ads

Friday 24 February 2012

பேஸ்புக் சாட்டிங்கில் பொண்ணுங்களை பேசி அசத்துவது எப்படி?

பேசுறது ஒரு கலை.  அதைவிட பேசவைக்கிறது பெரிய விஷயம். இந்த கலையில் நிறைய பேர் பெயில் மார்க்குதான் வாங்குறாங்க.

கராணம் என்ன?

எப்படி பேசுறதுன்னு தெரியாம...  எதையாவது உளறி கொட்டி எதிர் தரப்பினரை அதிர வைக்கிறதுதான் காரணம்.

இன்று பேஸ்புக்குல நிறைய நண்பர்கள் சாட் பன்றாங்க.  ஆனா ஒரு பொண்ணுங்ககிட்டே எப்படி பேசுறதுன்னு உண்மையா பாதி பேருக்கு தெரியலை. ஆரம்பமே அதிரடியா இருக்கும்.

ஹாய் டி....

இல்லைனா.. ஹாய் டியர்.... 

இல்லைனா .... ஹாய் செல்லம் 

முன்பின் அறிமுகம் இல்லாத ஒரு பொண்ணு கிட்டே பேசும் போது இப்படியா ஆரம்பிக்கிறது.  வீட்டுல, ரோட்டுல வேற எங்காவது ஒரு பொண்ணை பார்த்தால்,  நாம இப்படியா பேசுவோம்.

இல்லையே. 

அப்புறம் பேஸ் புக்குல மட்டும் ஏன் இப்படி பேசணும்.  அப்பறம்... சிலர்  அசட்டு தனமா சில கேள்வி கேட்பாங்க.

உன் பெயர் என்ன?

பெயர் தெரியாமலா பேச ஆரம்பிக்கிறது.  ஒருத்தர்கிட்டே பேச ஆரம்பிக்கிறதுக்கு முன்பு அவங்க profile போய் பார்க்க வேண்டாமா?

அவங்க யார்.  என்ன படிச்சு இருக்காங்க, என்ன செய்றாங்க,  என்ன பிடிக்கும் இது எதுவுமே தெரியாம பேச கூடாது.  

சாப்பிட்டியா?  இது ஒரு கேள்வி.   

பசிச்சா சாப்பிட போறாங்க.  இது பேச ஒன்னும் இல்லாம நேரத்தை கடத்த செய்யுறது.

இது ஒன்னும் கேட்க கூடாத கேள்வி இல்லை.  எப்படி இருக்கே,  இன்று புதிய செய்திகள் இருக்கா, சாப்பிட்டியா போன்ற கேள்வி எல்லாம்  அறிமுகம் ஆகி,  பேசி பழக ஆரம்பிச்ச பிறகு வரவேண்டிய கேள்வி.

இன்னும் சிலர் எடுத்த எடுப்பிலேயே உன் கண்ணு அழகா இருக்கு,  நீ ரொம்ப அழகா இருக்கே........ இப்படி பேசினாலும் நல்ல பொண்ணுங்களுக்கு பிடிக்காது.  

இதுக்காகவே ஆன்லைன்ல இருக்கிற பொண்ணுங்க வேண்டுமானால் பேசி வழியும்.   ஆனால் நல்ல பொண்ணுங்க கட் பண்ணிட்டு போய்டும்.

இன்னும் சிலர் கொஞ்சம் ஓவரா போவாங்க.  தொடர்ந்து இரண்டு நாள் மேஜெஸ்  அனுப்பி பார்க்கிறது.  ரிப்பிலே இல்லையா...அசிங்கம் அசிங்கமா திட்டுறது.  இது நல்ல நட்புக்கு அழகு இல்லை.  

ஒருவருக்கு 100  பேருக்கு  மேல பிரண்ட்ஸ் இருக்காங்கன்னு வச்சுக்குவோம்.  ஒரே சமயத்தில் 25 பேர் ஆன்லைன்ல இருந்தால்,  ஸ்கிரின்ல 5 பேர் மட்டும்தான் தெரிவாங்க.  மற்றவர்கள் ஸ்கிரின் ஓரத்திற்கு போய்டுவாங்க.  இது தெரியாமல்  திட்டி மேஜெஸ் அனுப்பினால்,  மறுபடியும் அந்த பொண்ணு உங்க கூட பேசுமா?

