய் தெரியவில்லை. எனக்கென்னவோ தேவர்களுக்கு உதவவே குள்ள உருவில் மகாவிஷ்ணுவே வந்திருப்பதாகத் தோன்றுகிறது.  அந்த அந்தணச் சிறுவனை நாளை வரச்சொல். நம் யாகம் முதலில் நிறைவேறட்டும்.

மன்னிக்கவும் குருவே!  தானம் தருவதாக வாக்களித்துவிட்டேன். நான் வாக்கு மீற மாட்டேன். வந்தது மகாவிஷ்ணு என்றால் அது எனக்குப் பெருமைதான். பரந்தாமனுக்கே இந்த மகாபலி தானம் வழங்கினான் என்ற சிறப்பு எனக்குச் சேரட்டும்.

பொறு மகாபலி, நான் உன் நல்லதுக்குத்தான் செய்கிறேன். உன்பதவி அந்தஸ்து எல்லாமே பறி போய்விடும். அசுரர்குலத்துக்கே நீ துன்பத்தை ஏற்படுத்தப் போகிறாய். அசுர குரு என்ற முறையில் எச்சரிக்கிறேன்.

என்னைத் தடுக்காதீர்கள் குருவே, என்று கூறி தானம் செய்ய  நீர் வார்க்க, கமண்டல நீரை கையிலெடுக்கிறார் மகாபலி, 

சுக்ராச்சாரியார் வண்டாக மாறி கமண்டலத்தின் நீர் வெளியேறும் குழாயில் உட்புகுந்து நீர் வெளிவராமல் அடைத்துக்கொள்கிறார். 

வாமனச் சிறுவன் ஒரு சிறு குச்சியை எடுத்து குத்துகிறான். வண்டாக இருந்த சுக்ராச்சாரியாரின் கண்ணில் அக்குச்சிப் பட்டு வலியால்  அவசரமாய் வெளியேறுகிறார்.

தானம் வழங்கப்பட்டுவிடுகிறது.  வாமன சிறுவன் விஸ்வரூபம் எடுக்கிறான். மகாவிஷ்ணுவாகக் காட்சியளிக்கிறான்.

தனது ஒரு அடியில் பூலோகத்தையும் இரண்டாவது அடியில் மேலுகங்களையும் அளக்கிறார் விஷ்ணு. ‘ மகாபலி மூன்றாவது அடியை எங்கே அளப்பது?’  கேட்கிறார் நாரயாணன்.

ஸ்ரீமன் நாராயணனை வணங்கிய மகாபலி.  எம்பெருமானே!  தங்கள் திருவடியை என் சிரசிலேயே வைத்துக் கொள்ளுங்கள் என்று மண்டியிட்டு பணிகிறார்.  

மகாபலியின் சிரசில் காலடி வைத்த மகாவிஷ்ணு, அவரை பாதாள உலகம் அனுப்புகிறார்.

 இவ்வாறு மகாவிஷ்ணு தேவர்களை காப்பாற்றி, இந்திரனுக்கு அவன் பதவியை மீட்டுக்கொடுத்தார்.

வேதியா! இதுவரை மகாபலி சக்கரவர்த்தியின் கதையைக் கேட்டாய். மகாபலி ஒரு நேர்மையான அரசன் என்பதை அறிந்தோம். அதோடு பக்தி மிக்கவன். முறைபடி யாகங்களைச் செய்கிறான். 

தன் யாகங்களின் மூலம் பெற்ற வலிமையால் மூவுலகங்களையும் வெற்றி பெறுகிறான். ஒரு அரசனாக அவன் செய்த செயல்களில் தவறில்லை. குடிமக்கள் யாரையும் அவன் இம்சிக்கவில்லை. இறுதியில் தன் வாக்குத் தவறாமல் மூன்றடி மண் கேட்ட வாமனனுக்கு குரு சுக்ராச்சாரியாரின்  எச்சரிக்கையையும் மீறி தானமளிக்கிறான்.  

ஆனால் மகாவிஷ்ணு தன் பக்தனையே இப்படி ஏமாற்றலாமா?  வாமன வடிவில் வந்து தானம் பெற்று பின் எல்லாலோகங்களையும் மகாபலியிடமிருந்து நேர்மையற்ற முறையில் அபகரிக்கலாமா?  இது சரியா? தவறா? 

என் கேள்விக்கு சரியானப் பதில் தெரிந்திருந்தும் நீ சொல்லாமல் மௌனம் சாதித்தால் உன் தலை சுக்கல் நூறா£க வெடித்துச் சிதறும்!

‘சரி, சரி பொறு வேதாளமே! உன் கேள்விக்கான பதிலை சொல்ல முயற்சிக்கிறேன்’ என்ற வேதியன் வேதாளத்தின் கேள்விக்கு பதில் கூறத் தொடங்குகிறான்.

“ஹிரண்யகசிபு ஒரு அசுரர் குல மன்னன். அசுரலோகத்தை ஆட்சி செய்கிறான். பிரம்மனை எண்ணி தவமிருந்து பலவரங்களையும் பெறுகிறான். மூவுலகங்களையும் ஆட்சிசெய்கிறான். இந்திரனையும் இந்திராணியையும் சிறைவைக்கிறான். தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்துகிறான்.

பிறகு நானே கடவுள் என்று இறுமாப்பு எழுகிறது அவனுக்கு ,  இரண்யாய நமஹ என்று தன்னை வழிபடும்படி கூறுகிறான்.  அசுரர் தலைவனான அவன் பெற்ற சக்திகள் யாவும் படைக்கும் கடவுளால் வழங்கப்பட்டது. ஆனாலும் எல்லோரையும்விட தானே  சக்திமிக்கவன் என்ற அகங்காரமே அவனுக்கு அதிகமாக இருக்கிறது.  

அவனது மகன் பிரகலாதன் விஷ்ணுவின் மேல் பக்தி பூண்டு திகழ்கிறான். நாராயணாய நமஹ என்றே ஜபித்து¢ வருகிறான். தன்னை வழிபடும்படி  பிரகலாதனை வலியுறுத்துகிறான் இரண்யன்.  

எல்லாம் வல்ல கடவுள் ஸ்ரீமன்நராயணன் ஒருவரே, நீங்களும் அவரை வழிபடுதலே முறை. உங்களின் செயல்பாடுகள் தவறு என்று கூறுகிறான் பிரகலாதன். இதனாலேயே  அவனைக் கொல்ல பல முயற்சிகளை மேற்கொள்கிறான் இரண்யன். தன் மகனையே கொல்லத்துணிந்து தீய குணங்களின்  வடிவாய் நிற்கும் ஹிரண்யனை மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்துக் கொல்கிறார்.

பிரகலாதனின் பக்தியால் மனம் நெகிழ்ந்து பிரகலாதனுக்கு வரங்கள் பல தருகிறார். அவனது வம்சத்தை இனி வதைக்க மாட்டேன் என்றும் அருளுகிறார். 

பிரகலாதனுக்கு பின் அவனது மகன் வீரோசனன் அசுரர்குல அரசனாகிறான். இவனும் பிரம்மனையும், சூரியனையும் வழிபட்டு வரம்பல பெற்று, தன் பாட்டனாரைப்போல் அகங்காரம் கொண்டு அலைகிறான். தேவர்களை சிறைப் பிடிக்கிறான். தேவஅசுரப் போர்க்காலத்தில்  நாராயணனின் தந்திரத்தால் தானே தனக்கு கொள்ளி வைத்துக் கொள்கிறான்.

அவனது மகன் மகாபலி விஷ்ணு பக்தி கொண்டு திகழ்கிறான். ஆனாலும் அசுரர் குல குரு சுக்ராச்சாரியார் மற்றும் தன் மந்திரிகளின் ஆலோசனைகளால் மூவுலகங்களையும் வென்றெடுக்கிறான். 

நாடிழந்த தேவர்கள் அல்லல் படுகிறார்கள்.  மகாபலி தன் நாட்டைமட்டும் நல்லபடி ஆளவேண்டும் என்ற நிலையிலிருந்து மாறி மூவுலகங்களையும் வென்றது, அவன் உள்ளத்தின் பேராசையையும், சுயஅறிவின்றி மற்றவரின் தூண்டுதல்களின் பேரில் அவன் செயல்படுவதாகவும் இங்கே தெரிய வருகிறது. 

மகாபலி விஷ்ணுவின்  மேல் கொண்ட பக்தியின் காரணமாகவே அவனுக்கு புண்ய பலன்கள் பல கிட்டுகிறது. அவனது ஆட்சி நேர்மையாய் நடக்கிறது.  மகாவிஷ்ணுவே அவனது பக்தியை மெச்சி இந்திரப்பதவியை அவனிடம் அளித்ததாக புராணமொன்று கூறுகிறது.  

மகாபலி தன் குருவின் ஆலோசனையின் பேரில் செய்யும் யாகம் வெற்றிகரமாக நிறைவேறினால் , தேவர்கள் என்னென்றும் நிரந்தரமாக அல்லல்பட நேரிடும் என்கிற நிலை உருவாகிறது.  

