ads

Thursday 12 April 2012

பெற்ற குழந்தையை சிகரெட்டால் சுட்டு கொன்றான்!

மூன்று மாத பெண் குழந்தையை, பெற்ற தந்தையே சிகரெட்டால் சூடு வைத்து கொடுமை படுத்தினார்.  நான்கு மாத சிசு சிகிச்சை பலனின்றி இறந்தது.  என்ற தினமலர் செய்தி நெஞ்சில் ஈட்டி பாய்ச்சியது போல் இருக்கிறது.

அடபாவி.... சண்டாளா.....  ஐயோ.......அந்த பிஞ்சு எப்படி துடித்திருக்கும்.  வார்த்தைகள் தெரியாத வயதாச்சே.  அம்மான்னு சொல்ல தெரியாதே,,, ஐயோன்னு கத்த தெரியாதே.  

குழந்தையும் தெய்வமும் ஒண்ணுன்னு சொல்றாங்களே.  அந்த தெய்வம் என்ன சொல்லி அழுதிருக்கும்.

உன்னை பெற்றவளும் ஒரு பெண் தானே. உலகம் அறியாத அந்த குழந்தை செய்த பாவம் என்ன? 

உனக்கு மகளாக பிறந்ததா... உனக்கு மகளாக பிறக்க வேண்டும் என்று சாபம் வாங்கியா பிறந்தது.  

குழந்தையின் தாய்
எந்த தேவதையும் என்னை ஆசிர்வதித்தில்லை  எல்லா சாத்தான்களும் என்னை சபித்திருகின்றன என்ற மேத்தாவின் வரிகள் அந்த குழந்தைக்காக எழுத பட்டதா?

தெய்வமே....  இந்த அரக்கர்கள் வாழ வழி விடும் நீ....அந்த பிஞ்சுக்கு மட்டும் கண்ணை மூடிக்கொண்டது ஏன்? 

ஏன் பிறக்க வைத்தாய்.  இரக்கமற்ற மனிதனுக்கு ஏன் மகளாய் இருக்க வைத்தாய்.   உனக்கு கூட கருணை இல்லையா?

பெண் என்றால் சாபமா.  பெண்ணில்லா மனிதன் கண்ணில்லாத மனிதனுக்கு சமம்.

அறிவியல் சொல்லும் உண்மையை அறிந்தால் அரக்கர்கள் திருந்துவார்களா. ஆணையும் பெண்ணையும் தீர்மானிப்பது பெண் அல்ல.  ஆண்களின் உயிர் அணுக்கள் என்று. 

நல்லவர்களும் கெட்டவர்களும் நம்மை சுற்றி இருந்த வண்ணமே இருக்கிறார்கள்.   இவனை போல் மனிதன் வாழ தகுதி அற்றவன்.  எந்த பிள்ளை பிறந்தாலும் இந்த பாவிக்கு மகனாய் இருப்பது வெட்க கேடு.  ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்தான்.  மறு பெண்ணையும் தவிக்க விட்டான்.  

கடைசியில் பெற்ற குழந்தை.  இவனை தூக்கில் போடுங்கள்.  
துடிக்க துடிக்க .....   

2 comments:

  1. please do some creative storys..we dont want news..because we read in news paper
    ..

    ReplyDelete
  2. please do some creative storys..we dont want news..because we read in news paper
    ..

    ReplyDelete

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...