நீங்க இருக்கிற பக்கமே வராது.  காத்து கருப்பை கண்ட மாதிரி ஒதுங்கி போய்டும்.   அப்படியும் விடாது கருப்புன்னு துரத்தி துரத்தி மேஜெஸ் அனுப்புறவங்க இருக்காங்க.

ஆனால் அதனால் எந்த பலனும் இல்லை.  ஒரு கட்டத்துக்கு மேல உங்க மேல கோவம் வந்து பிளாக் பண்ணத்தான் பார்ப்பாங்க. கடைசியா அதுதான் நடக்கும்.

முதலில் உங்க மேல ஒரு மரியாதை வரணும்.  மதிப்பு வரணும்.  நல்லவர் என்ற நம்பிக்கை வரணும்.  அப்படி நம்பிக்கை வர்ற மாதிரி நீங்க நடந்துக்கணும்.

டி போட்டு பேச கட்டிக்க போற பொண்ணா,  அல்லது கட்டி வச்ச பொண்டாட்டியா?  

பேசுறது ஒரு பிரண்ட்.   

ஒரு போன் வருது. எடுக்குறிங்க. எடுத்த எடுப்புல யாரு பேசுறதுன்னு எதிர் தரப்பில் கேட்டால்  உங்களுக்கு கோவம் வருமா இல்லையா.  நீங்கதானே கூப்பிடிங்க.  நீங்க யாருன்னு முதல்ல சொல்லுங்க.... அப்படிதானே கேட்பிங்க. அதுபோல தான் பேஸ்புக் சாட்டிங்கும்.

அப்பறம்.....

என்ன செய்யுறே ....ரிப்பிலே செய்ய மாட்டியா .... இப்படி ஒருமையில் பேசுவதும் தவறு.

அதெல்லாம் நல்ல பிரண்டான பிறகு உரிமையில் பேசுவது.  முதலில் பேசும் போது,  வார்த்தையில் கண்ணியம் இருக்க வேண்டும். 

பேச ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்திலேயே   போன் நம்பர் கேட்கிறது. போன் என்பது பர்சனல். பர்சனலா பேசுற அளவுக்கு போகணும்னா நீங்க எந்த அளவுக்கு முக்கியமான நபரா இருக்கணும். அதுக்கு கால அவகாசம் வேண்டாமா.

அது என்ன பையனா... நம்பர் கேட்டதும் இத்தான்னு கொடுக்க.

அப்பறம்... திடீர்ன்னு விடியோ கால் பன்றது. இந்த மாதிரி ஆசாமிங்க அவசர புத்தி உள்ளவங்க. இதுனால ஒன்னும் ஆகாது. உங்க மேல இருக்கிற நல்ல மதிப்பு குறைஞ்சு போய்டும். அதனால இதையும் தவிர்க்க வேண்டும்.
சரி எப்படி பேசுறது. 
உதாரணமா உங்க பெயர் குமார்ன்னு வச்சுக்குவோம்.  எதிர் தரப்பில் இருக்கும்  சாந்திக்கு மேஜெஸ் அனுப்புறிங்க.  

hai ... mam .... morng   I am kumar .  from  Nagapattinam .  fine .  how  r u 

ஒரு வேலை இதுக்கு பதில் வராமல் போகலாம்.  அல்லது பதில் வரலாம்.  வந்தாலும் வராவிட்டாலும் நீங்கள் அடுத்து செய்ய வேண்டியது என்ன?
உங்க வால்ல போட்டு இருக்கிற போட்டோ வெரி நைஸ்.  குட் கலஷ்ஷன். ஆச்சரியமா இருக்கு.  எப்படி... இப்படி படங்களை தேடி எடுக்குறிங்க. பாராட்டுக்கள்.

இதுக்கும் பதில் வரலையா?  விட்டுடுங்க.  ஒரு பை சொல்லிட்டு.