மகாபலி விஷ்ணு பக்தன்தான். நேர்மையான அரசன்தான் ஆனால் அவன் தந்தை வீரோச்சனனும், வீரோச்சனனின் பாட்டனார் ஹிரண்யனும்   தேவர்களையும் , முனிவர்களையும் கொடுமைப்படுத்தியவர்களாகவே இருந்தார்கள்.  

மகாபலியின் யாகம் மூலம் மூவுலகமும் அசுரர்குல ஆதிக்கத்தின் கீழ்நிரந்தரமாய் வந்து விட்டால், எதிர்காலத்தில் வரும் அசுரகுல மன்னன் மகாபலி போல் சிறந்த அரசனாக இருப்பான் என்பதற்கு நிச்சயத் தன்மை எதுவும் இல்லை.

அனைத்தும் அறிந்த பரந்தாமன் எதிர்காலத்தில் நடப்பதையும் அறிந்திருக்கிறார்.  மகாபலியின் மகனான பாணாசுரன் தன் தந்தையின் குணம் கொண்டவனல்ல , அசுரர்களின் முரட்டுத் தனம் அவனிடம் அதிகமாய் இருக்கிறது. 

அவனால் தேவர்களும் , முனிவர்களும் , மகக்ளும் துன்பப்படுவார்கள்  என்பதையும் அவர் அறிகிறார். எனவே மகாபலியின் யாகம் நிறைவேறாமல் இருக்கச் செய்வதோடு , மூவுலகங்களிலிருந்தும் அவனது ஆட்சியை  அகற்ற முடிவுசெய்கிறார்.  

இந்நிலையில் தேவகுருவின் வேண்டுதலும், அதிதியின் வழிபாடும் நிகழ்கிறது. அவர்களுக்கும்  அருள் செய்ய வேண்டிய கடமை வருகிறது.

விஷ்ணுவின் செய்கை எப்போதும் சரியாக   இருக்கிறது என்பது  இப்போது நமக்கு விளங்குகிறது.

மகாபலி, விஷ்ணுவின் தீவிர பக்தன். அவனுக்கு தன் விஸ்வரூபத்தை காட்டியருள விருப்பம் கொள்கிறார்.  ஒரு பக்தன் பெறுகின்ற மிகப்பெரிய பேறு இது. மகாவிஷ்ணு தன் விஸ்வரூபத்தை முதன் முறையாக மகாபலிக்கே காட்டியருள்கிறார். (பின்னர் எடுக்கும் கிருஷ்ண அவதாரத்தில் அர்ச்சுனனும், கர்ணனும் அவரது விஸ்வரூபத்தை கண்டுமகிழ்கிறார்கள்.)

மகாபலி தீவிர ஹரிபக்தன், அவனை அழித்து யாகத்தை தடுத்த நிறுத்த விஷ்ணுபிரான் விரும்பவில்லை. அதோடு மகாபலியின் பாட்டனாரான, தன் பக்தன் பிரகலாதனிடமும் ஏற்கனவே அவனது வம்சத்தை அழிக்க மாட்டேன் என்ற வரத்தையும் கொடுத்திருக்கிறார். எனவே மாற்றுருவில் அவதாரம் எடுத்து மகாபலியிடம் வருகிறார்.

அதோடு சுயரூபத்தில் விஷ்ணுபிரான் வந்திருந்தால்,  தான் வழிபடும் தெய்வத்திற்கே தானம் அளிப்பதை மகாபலி விரும்ப மாட்டான். 

அனைத்தையும் அவர்காலடியில் சமர்ப்பித்துவிடுவான். எனவே விஷ்ணு தன் பக்தனின் சிரசில் திருவடி பதித்து அவனுக்கு   அருள்புரியும் நோக்கில் வாமன அவதாரத்தில் வந்து மூன்றடி மண் கேட்கிறார்.   பிறகு விஸ்வரூபதரிசனம் காட்டுகிறார். மூவுலகையும் மகாபலியிடமிருந்து மீட்டெடுக்கிறார்.  பிறகு அவனது சிரசில் காலடி வைத்து அருள்புரிகிறார். 

பரம்பொருளுடன் இணைவதே  ஆன்மா பிறவியெடுத்ததன் நோக்கம். மகாபலியின் தூய ஆன்மா பகவானின் காலடி பட்டு தன்னையுணர்கிறது. அதன் பின்   மோட்சத்தை  எய்துகிறது என்பதை புராணம் வழிநாம் அறிய முடிகிறது. 

மகாபலிக்கு மோட்சத்தை அளித்த பரம்பொருள், நிரந்தரமாய் பாதாள உலகத்தை ஆளும் வரத்தையும், வருடம் ஒருமுறை தன் நாட்டிற்கு சென்று தன் குடிமக்களை காண்டு வரும் வரத்தையும் அருளுகிறார். 

அந்நாளையே கேரள மக்கள் திருஓணம் பண்டிகையாக கொண்டாடி மகிழ்கிறார்கள். பாதாள உலகத்தை ஆளும் போது மகாபலி ராஜயோகத்தில் ஈடுபட்டு ஆத்மநிவேதன பூஜையின் மூலம் இறைவனோடு ஒன்றுவதாகவும் புராணமொன்று கூறுகிறது.

பரம்பொருளான மகாவிஷ்ணுவின் செயல்பாடுகள் எதுவானாலும் அது எல்லா உயிர்களுக்கும் நன்மைகளை செய்வதற்காகவும், தீயவர்களை அழித்து, நல்லவர்களை காப்பதற்காகவும்தான் என்பதை நாம் உணரமுடிகிறது. 

அவரது செயல்களில்  சரி எது, தவறு எது? என்று ஆராய்ந்து பார்க்கும் சக்தி நம் சிற்றறிவுக்கு இல்லை, அப்படி ஆராய்வதும் மடமை. அவர் எது செய்தாலும் அது சரியாகவே இருக்கும் என்பதே நான் முடிவாய் கூறும் பதிலாகும்.”  வேதியன் கூறி முடிக்கிறான். 

வேதாளத்தின் கேள்விக்கு சரியான பதிலை சொல்லியதன்  மூலம் வேதியனின் மௌனம் கலைந்ததால்  வேதாளம் அவனிடமிருந்து விடுபட்டு மீண்டு¢¢ம் புளிய மரத்திற்குச்  சென்று,   கிளையொன்றைப் பற்றிக்கொண்டு   தலைகீழாக தொங்க ஆரம்பித்தது.

மதிவாணன் 

    

Thursday 8 May 2014

உயிர் பிரியும் வேளை !!


அனைத்துக்கும் காரணமாகி, அனைத்தும் ஆகி, எங்கும் நிறைந்திருக்கின்ற, ஆதியும் அந்தமுமில்லா பரம்பொருளின் பேருண்மைப் பற்றி எண்ணற்ற ஞானிகளும் ரிஷிமார்களும் எவ்வளவோ சொல்லி வைத்திருக்கின்றனர்
பரமாத்மாவே நம்முள்ளும் ஆத்மனாக இருக்கிறார், ஜீவனாக ஒளிர்கிறார் என்பதை ஒவ்வொருவரும் தத்தம் அனுபவங்கள் வாயிலாக தாம் அறிந்த தம் ஆத்ம அனுபவத்தையும்  நமக்குச் சொல்லியிருக்கின்றனர்.

நாம் அறிந்த அண்மைகால ஞானிகள், ராமகிருஷ்ண பரமஹம்சர், அன்னை சாரதா தேவி, சுவாமி விவேகானந்தர் போன்றோர்களும் இன்னும் பல ஞானிகளும் இந்த ஆத்ம அனுபவத்தை உணர்ந்து உலகுக்கு உரைத்தவர்கள். 

ரமண மகரிஷி 


 தமிழகத்தின் ரமணர் என்கிற மகரிஷி,     ஜீவிதத்தை மட்டுமன்றி, மரணத்தையும் தம் அனுபவத்தால் உணர்ந்து அனுபவித்து உரைத்த ஞானி ஆவார்.  ஞானியாக மலர்ந்த பின் அல்ல , வெங்கட்ராமனாக வாழ்ந்த காலத்திலேயே இந்த அனுபவத்தை அவர் அடைந்திருக்கிறார்.

ஆத்மாவை உணர்ந்து , அல்லது தான் யார் என்பதை உணர்ந்து, ஜீவன் என்கிற பேருண்மையை அறிந்த     சாட்சியமாக வாழ்ந்திருக்கிறார்.  

1896ம் வருடத்தில் மதுரையில் தன் சித்தப்பா வீட்டில் முதல் மாடியில் அறை ஒன்றினில் அவர் தனித்திருந்தபோது, தான் இப்போது மரணம் அடையப் போகிறோம் என்ற மிகப்பெரிய உணர்வுக்கு ஆளாகியிருக்கிறார். 

ஆரம்ப பய உணர்வு மறைந்து, பதற்றமினறி , அமைதியாய் இப்போது என்ன செய்வது என்று யோசித்து, அவருக்குள்ளாகவே சொல்லிக் கொள்கிறார்,

‘இப்போது மரணம் என்னை நெருங்குகிறது. மரணித்தல் என்றால் என்ன?  இந்த உடல் இறந்து போகப்போகிறதா?’ கவனித்துப்பார்ப்போம்..’ மனதில் நினைத்த அந்த நொடியில் அவர் தன் உடலை சாய்த்து , தளர்த்திக் கொண்டு, கைகால்களை நேராக வைத்துக் கொண்டு, மரணம் சம்பவிப்பதை உணர ஆரம்பித்தார். அவர் உடலை விட்டு  வெளியில் தனியாக தன்னை உணர ஆரம்பித்தார். 

