ads

Wednesday 28 March 2012

முன் ஜெம்மம்.

ஒரு குடும்பத்தில் குழந்தை பிறக்குது.  குழந்தை எப்படி இருக்கும்?

அவரை போட்டா அவரை முளைக்கும்.  துவரை போட்டா துவரை முளைக்கும்.  இதுதான் இயற்கை நியதி. 

எதுக்கு இந்த விளக்கம்?

இதில் என்ன சந்தேகம்.  அப்பா அம்மா மாதிரி இருக்கும். 

நீங்க சொல்றது உருவ அமைப்பில். அப்படிதானே..!

ஆமாம்.   

நானும் ஒத்துகிறேன்.  ஒரு குழந்தை அப்பா அம்மா மாதிரியோ ,  தாத்தா, பாட்டி மாதிரியோ இருக்கலாம்.     அப்படியே உரிச்சு வச்ச மாதிரி இருக்கணும்னு கட்டாயம் ஒன்னும் இல்லை. இல்லாமலும் போகலாம்.

சரி கிட்டத்தட்ட உருவ அமைப்பு ஒத்து வருதுன்னு வச்சுக்குவோம்.   இந்த குணாசியம் ஒத்து வருமா?

வந்துதானே ஆகணும்.  எத்தனயோ பேர் சொல்ல கேள்வி படுறோம்.  அப்படியே அப்பன் புத்தி.   இவனோட தாத்தா இப்படிதான்.  இந்த வசனம் எல்லாம் கேட்கலையா..

இங்கதான்  ராசா நம்ம கேள்வியே வருது.   அது எப்படி சாத்தியம்?  மரபியல் பண்புகளை கடத்தும் குரமொசொம்கள்,  அது இதுன்னு கதை சொல்லலாம். 

அது அப்படியே முழுசா ஒத்து போகணும்னு அவசியம் இல்லை.  ஒத்து போவதும் இல்லை. 

எப்படி?

அப்பா படிப்பு வாசனையே இல்லாம இருப்பார்.  உலகஞானம் ஒரு மண்ணும் தெரியாம இருப்பார்.  ஆனா அவருக்கு பிறக்கிற பிள்ளைங்க A to Z எல்ல விஷயத்திலேயும் வெளுத்து வாங்கும்.  எப்படி....?

அதை விடுங்க.... 

எத்தனயோ கலைஞர்கள் . குண்டும்  இல்லாம மருந்தும் இல்லாம வெடி சத்தம் கேட்ட மாதிரி கொடி கட்டி பறக்கிறாங்க.  கவிஞர்கள்,  எழுத்தாளர்கள், படைப்பாளிகள் இல்லையா.

அரசியல்வாதி பையன் அரசியலில் இருக்கலாம்.  ஆனா அப்படிதான் இருக்கனும்னு  கட்டாயம் ஒன்னும் இல்லை.   இருக்கலாம். பிஸ்னஸ்மேனா  கூட  இருக்கலாம்.

இங்குதான் இந்து மதம் மிக தெளிவாக சொல்கிறது.    நம் எண்ணங்களையும்,  பழக்க வழக்கங்களையும் உயிர் என்று சொல்லபடுகிற ஆன்மா சுமந்து நிற்கிறது.

உடலுக்கு மட்டும் தான் அழிவு.  உயிருக்கு இல்லை.

உயிர்  மீண்டும் மீண்டும் பிறப்பு எடுக்கிறது,  அப்போது அவர்களின் பிறவி வாசனை என்று சொல்லப்படும் அறிவு மட்டும் அவர்களோடு தொடர்ந்து செல்லுமாம்.

அப்படியானால் ... இப்போது அறிவாளிகளாக இருப்பவர்கள்... சென்ற பிறவியிலும் அறிவாளிகளாக இருந்து இருப்பார்கள் என்பது தான் உண்மை.  மாறி இருப்பது நிலை இல்லாத உடல்.  மாறாதிருப்பது அவர்கள் அறிவு,

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...