மறுநாள்...... வழக்கம் போல் உங்கள் அறிமுகம். 

நான் உங்களை தொடர்ந்து ஒரு மாதமா பார்த்துகிட்டு இருக்கேன்.   உங்க மேஜெஸ்  படிக்க ஆர்வமா இருக்கு.  புதிய செய்திகள்,  புதிய சிந்தனைகள்,  தொடரட்டும் உங்கள் சேவை.

இதுக்கும் பதில் வரலைனா.  அவங்களை நீங்க தொல்லை பண்ண கூடாது.  அப்படியே விட்டுடனும்.  குட் நைட் சொல்லிட்டு வெளியே போயிடணும்.

மறுநாள்.

அவங்க வால்ல போய்.... அவங்க போஸ்ட் பன்ற போட்டோ அல்லது கவிதைக்கு கமான்ட் பண்ணுங்க.   பாராட்டுக்கு மயங்காதவங்க யாரு.

அதுக்கும் பதில் பதில் இல்லையா.   உடனே கோவத்துல கொந்தளிச்சு போடின்னு மேஜெஸ் பண்ணாதிங்க.  வெய்ட் பண்ணுங்க.

நல்ல பொண்ணுங்க உடனே பேசாது.  அல்லது பேசுறதுக்கு சந்தர்ப்பம் பார்த்துகிட்டு இருக்கும். 

நீங்க விடாமல் கமான்ட் பண்ணனும்.  அவங்களை இம்பிரஸ் பன்ற மாதிரி.  அதாவது அவங்க போஸ்ட் பன்ற மேஜெசுக்கு மட்டும்.  

சாட்டிங்குல மேஜெஸ்  அனுப்ப கூடாது.   அந்த பொண்ணு நினைக்கணும்.  கமான்ட் பன்றார்.  ஆனா முன்ன மாதிரி மேஜெஸ் அனுப்புறது இல்லையே.

இந்த சிந்தனை  அந்த பொண்ணு மனசுல வந்துட்டா....  உங்க கமான்ட்டுக்கு பதில் சொல்லும்.  

உடனே நீங்க சாட் பண்ண போயிட கூடாது.   

பொண்ணுங்க சைக்காலஷியே இதுதான். தன்னை பார்க்கிறவங்களை பார்க்காது.  போடி... நீ பெரிய அழகியா.. நீ ரம்பையா இரு,  மேனகையா இரு எனகென்ன.  உன் அழகு என்னை எந்த விதத்துலேயும் பாதிக்கலைன்னு திமிரா போற ஆம்பிளையைதான் நேசிப்பா.

நீங்க செய்ய வேண்டியது....ஒரு வாரத்திற்கு ஒன்லி கமான்ட் மட்டும்தான்.  அவங்க ஒரு போட்டோ போட்டால்.... நைஸ்... ரியலி  பேமலி லுக்.  இப்படிதான் உங்க கமான்ட் இருக்கணும்.  

எப்படா இவன் சாடிங்க்ல வருவான்னு,  அந்த பொண்ணு ஏங்குற அளவுக்கு நீங்க பொறுமையா இருக்கணும்.  

ஒரு மாதத்திற்கு அப்பறம் மேஜெஸ் அனுப்பி பாருங்க.  உடனே பதில் வரும். நீங்க அந்த பொண்ணை பிரண்டா பார்த்தாலும் சரி,  உங்க மனசுல வேற எண்ணம் இருந்தாலும் சரி....  பேசும் போது ரொம்ப கண்ணியமா பேசணும்.

ஏன்னா...... பேஸ்புக் வழியா இணைந்த தம்பதிகள் நிறைய இருக்காங்க.  நல்ல ஆரோக்கியமான பிரண்டா பலர் இருக்காங்க.

நட்பு பெரிசு.  
இந்த உலகத்தை விட.

கடைசியா ஓன்று.
மினிமம் லவ் இஸ் பிரண்ட்சிப் 
மேச்ஷிமம் பிரண்ட்ஷிப் இஸ் லவ்

 
 

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...