“நல்லது இப்போது இந்த உடல் இறந்து விட்டது. இனி இது சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு, எரியூட்டப்பட்டு சாம்பலாகப் போகப் போகிறது. சரி,  இந்த உடல் இறந்து விட்டது.  ஆனால் நான் இறந்து விட்டேனா?  

இந்த உடல் செயலற்றதாகிவிட்டது. ஆனால்  என் நினைவுகள், நான் என்கின்ற இந்தத் தன்மை எனக்கிருக்கின்றனவே?.. அப்படியானால் ‘இந்த நான்’  இவ்வளவு நாள் இந்த உடலில்  ஜீவனாக வாழந்திருக்கின்றேன்.  மரணம் இந்த நானாகிய ஜீவனை எதுவும் செய்யவில்லை.. அப்படியென்றால் மரணமில்லாத ஆத்மாவே நான்”.

பகவான், ரமண மகரிஷி என்று தன் பக்தர்களால் அழைக்கப்படுகிற அந்த மகாஞானி, தன் உடலுக்கு ஏற்பட்ட அந்த இறப்பு என்கிற தன்மையை உணர்ந்திருக்கிறார்.. ஆனால் உண்மையில் இறக்கவில்லை.. அவர் உடலுக்கு ஏற்பட்ட இறப்பு என்ற அனுபவத்தை அடைந்திருக்கிறார்.. உடலுக்கு வெளியே ஒதுங்கி நின்ற  தன் ஆத்ம அனுபவத்தையும் வெளிப்படையாக விவரித்திருக்கிறார். 

இதைப் போலவே வேதகால முனிவர்களும் ஆத்ம ஞானத்தை அடைந்திருக்கின்றனர். எல்லோருமே இதை உணர முடியும் என்றும் அறிவித்திருக்கின்றனர்.  பகவத் கீதையிலும், பதஞ்சலி யோக சூத்திரத்திலும், ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசங்களிலும் இந்த உண்மையை உணர்வதற்குண்டான அடிப்படை ஆன்மிக சாதகங்கள் (பயிற்சிகள்) கூறப்பட்டுள்ளன. 

மரணத்தை பற்றிய எண்ணம்

நம் ஒவ்வொருவரின் அடையாளமும் நாம் உண்மையான ஆத்மா என்பதுதான். அந்த ஆத்மாவை ஆயுதங்களால் அழிக்க முடியாது, நெருப்பால் எரிக்க முடியாது, நீராலும் நனைக்க முடியாது,  காற்றாலும் உலர்த்த முடியாது. 

ஸ்ரீராமகிருஷ்ணரிடம் சீடர் கேட்கிறார்.. ‘ஸ்வாமி இந்த உண்மையை நான் எப்போது உணர்வேன்?’

குரு கூறுகிறார்.. ‘அதை  அறிய நீ முயற்சிக்க வேண்டும். உனக்குள் தேடல் வேண்டும்.’

ரமண மகரிஷியின் வாழ்க்கையில் இந்தத் தேடுதலே நிகழ்ந்தது.  தன்னை உணர்தல் என்கிற  அந்த ஆன்மிக அனுபவப்பெருக்கில்  அவரது அகங்காரங்கள் (ஈகோ)யாவும் அடித்துச் செல்லப்பட்டது. 

தனது சொந்த மரணத்தை  உணர்ந்த தருணத்தில் வெங்கட்ராமன் என்கிற சிறுவன்  ஞானியாய், ரிஷியாய் மலர்ந்து பரிணமிக்கிறான். 

‘மரணம்’ என்கிற   நிகழ்வின் தாக்கம்  நெஞ்சத்தில்  மோதும்போது ஒவ்வொரு மனிதனும்  தன்னை கொஞ்சமாவது மேன்மைப் படுத்தக்கொள்ளவே விரும்புவான்.   ஆன்மிகத்தில் நாட்டம் கொள்வான்..  ஈர இதயம் உள்ளவனாய் திகழ்வான். 

இதைத்தான் விவேகாநந்தர் தன்  சீடர்களிடம் கூறுகிறார், ‘மரணத்தை பற்றிய எண்ணங்கள் வரும்போது, அங்கே ஒரு புதிய வாழ்க்கை உதயமாகிறது.’ 

சீடன் கேட்கிறான்..  ‘ மரணத்தை பற்றி எண்ணுகிற போது  ஆத்மா அதிர்ந்து போகாதா, அந்த நினைவே நெஞ்சத்தை  இருளில்  மூழ்கடித்து விடாதா?’

ஞானி கூறுகிறார்...  ‘ஆம் ஆரம்பத்தில்  இதயம் அதிர்ந்துதான்  போகும்.. ஆனால் மரணத்தை பற்றி தொடர்ந்து எண்ணும் போது அதுவே ஒருவன் புதிய உயர் வாழ்க்கையை வாழக் காரணமாய் அமைகிறது.. அதிகம் சிந்திக்க வைத்து அவன் எண்ணத்தை மேம்படுத்துகிறது.’ 

இங்கு எல்லாமே  அழிந்து போகும்.. மாயை, மாயை  எல்லாம் மாயை என்பதை உணரவைக்கும் மந்திரச்சாவிதான் மரணம். 

மாயை: எல்லாம் மாயைகள்! என்ன ஒரு ஆணித்தரமான அறிவிப்பு?! ஆனால்   அதுதான் உண்மை. புத்தியில் அறைந்து சொல்லும் உண்மை. 

நான் எனது என்பதெல்லாம் மாயை.  நான் என்ற அகந்தையை அழித்து பண்பட்ட மனிதனாக மாற்றுவதால் மரணம் ஒரு நல்ல சிநேகிதனாகிறது. 

மரணம், வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் விலைமதிப்பற்றதாக  நினைக்க வைக்கிறது. ஒவ்வொரு நாளையும் அர்த்தமுள்ளதாய் அமைத்துக் கொள்ள வைக்கிறது.

எப்போது வேண்டுமானாலும் மரணம் நம்மை அணுகும் என்பதை உணர்ந்து கொள்ளும் போது, அங்கே கோபப்பட நேரமில்லாமல் போகிறது, வெறுப்பதற்கும் எண்ணங்கள் எழாமல் போகிறது. நாம் அன்புசெலுத்தும் உறவுகளிடம்  சண்டை போடும் காரணங்கள் இல்லாமல் போகிறது. 

மனித வாழ்வின் லட்சியத்தை நோக்கிய பயணத்தை துவக்கி வைக்கிறது, அதாவது  அழிவில்லா ஆத்மனை உணரும் உந்துதல் ஏற்படுகிறது. அது நம் பிறப்புரிமை ,முன்னுரிமை என்பதை நினைவுப்படுத்துகிறது. 

நாம் அழிவற்ற ஆத்மா என்கிற எண்ணம் நம்முள் அன்பையும், உற்சாகத்தையும், நம்பிக்கையையும் விதைக்கிறது. நம்மைச் சுற்றியுள்ளவர்களை நேசிக்க வைக்கிறது.

இறக்கும் கலை 

மரணத்தைப்பற்றிய எண்ணம் மரணத்தைப் பற்றிய பயத்தினை போக்குகிறது  என்பது மட்டுமல்ல, நாம் அவசியம் அறிந்து கொள்ள வேண்டியது மரணிப்பது எப்படி என்பதைப்பற்றியும்தான்.  மரணத்தை எதிர்கொள்ளலும், மரணித்தலும்,  ஒரு கலைதான்.

எப்படி இறக்க வேண்டும் என்ற ரகசியத்தை பகவத் கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் கூறியுள்ளார்.(8 : 12-13)

 கிருஷ்ணர் அறிவுறுத்துகிறார்..

“மரண வேளையில் என்னை நினைத்துக் கொள்ளுங்கள். புலன்களின் கதவுகளை முழுமையாக மூடி விட்டு, மனதை இதயத்தில்   மையப் படுத்துங்கள்.  தியான நிலையில் மனதை குவித்து  எல்லா சக்திகளையும் சிரசிடம் கொண்டு செல்லுங்கள். இந்த நிலையில் பரம்பொருளைக் குறிக்கின்ற  ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தை உச்சரியுங்கள். நீங்கள் உங்கள் லட்சியத்தை அடைவீர்கள்.”

‘மரணம் சம்பவிக்கும் காலத்தில் நம்முடைய புலன்களின் கதவுகள் முழுமையாய் சாத்தப்படுகின்றன என்று உபநிடதங்கள் கூறுகின்றன.

 நாம் சுய ஆத்ம உணர்வுடன் இருக்க வேண்டும் என விரும்பினால்  அந்த ஒரு முகப்படும் உணர்விலிருந்து நம்மை எதுவும்  பிரித்து விட முடியாது. ஏனெனில் அப்போது பார்ப்பதோ, கேட்பதோ, அல்லது அப்படி முயற்சிசெய்தாலும் அதுமுடியாது.  நம் மனம் முழுமையாக ‘நான்’  ‘சுயம்’ என்றெல்லாம் கூறப்படுகிற  ஆத்மனிடத்தில்   மையப்பட்டு லயித்திருக்கும். 

