ads

Wednesday 18 April 2012

புராணங்களில் தந்திரம்

வில்லுக்கு ஒரு விஜயன் என்பார்கள் மகாபாரதத்தில். 

 ராமாயணத்தில் அந்த சொல்லுக்கு சொந்தக்காரன் ராமன்.

ராமன் அம்பை எடுத்தால் எதிரிகளை  கொள்ளாமல்  திரும்பியதில்லை.  ஆனாலும் ராமனிடம் இருந்து ஒருவன் தப்பினான்.  அவன் ஒன்னும் இந்திரனையே வென்ற இந்திரஜித்தும் அல்ல,  சாதாரண போர் வீரன்.

அப்படியானால் அவன் பாலகனா  வயோதிகனா... நோயாளியா... ! 

இல்லை... இல்லை...  அவன் சாதாரண போர் வீரன்.  ராமனால் கொள்ளபடாமல் தப்பி ராவணன் இருப்பிடம் வந்து சேர்ந்தான்.   நேராக ராவணிடம் ஓடினான்.

இந்த உலகத்தையே எட்டி உதிக்கும் ஆற்றல் பெற்ற மன்னா...  கடல் மாதிரி பெருக்கெடுத்து நின்ற நம் படைகள் முற்றிலும் அழிந்து விட்டன.

ஒருவர் கூட உயிருடன் இல்லை. ராமனின் அம்பு யுத்த களத்தில் கூட்டம் கூட்டமாய் கொண்டு குவிக்கிறது..


ஏ....முடனே... ஒருவர் கூட உயிருடன் இல்லை என்கிறாய். ஆனால் நீ மட்டும் தப்பியது எப்படி.

நான் என் வீரத்தால் தப்பவில்லை. ஒரு தந்திரம் செய்துதான் தப்பினேன்.

தந்திரமா... அப்படி என்ன தந்திரம்?

பிரபு .... போர்க்களத்தில் புடவை கட்டி இருந்தேன்.

புடவையா.. எதற்கு?

ராமன் தன் மனைவியை தவிர வேறு யாரையும் நிமிர்ந்து பார்க்க மாட்டானாம்,  என்னையும் ஒரு பெண் என்று நினைத்து விட்டான். அதனால் தப்பினேன் என்றான்.  என்ன ஒரு தந்திரம்.

கிருஷ்ணன் செய்த தந்திரம் 

பிதாமகர் பீஷ்மர்.  மாபெரும் வீரர்.  இவரை வெல்ல யாராலும் முடியாது. இவர் துரியோதனன் பக்கம் இருக்கிறார்.

பாண்டவர்கள் பக்கம் இருப்பது கிருஷ்ணனாக இருந்தாலும் பாண்டவர்களை காக்க கிருஷ்ணன் ஒரு தந்திரம் செய்தான்.

யுத்தம் ஆரம்பமாவதற்கு முதல் நாள் பீஷ்மர் தன் கூடாரத்தில் ஓய்வு   எடுத்து கொண்டிருந்தார். 

கிருஷ்ணன் பாஞ்சாலியை அழைத்தார். பாஞ்சாலி....பீஷ்மருக்கு இணையான வீரன் இதுவரை பிறக்கவில்லை.  இவரை களத்தில் வெல்லவே முடியாது.  உன் கணவன் மார்களுக்கு ஆபத்து என்றால் அந்த கர்ணனால் வரபோவதில்லை,  இந்த பீஷ்மரால் மட்டுமே பாண்டவர்களை கொள்ள முடியும்.

ஐயோ அண்ணா....

பதறாதே.  அதற்க்கு ஒரு வழி சொல்கிறேன்.   அதன்படி நீ நடந்தால் பாண்டவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை.

சொல்லுங்கள் அண்ணா.

கூடரத்தில் இருக்கும் பீஷ்மரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் கேள். 

கேட்டால்....

முதலில் கேள்.  நீ ஆசிர்வாதம் வாங்கும் போது, உன் திருமாங்கல்யம் வெளியே  தெரிகிறமாதிரி குனிந்து நமஸ்கரி. 

கிருஷ்ணன் சொன்ன மாதிரியே செய்தால் பாஞ்சாலி.  பீஷ்மர் இருக்கும் கூடாரத்திற்குள் நுழைந்ததும் என்னை ஆசிர்வதியுங்கள் என்று காலில் விழுந்தாள்.

வந்தது யார் என்று கூட சரியாய் அவர் கவனிக்க வில்லை.  ஆனால் ஒரு பெண் என்பது மட்டும் தெரிகிறது.  அவளை கவனிக்கும் போது அவள் கழுத்தில் மாங்கல்யம் தொங்குகிறது/

உடன் பீஷ்மர் தீர்க்க சுமங்கலியாக இரு என்று வாழ்த்துகிறார்.  இந்த வாழ்த்து தான் யுத்த களத்தில் பாண்டவர்கள் உயிரை காக்க கவசமாக இருந்தது. 
 

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...