 நம்மில் பலர் இறக்கும் தறுவாயில் இருப்பவரைச் சுற்றி நின்றுகொண்டு அவர்களது புலன்களுக்கு விழிப்பூட்டும் நடவடிக்கையை மேற்கொண்டு,  இறை நினைவுடன், ஆத்மனுடன¢ ஒன்றியிருக்க முயலும் அவர்களின் மனதினை அதிலிருந்து விலக்கும் முயற்சியை செய்கின்றோம். அது தவறு. 

மரண காலத்தில், எல்லா சிந்தனைகளையும் நிறுத்தி விட்டு , தெளிந்த மனதுடன், மனம் முழுவதும் இறை சிந்தனையை நிரப்பிக் கொண்டு, மிகுந்த அன்புடன் இறைவனையும்,  சுற்றியுள்ள அனைத்து உயிர்களையும் பார்க்க வேண்டும். அப்போது மரணம் நிகழும் தருணத்தில்  இதயத்தில் இறைவனைத் தவிர யாரும் இருக்க மாட்டார்கள். 

சமீப காலத்திய  சம்பவங்கள்

பொதுவாகவே  ஸ்ரீ ராமகிருஷ்ணர், விவேகானந்தர் போன்ற ஆன்மிக விழிப்புணர்வு பெற்ற ஞானிகள் வெளிதோற்றத்தில் மற்றவர் போலவே காட்சியளித்தாலும், அவர்களின் நாடி நரம்புகளிலெல்லாம் சதா மந்திரங்கள் விழிப்புணர்வுடன் ஓடிக் கொண்டேயிருக்கும். இதயத்தின் ஆழத்தில் இறைவனின் நாமங்களே சுடர்விட்டுக் கொண்டிருக்கும். 

அத்தகைய ஞானிகள் மூவரின் இறுதி கால நடவடிக்கைகளை பார்ப்போம்.

நாராயண மகராஜ்

புனித அன்னை சாரதா தேவியின் சீடராக இருந்து ஆன்மிக மேன்மை அடைந்தவர்.

ஸ்வாமிக்கு வயதாகிவிட்டது.. ஏறக்குறைய 89 அல்லது 90 வயது இருக்கலாம்.  நோயினால் உடல்நிலை பலவீனம் அடைந்திருந்தார்.  இறுதி நாட்களில் கல்கத்தாவிலிருக்கும் மருத்துவ மனையில் அவரைச் சேர்த்திருந்தார்கள். 

 சகதுறவிகள்  துறவிகள் ஒவ்வொருவராக தினசரி தங்களுக்கு வழங்கப்பட்ட நேரத்தில்  வந்து அவருடன்  தங்கியிருந்து கவனித்துவிட்டுச் செல்வார்கள்.   மகராஜின் உடல் பலவீனப்பட்டிருந்ததால் பெரும்பாலும் படுக்கையில் சாய்ந்தபடிதான் இருப்பார்.

 அந்த அறையில் அவரோடு மூன்று அல்லது நான்கு நோயாளிகளின் படுக்கைகள் இருந்தன. ஆனாலும் அவர்களுடன் மகராஜ் பேசுவதில்லை. பேசினாலும் ஓரிரு சொற்கள்  அவ்வளவுதான். 

ஒரு நாள் , சக துறவிகள் சந்திக்க வரும் நேரத்திற்கு சற்று முன்பாக அவர் தனது அறையில், மற்ற படுக்கைகளில் சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருந்தவர்களை பெயர் சொல்லி அழைத்து, எனது சகோதரத் துறவிகள் இன்னும் சிறிது நேரத்தில்  என்னைச் சந்திக்க  வருவார்கள்.. அவர்களிடம் , என் அன்னை  வந்துவிட்டார் ( புனித அன்னை)  நான் அவருடன் புறப்பட்டுச் செல்கிறேன் என்று தெரிவித்துவிடுங்கள்’  என்று கூறிவிட்டு அமைதியாய் படுக்கையில் சாய்ந்து விட்டார். 

உடலை உகுத்துவிட்டுச் செல்லுமுன்  இறுதியாய் அவர் பேசிய வார்த்தைகள் இவைதான்.  இவ்வாறு ஸ்வாமி நாராயண மகராஜ் , புனித அன்னையுடன்   அவரது உலகிற்குச் சென்று, அழிவில்லாத நிலை அடைந்தார்.

 தன் வாழ்நாள்  முழுதும்  மனிதநேயத்தை தன் அகத்துள் கொண்டிருந்த அவரது வாழ்க்கை, அதிலிருந்து வெளிப்பட்ட அவரது   ஆன்மிக மேன்மை இவற்றை  அவரது மரணம் நமக்கு  உணர்த்துகிறது.   முழு விழிப்புணர்வுடன் புனித அன்னையின்    நினைவுடன்  அவர் தன் மரணத்தை நிகழ்த்திக் கொண்டார். 

சங்கரரின் ‘காலடி’யிலிருந்து  -ஒரு துறவி- 

இன்னொரு நிகழ்வு, ஆதி சங்கரர் பிறந்த காலடியிலிருந்து வந்த 35 வயதுடைய துறவியைப் பற்றியது.  1963ம் வருடம் சுவாமி விவேகானந்தரின் நூறாவது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக கல்கத்தாவின் அருகிலிருக்கும் பேலூர் மடத்திற்கு இத்துறவி  வருகை புரிந்தார். 

திரும்பும் வழியில் நாக்பூர் ஆஸ்ரமத்தில் தங்கினார். அப்போது அந்த ஆசிரமத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் ஸ்வாமி சிவானந்தா அவர்களின் சீடரான ஸ்வாமி பாஸ்கரேஸ்வரானந்தா. ஒரு நாள் காலடி துறவி, ஸ்வாமி பாஸ்கரேஸ்வரானந்தாவுடன்  கோயிலுக்குச் சென்றார்.. அது ஆஸ்ரமத்தை விட சற்று உயரமான இடத்தில் இருந்தது.  

உயர ஏறும்போது கால் தவறி துறவி தவறி விழுந்து விட்டார். தலையில் பலத்த அடியுடன் நினைவிழந்துவிட்டார். 

ஒன்பது நாட்கள் ஆகியும் அவருக்கு நினைவு திரும்பவில்லை. நினைவில்லாத அந்த நிலையிலும் அவர் எப்போதும் உச்சரிக்கும் ஒரு மந்திரத்தை உச்சரித்துக் கொண்டேயிருந்தார். இறைவனின் திருநாமத்தை உச்சரிக்கும் இந்த முறையை அஜபஜபம் என்பார்கள். 

சதா உச்சரிக்கும் இந்த ஜபமானது ஒருவரின் மூச்சுக் காற்றுடன் இணைந்தே ஒடிக்கொண்டிருக்கும்.  அப்படியே ஒன்பது நாட்களும் நினைவற்ற நிலையிலும் அவரது உதடுகள் அந்த மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தது. 

இந்த நிலையில் உள்ள மனிதன் தான் எங்கே சென்றாலும்,என்ன செய்தாலும் இறைவனை எப்போதும் தன்னுடன் இணைத்துக் கொண்டிருப்பான்.

ஒன்பது நாட்களுக்குப் பிறகு   காலடியிலிருந்து வந்த அந்தத் துறவி மரணம் அடைந்தார்.  ஆஸ்ரமத்திலிருந்த துறவிகள், அவரை கவனித்த மருத்துவர்கள், செவிலியர்கள், ஏனையோரும் முற்றிலுமாய் நினைவிழந்த மனிதன் தொடர்ந்து மந்திரங்கள்  உச்சரித்தது கண்டு மிகுந்த ஆச்சரியப்பட்டு போயினர். அவர் சாதாரண மனிதர் அல்ல.. இறைவனின் பெயரை உச்சரித்த படி உயிர் துறந்த  உன்னதத் துறவி. 

இராமகிருஷ்ணா மடத்தின் அனைத்து துறவிகளும் பக்தர்களும் இணைந்து அவரது இறுதி காரியத்தை  நிறைவேற்றி வைத்தனர்.

புவனேஸ்வரில் ஒரு சமையற்காரர்

மூன்றாவது நிகழ்வு உதி என்ற சமையற்காரரைப் பற்றியது.   

புவனேஸ்வர் ராமகிருஷ்ணா ஆஸ்ரமத்திற்கு ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடி சீடரும், ராமகிருஷ்ண மடங்களின் முதல் தலைவருமான ஸ்வாமி பிரமானந்தா அவர்கள் அடிக்கடி வருகை தருவது வழக்கம்.  ஆஸ்ரமத்தில் சமையற்காரராக பணிபுரிந்த உதி என்பவர் ஸ்வாமி அவர்களின் சீடர். 

வயதான பின் தன் ஆசிரமப் பணியிலிருந்து ஓய்வுப் பெற்ற உதி அருகிலிருந்த தனது கிராமத்திற்கு சென்று தங்கி விட்டார். ஆனாலும் தன் குருநாதரின் பிறந்த நாளின் போது ஆசிரமத்திற்கு தவறாமல் வந்து விடுவார். 

ஒரு முறை ஸ்வாமிஜியின் பிறந்த நாளுக்கு சில நாட்கள் முன்னதாகவே அவர் ஆசிரமத்திற்கு வந்தார். பஞ்சாங்கம் தாருங்கள் பார்க்க வேண்டும் என்று கேட்டார். அதைக் கவனமாகப் பார்த்து விட்டு தன் கிராமத்திற்கு திரும்பிவிட்டார். 

ஸ்வாமிஜின் பிறந்த நாள் வந்தது. உதி கலந்து கொள்ள வில்லை. அனைவருக்கும் ஆச்சரியம்.. ஏன் உதி வரவில்லை என்று விசாரித்த போது.. ஸ்வாமிஜியின் பிறந்தநாளன்று அவர் மரணம் நிகழ்ந்திருப்பது தெரிந்தது. 

தன் குருவின் பிறந்த நாளன்று அவர் தன்னுடைய மரணநாளை தேர்ந்தெடுத்திருப்பது அனைவருக்கும் அப்போதுதான் தெரிந்தது.  தன் குருவின் முழு உணர்வுடன் அவர் பிறந்த புனித நாளில் குருநாமத்தை உச்சரித்தபடி, உதி   தன் மரணத்தை நிகழ்த்திக் கொண்டார். அவரது ஆன்மா உயர்ந்த  ஆன்மா, ஒளிபொருந்திய ஆன்மா என்பதை நம்மால் அறிந்து கொள்ள  முடிகிறது. 

ஒருவரின் ஆன்மா ஒளிபெற்றிருப்பது  என்பது அவரின் கல்வி மற்றும் அறிவினைப் பொறுத்தல்ல.

கடவுளை நினைப்பதாலேயே ஒருவர் தன் ஆன்மாவை ஒளிபெறச் செய்து கொள்ளமுடியும். நம் தற்காலத்திய கண்ணோட்டத்தின் படி பார்த்தாலும் இராமகிருஷ்ண பரமஹம்சர் கல்வியறிவு பெற்றவர் அல்ல. படித்த  பல அறிஞர்களுடன் கலந்துறையாடியிருக்கிறார்.  ஆனால் அவர்களில் பலரின் ஆன்மா சுடர் ஒளிகுன்றியே யிருந்திருக்கிறது. 

ஒருவன் பண்டிதனா, பாமரனா, துறவியா என்பதைப் பொருத்தல்ல.. அவன் தூய இதயம் உள்ளவனா,  தன்னைப் போலவே பிறரையும், பிறருக்குள் தன்னையும் காண்பவனா  என்பதைப் பொருத்தே அவன் ஆன்மா ஒளிபெறுகிறது.  

ஆன்மிகப் பயிற்சி என்பது கடவுளே ஒருவரே பெரியவர், அவரே அனைத்துக்கும் உடைமையானவர் என்ற எண்ணத்துடனேயே ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதே ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்களின் அறிவுரையாகும். 

அப்படி நினைக்கும் போதே நான் , எனது என்ற அகங்காரம் நம்மை விட்டு விலகிவிடும்.. நம் ஆன்மிக நிலை வளர்ச்சியுறும், ஆன்மா ஒளிபெறும். 

கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்..(8:16)

இந்த பிரபஞ்சத்தில் என்னோடு இணைந்து கொள்பவரைத் தவிர,  எல்லா உயிர்களுக்கும் மறுபிறவி உண்டு. 
  *  *
மரணத்தைப் பற்றிய சிந்தனைகள் மனித வாழ்க்கையை செம்மையாக்குகிறது. சுயநலம் தொலைந்து போகிறது..  சுய நலம் தொலையும் போது  ஆன்மிக முன்னேற்றம் ஏற்படுகிறது. ஒருவனின் ஆன்மா ஒளிபெறுகிறது.  

மரண காலத்தில் இறைவனைப் பற்றிய எண்ணம் மறுபிறப்பற்ற உன்னத உலகிற்கு  அழைத்துச் செல்கிறது.  

இதுவே .. மனித வாழ்க்கையை உன்னதமாய் நிறைவு செய்யும் இறக்கும் கலை.  
   *     *       *
 இப்போதும் ஒன்றும் தாமதமாகிவிடவில்லை.. தினசரி இறைவனின் நினைவோடு செயல்படுங்கள். பிடித்த மந்திரத்தை அல்லது நாமாவளியை எப்போதும் மனதிற்குள் ஜபித்துக் கொண்டிருங்கள்.. உங்கள் சுவாசத்தோடு அது இரண்டறக் கலந்திருக்கட்டும்.. ஆன்மா ஒளிபெறட்டும்.

  ‘ஓம் க்லீம் ஸ்ரீகிருஷ்ணாய நமஹ’

-மதிவாணன் 

ஸ்ரீ கால பைரவர் அஷ்டோத்ர சதநாமாவளி

1. ஓம் பைரவாய நம
2. ஓம் பூத நாதாய நம
3. ஓம் பூதாத்மனே நம
4.ஓம் பூத பாவநாய நம
5.ஓம் க்ஷேத்ரதாய நம
6. ஓம் க்ஷேத்ர பாலாய நம
7.ஓம் க்ஷேத்ர ரக்ஞாய நம
8. ஓம் க்ஷத்ரியாய நம
9. ஓம் வீராஜே நம
10. ஓம் ஸ்மசானவாஸிநே நம
11.ஓம் மாம்ஸாசினே நம
12. ஓம் ஸர்ப்பராசயே நம
13. ஓம் ஸ்மராந்தக் ருதே நம
14. ஓம் ரக்தபாய நம
15. ஓம் பானபாய நம
16. ஓம் ஸித்தாய நம
17. ஓம் ஸித்தி தாய நம
18. ஓம் ஸித்த ஸேவிதாய நம
19. ஓம் கங்காளாய  நம
20. ஓம் காலசமனாய நம
21. ஓம் கலாய நம
22. ஓம் காஷ்டாய நம
23. ஓம் தனவே நம
24. ஓம் கவயே நம
25. ஓம் த்ரிநேத்ரே நம
26. ஓம் பஹு நேத்ரே நம
27. ஓம் பிங்கள லோசனாய நம
28. ஓம் ஓம் சூல பாணயே நம
29. ஓம் கட்க பாணயே நம
30. ஓம் கங்காளிநே நம
31. ஓம் தூம் ரலோசனாய நம
32. ஓம் அபீரவே நம
33.  ஓம் பைரவாய நம
34. ஓம் நாதாய நம
35.  ஓம் பூதபாய நம
36. ஓம் யோகிநீ பதயே நம
37. ஓம் தநதாய நம
38. ஓம் தநஹாரிணே நம
39. ஓம் தநவதே நம
40. ஓம் ஓம் ப்ரீதி பாவனாய நம
41. ஓம் நாகஹாராய நம
42. ஓம் நாக பாசாய நம
43. ஓம் வ்யோம கேசாய நம
44. ஓம் காலப்ருதே நம
45. ஓம் காலாய நம
46. ஓம் கபாலமாலிநே நம
47. ஓம் கமநீயாய நம
48. ஓம் கலாநிதயே நம
49. ஓம்  த்ரிலோசனாய நம
50. ஓம் ஜ்வலந்நேத்ராய நம
51. ஓம் த்ரிசிகிநே நம
52. ஒம் த்ரி லோகபாய நம
53. ஓம் த்ரி நேத்ர தந்யாய நம
54. ஓம் ஓம் டிம்பாய நம
55. ஓம் சாந்தாய நம
56. ஓம் சாந்த ஜனப்ரியாய நம
57. ஓம் வடுகாய நம
58. ஓம் வடு வேஷாய நம
59.ஓம் கட்வாங்கம வரதாரகாய நம
60. ஓம் பூதாத் யக்ஷாய நம
61. ஓம் பசுபதயே நம
62. ஓம் பிக்ஷு தாய நம
63. ஓம் பரிசாரகாய நம
64. ஓம் தூர்தாய நம
65. ஓம் திகம்பராய நம
66. ஓம் சூராய நம
67. ஓம் ஹரிணாய நம
68. ஓம் ஓம் பாண்டு லோசனாய நம
69. ஓம் ப்ரசாந்தாய நம
70. ஓம் சாந்திதாய நம
71. ஓம் ஸித்தாய நம
72. ஓம் சங்கராய நம
73. ஓம் ப்ரிய பாந்தவாய நம
74. ஓம் அஷ்ட மூர்த்தியே நம
75. ஓம் நிதீ சாய நம
76. ஓம் க்ஞான சக்ஷுவே நம
77. ஓம் தபோமாயாய நம
78. ஓம் அஷ்டாதாராய நம
79. ஓம் ஷடாதாராய நம
80. ஓம் ஸர்ப்ப யுக்தாய நம
81.ஓம் ஸிகி சகாய நம
82. ஓம் பூத ராய நம
83. ஓம் பூத பாதீசாய நம
84. ஓம் பூத பதயே நம
85. ஒம் பூதராத்மஜாய நம
86.ஓம் கங்கால தாரினே நம
87. ஓம் முண்டிநே நம
88. ஓம் நாக யக்ஞோப வீத வதே நம

89. ஓம் ஜ்ரும்பணோ மோஹந ஸ்தம்பீ மாரண
        க்ஷோப நாய நம
90. ஓம் ஸுத்த  நீலாஞ்சன ப்ரக்யாய நம
91. ஓம் தைத்யக்நே நம
92. ஓம் முண்ட பூஷிதாய நம
93. ஓம் பலி புஜே நம
94. ஓம் பலிபுங் நாதாய நம
95. ஓம் பாலாய நம
96. ஓம் அபால விக்ரமாய நம
97. ஓம் ஸர்வ பாத் தாரணாய நம
98. ஓம் துர்க்காய நம
99. ஓம் காமிநே நம
100. ஓம் கலாநிதயே நம
101. ஓம் காந்தாய நம
102. ஓம் காமிநீ வசக்ருதே நம
103. ஓம் வசிநே நம
104. ஓம் ஸர்வ ஸித்தி ப்ரதாய நம
105. ஓம் வைத்யாய நம
106. ஓம் ப்ரபவே நம
107. ஓம் துஷ்ட பூத நிஷேவி தாய நம
108. ஓம் விஷ்ணுவே நம


ஓம் அஷ்டோத்ர சத நாமாவளி சம்பூர்ணம்
                  ஓம்



Tuesday 6 May 2014

தாமத திருமணம் ஏன்?


திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. நம்மில் பலருக்குச் சொர்க்கம் இருக்கும் திசை கிழக்கா, மேற்கா, தெற்கா, வடக்கா தெரியாது. 

பெண்ணுக்கு 18ம், ஆணுக்கு 21 வயதும் திருமணம் செய்யலாம் என்று அரசாங்கம் சொல்கிறது. ஆனால், இவ்வயதுகளைத் தாண்டியும் நவக்கிரக நாயகர்களின் கருணை கிட்டாமல் கனவுகளோடு காத்திருப்போர் ஆயிரமாயிரம் பேர். 

ஏன் இந்த நிலை?

காரணங்கள் பல. இருக்கட்டும், சில தலைமுறைகளுக்கு முன்பு வரை பால்ய திருமணம் என்ற வழக்கம் இருந்தது. ஆணோ, பெண்ணோ சின்னஞ்சிறார்களாய் இருக்கும்போதே, இவனுக்கு இவன் என்று நிச்சயித்து வைத்துவிட்டுப் பின்னால் அதற்குரிய தகுதி பெறும் காலகட்டத்தில் திருமணம் செய்த பழக்கம் உண்டு.

இன்றோ முப்பது வயதைத் தாண்டியும் முதிர்கன்னிகளாய் இருக்கிறார்கள். நாற்பதைக் கடந்து நரை தட்டிய ஆண்களும் இருக்கிறார்கள். கல்யாணம் என்பது கானல் நீராக இருக்கிறது. 

காரணமென்ன?

அன்று இருந்ததும் அதே ஒன்பது கிரகங்கள். இன்று இருப்பதும் அதே ஒன்பது கிரகங்கள். அன்று இளமைத் திருமணத்திற்கு வழிவிட்ட கிரகங்கள், இன்று நந்தி மாதிரி குறுக்கே நிற்கிறதே - ஏன்? 

கேள்வி எழுகிறதா.

அன்று திருமணம் என்பது ஒரு சடங்கு. தன் சொந்த பந்தங்கள் விட்டுப் போய்விடக்கூடாது என்பதற்காகவும், சொத்து சுகம் கைமாறி போய்விடக்கூடாது என்பதற்காகவும் பெரியவர்கள் கூடி இச்சடங்கை நடத்தினார்கள்.

பின்பும் அவர்கள் வாழ்வால் இணைந்து இல்லறத்தில் நல்லறம் கண்டார்களா? பெயர் சொல்ல வம்சம் விளங்க பிள்ளைகளை ஈன்றெடுத்தார்களா? என்பதெல்லாம் கேள்விக்குறி - போகட்டும்.

இளமைத் திருமணம் என்பது பெண்ணுக்கு 25ம், ஆணுக்கும் முப்பதிலும் நடந்தால் கூட போதுமானது. 

சிலருக்குத் திருமணம் நடக்கும் பெண்ணின் தகப்பனார், ஜோதிடரிடம் ஜாதகத்தைக் கொண்டு போனால் சுக்கிரன் அங்கே பார்க்கிறான், சனி இங்கே பார்க்கிறான். ராகுவும் கேதுவும் அங்கே இருக்கிறார்கள், இங்கே இருக்கிறார்கள் என்று ஜோதிடர் சரடு விட்டுக் கொண்டிருப்பார். பெண்ணோ எதிர்த்த வீட்டுப் பையனைப் பார்த்து அழைத்துக் கொண்டு போய்விடும், காதல் என்ற பெயரில். சரி விடுங்கள்.

மனிதனின் வாழ்க்கையில் எது நடக்க வேண்டும் என்றாலும் கிரகங்களின் அனுசரணை இல்லாமல் முடியாது. ஒருவருக்குக் குறிப்பிட்ட தசா புத்தியில் கெட்டது நடக்க வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். 

பாதகத்தைச் செய்ய வேண்டிய கிரகம் நேரில் வந்து “டேய் மானிடா உன்னை என்ன செய்கிறேன் பார். ஹாஹாஹா” என்று பி.எஸ். வீரப்பா மாதிரி கர்ஜிக்கும்? அல்லவே.

அந்த நேரத்திற்கு அந்த சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி, குணாதிசயத்தோடு கூடியவரின் நட்பை நமக்கு ஏற்படுத்தித் தரும். அவர் சொல்வதே நமக்கு வேத வாக்காகத் தெரியும். 

அவர் அழைத்துச் செல்லும் பாதையில் நமக்கு விதிக்கப்பட்ட கர்மவினையின்படி நடக்க வேண்டியது, நடந்தே தீரும். இது காலத்தின் கட்டாயம்.

இதையெல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால் தாமத திருமணத்திற்குரிய கிரக நிலைகளை அமையப்பெற்ற ஜாதகரை அவரின் தாய் தந்தையரை சந்தித்தால் அதற்குரிய விளக்கம் தெரிந்துவிடும்.

என் பொண்ணு டிகிரி படிச்சிருக்கு. உத்தியோகம் பார்க்கிற பையனா இருந்தா பரவாயில்லை. இப்படிச் சொல்லியே வரும் நல்ல வரன்களைத் தட்டிக் கழித்துக் கொண்டிருப்பார்.

இன்னொருவர் பொண்ணு சிகப்பா சினிமா ஸ்டார் மாதிரி இருக்கணும். 50 பவுனுக்கு மேலே நகை போடணும். என் புள்ளைக்கு என்ன சிங்கக்குட்டி என்பார்.

ஆக இந்த வசனம் எல்லாம் கிரகங்களின் கைங்கர்யம் தான். ஜாதகப்படி தான் செய்ய வேண்டிய பலனைச் செய்ய ஜாதகரின் மனதை ஆக்கிரமித்துக் கொண்டு நடத்தும் லீலா வினோதங்கள்.

இனி தாமதத் திருமணத்திற்கு உரிய கிரக நிலைகளை ஆராய்வோம்.

குடும்பஸ்தானம் என்று சொல்லக்கூடிய இரண்டாம் இடத்தில் நீச்சம் பெற்ற கிரகங்கள் அமரும்போது குடும்பம் அமைய தடை வரும்.

களத்திர ஸ்தானாதிபதி எனும் 7க்குடையவன் நீச்சம் பெற்றால் மனைவி அல்லது கணவன் வர கால தாமதம் கண்டிப்பாக உண்டு.

7ல் நீச்சம் அல்லது வக்கிரம் பெற்ற கிரகம் இருந்தாலும் முன் சொன்னதே.

களத்திரக்காரகன் சுக்கிரன் மறைவு ஸ்தானங்களில் அமர்ந்து அசுபர் பார்வை பெற்றால் திருமணம் தாமதமாகும்.

7ஆம் பாவத்திற்கோ, ஏழாம் அதிபதிக்கோ சனி சேர்க்கை அல்லது பார்வை கிட்டினால் இல்லறம் அமையத் தடை.

பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த ஆணிற்கோ, பெண்ணிற்கோ பிறந்த ஜாதகத்தில் சனி ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் இருந்தால் திருமணம் தாமதமாகும்.

சுக்கிரன் 2ல், 7ல் கெட்டால் திருமணம் தடையாகும்.

7ஆம் அதிபதியோடு ராகு கேது சேர்க்கை ஏற்பட்டாலும் தாமதத் திருமணமே.
சுக்கிரன் நீச்சம் பெற்று சனி செவ்வாய் பார்வை சேர்க்கை பெற்றாலும், சனி செவ்வாய் 7ல் இருந்து சந்திரனும் சுக்கிரனும் ஒருவருக்கு ஒருவர் மறைவு பெற்றாலும் காலம் கடந்த திருமணம்.

ராகு, கேது 1, 7ல் இருந்து சுக்கிரன் சம்பந்தம் பெறுவது இல்லறத் தடை.

7ஆம் அதிபதி சூரியனோடு சேர்ந்து அஸ்தமனம் பெற்றாலும் அஃதே.

7ஆம் பாவம் பாவ கர்த்தாரி யோகம் பெறுவது குற்றம்.

சனி சந்திரன் 9ல் இருப்பதும் நல்லதல்ல.

மேஷ லக்னமாகி சுக்கிரன் அஸ்வினி நட்சத்திர சாரம் பெறுவதும் தவறு.

7ஆம் அதிபதி நவாம்சத்தில் நவாம்ச லக்னத்திற்கு 12ல் இருந்தாலும் திருமணம் தாமதமாகும்.

குருவும், சந்திரனும் 6, 8, 12ல் நீச்சம் பெற்றாலும்,

குரு, சூரியன் இணைந்து 1, 7ல் இருப்பதும்,

லக்னத்திற்கோ சந்திரனுக்கோ 7ஆம் பாவத்தை சுபர்கள் பார்க்காமல் பாவர்கள் சம்பந்தம் பெறுவதும்,

குரு, சுக்கிரன், சூரியன் இவர்களில் ஒருவர் 1ல் இருந்து சனி, 12ல் இருப்பதும் தாமத திருமணத்திற்குரிய கிரக நிலைகளே.

இங்கே சொன்ன கிரகநிலைகள் உங்களுக்கு இருப்பதாக வைத்துக்கொண்டாலும், எப்போது திருமணம் நடக்கும், எந்த திசா புத்தி அதற்க்கு வழிவிடும்? என்பதை அறிந்து கொள்ள வேண்டுமா? 

ஒரு கேள்வியை எனக்கு தட்டி விடுங்கோ. பதில் சொல்லறேன்.

கேள்விகளை அனுப்ப இதுதான் லிங்க்  தினமணி ஜோதிடம் 

Monday 5 May 2014

குரு பகவான் தரும் யோகம்

தன்னை உணர என்ன வழி?

ஒன்னு தவம் செய்யனும் அல்லது அவர் ஜாதகத்தில் குருபகவான் நல்ல நிலையில் இருக்கணும்.  இருந்தால்,  ஜாதகருக்கு தன் அந்தஸ்தைப் பற்றிய அக்கறை அதிகம் இருக்கும்.  எங்கேயும் எதிலேயும் அவமரியாதையை சந்தித்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார்.

நாலுபேர் மதிக்கத்தக்க வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தால் போதாது, வாழ்வார், வாழ்ந்து காட்டுவார்.  அதில் ஒன்றும் சந்தேகம் தேவையில்லை. 

இது இப்படியே இருக்கட்டும்.  சோமபானம் சுராபானம் தெரியுமா? தெரியாதா?.. 

அதுசரி... இது இந்திரன் காலத்து போதை வஸ்து.  அல்லது இந்திரன் காலத்து பெயர்.  இப்போதைய பெயர் பீர், பிராந்தி, விஸ்கி, ரம், ஒயின், வோட்கா. 

நம்மை சுற்றி இந்த போதை வஸ்துக்களை பயன்படுத்துவோர் ஏராளம். அப்படி பயன்படுத்துவோருக்கு எதிராக பயன்படுத்தாதவர்கள் சொல்லும் செல்லப் பெயர் என்ன?

குடிகாரன்.

சரி... குடிகாரர்களிலேயே மூன்றுவகை இருக்கு.  முதல்வகை மர்மக்குடி.  அதாவது யாருக்கும் தெரியாமல் எங்காவது தொலை தூரத்திற்குபோய் குடித்துவிட்டு, போதை இறங்கியதும் இந்த பூனையும் பால் குடிக்குமா என்கிற மாதிரி வந்து விடுவது.

அடுத்தது... கவுரவக்குடி. 

ரகசியமாக வாங்கிட்டுபோய் வீட்டிலே வச்சு குடிச்சிட்டு, வீட்டு உறுப்பினர்கள் தவிர வேறு யாருக்கும் தெரியாமல் இருப்பது.

மூன்றாவது..... மானங்கெட்ட குடி.

வீட்டில் இருந்து கிளம்பும்போது பக்காவா டிரஸ் பண்ணிக்கிட்டு போறது.  போற இடத்திலே தண்ணியை குடிச்சிட்டு நடு ரோட்டுல அளப்பறையை பண்றது.  எங்காவது ஒரு பிளாட்பாரத்தில் விழுந்து கிடக்கிறது.  

முதல் இரண்டுக்கு குருவும் காரணம்.  மூன்றாவது குடிக்கு குரு மட்டும்தான் காரணம்.  இப்படி குருவை குற்றம் சொல்ல ஒரே காரணம், அவர் சமூக அந்தஸ்தை குறிக்கிற கிரகம்.   

நாம் எப்படிபட்ட குடும்பத்திலே பிறந்திருக்கிறோம்.  நம்ம கவுரவம் என்ன, பாரம்பரியம் என்ன, என்கிற சிந்தனையை தரவேண்டிய குரு பலம் இழந்து போனால் அப்புறம் களேபரம்தான். 

அதோடு நீதி, நேர்மை, ஆன்மிக உணர்வு, விட்டுக் கொடுத்தல் இவற்றிற்கும் குருதான் காரணம்.  

சரி... இந்த குருவால் வரும் யோகங்கள் என்ன? ஒரு ரவுண்ட் பார்ப்போமா. 

சந்திரன் இருக்கும் ராசியில் இருந்து  4,7,10ம் இடங்களில் குரு இருந்தால் கஜகேசரி யோகம் என்று பெயர்.  

சிங்கத்தை கண்ட யானைகள் கூட்டம் எப்படி சிதறி ஓடுமோ, அதைப்போல்  துன்பங்கள் எல்லாம் விலகி ஒடும்.  தோஷங்கள் எல்லாம் சூரியனை கண்ட பனிபோல் மறைந்து போகும்.  ஆண்டாண்டு காலமாக இதற்கு விளக்கம் சொல்லும் பெரியோர்கள் சொல்வது இது.  

அதோடு ஜாதகர் புகழ் பெறுவார்.  நல்ல பதவியில் இருப்பார்.  பெரியோர்களின் உதவிகளை பெறுவார்.  செல்வத்தை சேர்த்து உயர்ந்த மனிதராக இருப்பார்.  

சந்திரன் இருக்கும் ராசியிலோ, சந்திரன் இருக்கும் ராசியில் இருந்து 5,9ம் இடங்களில் குரு இருந்தால் குருசந்திர யோகம் என்று பெயர்.  

இதுவும் சிறந்த யோகம்தான்.  சாதாரண குடியில் பிறந்தவர்கள்கூட சாதனை மனிதர்களாக மாற இந்த யோகமும் ஒரு காரணம்.  வாழ்வாங்கு வாழவைக்கும்.  

வையகத்தில் புகழ்பெற உதவும்.  சீரிய சிந்தனையும், சிறப்பான வாழ்வும் அமையும்.  கள்ள கபடம் இல்லாத உள்ளம் படைத்தவர்களாக, பெரியயோர்களின் ஆசிபெற்று வளமோடு வாழ்வார்கள். 

லக்னத்திற்கு 4,7,10ம் இடங்களில் குரு இருந்தால் ஹம்ஸ யோகம் என்று பெயர்.  இதுவும் பிரபல யோகம்தான்.  மற்ற கிரகங்களின் பலத்தை பொருத்து யோகநிலையை தரும்.  

தலைமை பொறுப்புக்கு தகுதியானவர்கள்.  தன்னலமனம் இல்லாதவர்கள்.  தயவு தாட்சன்யம் நிறைந்தவர்கள்.  தரும சிந்தனை நிறைந்தவர்களாக இருப்பார்கள்.

குருவும் செவ்வாயும் கூடி இருந்தாலும், குருவுக்கு 4,7,10ல் செவ்வாய் இருந்தாலும் குரு மங்கள யோகம் என்று பெயர்.  

இது கொஞ்சம் அதிரடியாக செயல்பட வைக்கும்.  அதிகார தோரணையைத் தரும்.  எதிர்ப்பவர்களை, எதிரிகளை பயிர்களுக்கு இடையே இருக்கும் களைகளை களைந்து எரிவது மாதிரி தயவு தாட்சண்யம் இல்லாமல் களைவார்.

பொதுவாக குருவால் ஏற்படும் யோகம் நல்ல பலன்களையே தருகிறது.  உங்கள் ஜாதகத்தில் குரு நல்ல நிலையில் இருந்தால் உங்களுக்கும் வளமான வாழ்க்கை காத்திருக்கிறது. 

இன்னும் உங்கள் ஜாதகத்தில் என்ன யோகம் இருக்கிறது? நல்ல காலம் எப்போது வரும் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? 

கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். அழைத்தால் பதிலோடு வருவேன்

உங்கள் அழைப்புக்காக காத்திருக்கிறேன்.

magnum4d, sports toto, damasai tips

மலேசிய சிங்கப்பூர்  நண்பர்களுக்கு மட்டும் இந்த கட்டுரை 



கனவு காணாத மனிதன் யாரும் இருக்க முடியாது.  கனவுன்னு சொன்னதும் ராஜ போக வாழ்க்கை வாழ்வதற்கு மட்டுமல்ல, சாதாரணமாக தூங்கும்போது ஏதாவது ஒரு கனவு வரும். 

அதில் சுககனவுகளும் உண்டு.  அசுப கனவுகளும் இருக்கும்.  சுபகனவுகளை காணும்போது நல்லவை நடக்கும் என்று சொல்வார்கள்.  அசுப கனவுகளை காணும்போது ஏதாவது கெட்ட சம்பவங்கள் நடக்கும் என்ற அச்சம் எழுவதுண்டு.  

சில சமயம் எந்த தொடர்பும் இல்லாமல் சம்பந்தம் இல்லாத கனவுளும் வரும்.  அதற்கு அர்த்தம் என்ன என்று யாருக்கும் தெரியாது.  அல்லது பதில் சொல்ல முடியாது.  

இப்போதைய தலைப்பில் நம்பர் கனவு.  சிலர் கனவு காண்பார்கள்.  அந்த கனவில் நம்பர்கள் நேரடியாக தெரியும்.  அல்லது பரிசு வாங்குவது போல் கனவு காண்பதுண்டு. 

அந்த நம்பரை கடவுள் கொடுத்தார் என்று எடுப்பவர்கள் உண்டு.  பரிசு பெற்றவர்கள் உண்டு.  பெறாதவர்களும் உண்டு. 

போகட்டும்.  இப்போது ஒரு கனவு காண்கிறீர்கள்.  அந்த கனவில் வந்த நபர் உங்களுக்கு அறிமுகம் ஆனவரா.  

அப்படியானால் அவர் தொடர்புடைய நம்பரை எடுக்கலாம்.  அது அவரது கார் நம்பராக இருக்கலாம்.  

பிறந்த வருஷம் மாதம் தேதியாக இருக்கலாம். அல்லது அவரது வீட்டு நம்பர், செல்போன் நம்பர் இப்படி எது முதலில் நினைவில் வருகிறதோ அதை எடுக்கலாம்.

அடுத்து சம்பந்தம் இல்லாத ஒரு கனவிற்கு சிறு விளக்கம். 

யாருன்னே தெரியலை.... இரண்டு ஆண்கள் வந்தாங்க.  கூடவே ஒரு பொண்ணு இருந்திச்சு என்கிற ரீதியில் கனவு வநதால் நம்பரை எப்படி எழுதுவது? இதோ டிப்ஸ். 

கனவுகளின் பலன்களில் ஒரு ஆணை கண்டால் அவருக்கு உரிய எண் ஒன்பது.  

பெண்ணை கண்டால் அவருக்கு உரிய எண் எட்டு.  அந்த வகையில் 2918 என்றோ, 9218, 2198  என்றோ எடுக்கலாம். 

கூட்டமாக மணிதர்களை கண்டால் அதற்கு மதிப்பு இல்லை.  வெறும் கோசம் என்றுதான் வைத்துக் கொள்ள வேண்டும்.  ஆனால் அங்கு தனித்து காணப்பட்ட வேறு பொருள்களின் எண்ணிக்கையை கொண்டு நம்பரை கணிக்க வேண்டும்.

உங்கள் கனவில் ஒளி விளக்குகளை கண்டாலும், பெரும் வெளிச்சத்தை கண்டாலும்,  பகல் பொழுதில் அந்த கனவு நடந்தாலும் நம்பர் ஒன்று.  

இரவு பொழுதாக இருந்தாலும், தெளிவில்லாமல் மங்கலாக இருந்தாலும், சரியாக நினைவுக்கு வராத கனவாக இருந்தாலும் அதற்கு உரிய மதிப்பு எண் இரண்டு.

தன் சொந்த பிள்ளைகளை கண்டாலும், பொற்குவியலை கண்டாலும், பணக்கட்டுக்களை கண்டாலும், அரசு அதிகாரிகள், ஆன்மீகவாதிகள், வக்கீல், பேங்க், மடாதிபதிகளை கண்டாலும், இன்சூரன்ஸ் எடுப்பது போலவோ, இன்சூரன்ஸ் சம்பந்தமாக யாராவது பேசுவதுபோலவோ கனவு கண்டால் அதன் மதிப்பு மூன்று. 

தூரத்து உறவினர்களைக் கண்டாலும், தூரதேச பயணம் செய்வதுபோல் கண்டாலும், பிச்சைக்காரர்களை கண்டாலும், பிச்சை எடுப்பதுபோல் கனவு கண்டாலும், குடுகுடுப்பைக்காரனை கண்டாலும், அதற்கு உரிய எண் நான்கு
.
பேனா, பேப்பர், எழுது பொருள்களை கண்டாலும், புத்தகம் படிப்பது போலவோ, புத்தங்களை பார்த்தாலும்,  கல்வி கூடங்களை கண்டாலும், கற்பித்த ஆசிரியரை பார்த்தாலும், அச்சடிக்கும் இயந்திரத்தை பார்த்தாலும், மாமா உறவு முறையில் உள்ளவரை பார்த்தாலும்,  அதற்குரிய எண் ஐந்து.  

ஆடம்பர பொருள்கள் வாங்குவது போல் கனவு கண்டாலும், அழகிய கலைநயமிக்க பொருள்களை பார்த்தாலும், தங்கம் பொன் ஆபரணங்களை பார்த்தாலும், அழகிய பெண்களை பார்த்தாலும், அவர்களோடு உறவு வைத்துக் கொள்வதுபோல் கனவு கண்டாலும், முடி அலங்காரம் செய்து போல கனவு கண்டாலும், அதற்குரிய எண் ஆறு. 

உயர்ந்த இடத்தில் ஏறுவது போல் கனவு கண்டாலும், மாடிப்படி, ஏணிப்படி இவற்றை கண்டாலும், லாட்டரி ரேஸ் கடைகளில் நம்பர் வாங்குவது போல் கனவு கண்டாலும், திடீர் பணக்காரராக மாறியது போல் கனவு கண்டாலும் அதற்குரிய எண் ஏழு. 

கடன் கொடுத்தவரை கனவில் கண்டாலும், கடன் வாங்குவதுபோல் கனவு வந்தாலும், அடிமை சேவகம் செய்வதுபோலவோ, அவமானப்படுவது போலவோ, காவல் நிலையத்தில் கைதியாக இருப்பது போலவோ, வழக்கில் தண்டனை பெறுவது போலவோ கனவு வந்தால்  அதற்குரிய எண் எட்டு. 

வாள், கத்தி, கோடறி, மண்வெட்டி, சுத்தியல் போன்ற ஆயுதங்களை கண்டாலும், விளைந்த பூமியை கண்டாலும், தரிசு நிலங்களை கண்டாலும், உடன் பிறந்த சகோதரர்களைக் கண்டாலும், ரத்தம், காயம், மருத்துவர்களை கண்டாலும் அதற்கு உரிய எண் ஒன்பது.

இப்போது எப்படி நம்பர் எடுப்பது என்பதை சின்ன உதாரணத்தோடு பார்ப்போம்.  ஒரு காட்டுவழிப்பாதையில் நடந்து போய்கிட்டு இருக்கீங்க.  

திடீரென உங்களுக்கு கடன் கொடுத்தவர் எதிரில் வருகிறார்.  என்ன பதில் சொல்வது என்றே தெரியாமல் திகைத்து நிற்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
கனவு அதோடு கலைந்து விட்டது.  இதற்கு எப்படி நம்பர் கணிப்பது.  

காட்டுவழிப்பாதை என்பது கணக்கில் வராது.  அதனால் அதற்குரிய மதிப்பு கோசம்.   நடந்து செல்வது நீங்கள் மட்டும்தான் என்பதால் அதற்குரிய மதிப்பு ஒன்று.  

எதிரில் வந்த கடன்காரருக்கு உரிய எண் எட்டு.  அப்படியானால் 0180 என்றோ, 8010 அல்லது 1080 என்று எடுக்கலாம். 

ஒகேவா.  இனி உங்கள் கனவையும், அதற்குரிய நம்பரையும் கணக்கிட்டு பணத்தை அள்ளுங்க.

அன்பு நண்பர்களே வணக்கம். 

இந்த பூ  உலகில்  அதிஷ்டம் இல்லாதவர்கள்  என்று  யாரும்  இல்லை. அவரவர் செய்த தான தர்மத்தின் அளவிற்கு, முன்னோர்கள் செய்த பூர்வ புண்ணியத்தியத்தின் அளவிற்கு ஏற்ப அதிர்ஷ்டம் அவர்களை வந்தடைகிறது. 

ஆனாலும் அதற்கான காலகட்டம் என்பது முக்கியம். உங்கள் ஜாதகத்தில் எந்த கிரகம் உச்சம், எந்த கிரகம் ஆட்சி, எந்த கிரகத்தின் திசை நடப்பில் இருக்கிறது. 

அந்த வகையில் MAGNUM 4 d , SPORTS TOTO , DAMASAI இவற்றில் எதில் எடுத்தால் பரிசு பெரும் பாக்கியம் உண்டு, எந்த நேரத்தில் எடுக்கலாம் என்பதை உங்கள் பட்சியை ஆராய்ந்து, அதற்கேற்ப நண்பர் எடுத்தால் பரிசு வெல்லும் பாக்கியம் உண்டு. 

அந்த நேரத்தை தெரிந்து கொள்ள 


என்ற  லிங்கை கிளிக்  செய்து உங்கள் பிறந்த தேதி, நேரம், வருஷம், மாதம், பிறந்த இடம் ஆகியவற்றை குறித்து அனுப்புங்கள். பதில் உங்களை தேடி வரும்.

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...