ads

Wednesday 30 May 2012

அளப்பரையை தாங்க முடியலைப்போ


வித்தியாசமான படங்கள்

ஒரே போர்... 

எத்தனை நாளைக்குதான் பொண்ணுங்க படத்தையே பேஸ்புக்குல போட்டு ஒப்பேத்துறது. வித்தியாசமா எதாவது படம் கிடைச்ச போடலாம் என்ற யோசனை இருக்கா? 

சரி.. உங்களுக்காக ஒரு தளத்தை அறிமுகம் செய்து வைக்கிறேன். வரவேற்ப்பு இருந்தால் இந்த முயற்சி தொடரும். 

உதாரணத்துக்கு சில படங்கள். 
மேலும் படங்கள் வேணும்னா இந்த லிங்கை கிளிக் பண்ணி போய் பாருங்க.http://www.illusionspoint.com/illusions/visual-optical-illusions/

நேரம் நல்ல நேரம்


கோவபடாமல் ஒரு உண்மையை நாமெல்லாம் ஒப்பு கொள்ள வேண்டும். நேரத்தை நமக்கு சரிவர செலவழிக்க தெரிவதில்லை. 

நான் ரொம்ப விவரமானவன் என்று பெருமையடித்து கொள்கிறவர்கள் கூட, இந்த விஷயத்தில் அநேகமாய் பெயில் மார்க்குதான் எடுக்கிறார்கள்.

நேரம் என்பது ஒரு அபூர்வமான பொருள். அதை பலரும் கண்ணெதிரே வீணாக கரைக்கிறார்கள், சிலர் அலச்சிய படுத்துகிறார்கள். நேரத்தை அழுகும் பொருள் என்று வர்ணித்தான் ஒரு மேலை நாட்டு அறிஞன். 

நம்மவர்களுக்கு நேர உணர்வு போதாது. (மீண்டும் உங்களை வம்புக்கு இழுக்குறேனா? )நேரத்தின் அருமை நமக்கு தெரிய வேண்டுமானால் வாழ்க்கையில் சிலரை சந்திக்க வேண்டும்.

ஒரு ஆண்டின் அருமையை உணர வேண்டுமானால் 5 மதிப்பெண்கள் குறைவாக பெற்றதால் தேர்வில் தொல்விஉற்ற மாணவனை சந்திக்க வேண்டும். 

அவன் கத்துவான், கதறுவான், ஒரு சிறு கவன குறைவால் மீண்டும் படித்த பாடங்களையே படிப்பது எவ்வளவு பெரிய போர்.

ஒரு மாதத்தின் அருமையை உணர வேண்டுமானால் குறைபிரசவமாக குழைந்தை பெற்ற தாய்மார்களை கேட்க வேண்டும். 

குறைபிரசவ குழந்தையை காப்பாற்றுவதில் தான் எவ்வளவு இடர்பாடுகள். ஓரிரு மாதங்கள் தள்ளி பிறந்திருந்தால் எவ்வளவு இனிமையாக இருந்திருக்கும். 

ஒரு வாரத்தின் அருமையை உணரவேண்டுமானால் வார பத்திரிக்கையின்  ஆசிரியர்களை கேட்க வேண்டும்.

ஒரு நாளின் அருமையை உணர வேண்டுமானால் தினக்கூளிகள், அன்றாடங் காச்சிகள், சாலை ஓர நடைபாதை கடைகாரர்கள்,  தள்ளுவண்டி காரர்களை கேட்க வேண்டும். பந்த் என்ற பெயரால் தேவையிலாமல் கதவை இழுத்து மூடுகிற வியாதி இங்கே மிக அதிகம்.

ஒரு மணி நேரத்தின் அருமையை உணர வேண்டுமா...மருத்துவரை கேளுங்கள்.இவர்கள் சொல்வார்கள். சற்று முன்பாக அழைத்து வந்திருந்தால் இந்த உயிரை காப்பாற்றி இருப்பேன் என்று. 

பத்து நிமிடத்தின் அருமையை காதலிக்கிறார்கள் அல்லவா.. அவர்களை கேட்க வேண்டும். 

இவள் பஸ்சாண்டில் காத்து கொண்டிருப்பாள்.  இவன் வந்து தொலைய மாட்டான். பார்க்கிறவர்கள் இவளை ஏற இறங்க பார்ப்பார்கள். 

இது ஏன்...பஸ்ல ஏறாம, வீட்டுக்கும் போகாம இங்கேயே நிக்குது என்று யோசிப்பார்கள். அந்த கணங்கள் இவளுக்கு ரணமாக இருக்கும்.

ஒரு நிமிடத்தின் அருமையை உணர ரயிலை கோட்டை விட்டார்கள் அல்லவா..அவர்களை கேளுங்கள். இப்பத்தான் சார் வந்தேன். அதற்குள் ரயில் புறப்பட்டு விட்டது என்பார்கள் பரிதாபமாக. 

ஒரு வினாடியின் அருமையை உணர வேண்டுமானால் சாலையில் விபத்தை சந்தித்தவர்களை கேட்க வேண்டும். 

இப்படி திரும்பி பார்பதற்குள் என்னை அடிச்சு தூக்கிட்டான் என்பார்கள்.சிலர் இதை சொல்வதற்கு கூட இருக்க மாட்டார்கள்.

மில்லி செகன்ட் என்று அளவு உண்டு. பலருக்கு இதை பற்றி தெரியாது. ஆசிய தடகளத்தில் ஜோதிர்மயி தங்கம் வென்றது வினாடி இடைவெளியில் இல்லை, வினாடியில் நூறில் சில பங்குகளில் தான்.

நண்பர்களே நேரம் என்பது எவ்வளவு முக்கியம் என்பது புரிந்திருக்கும். இனியும் நேரத்தை வீணடிக்காமல் பயன் படுத்துங்கள். வாழ்க்கையில் உயருங்கள். 

இது நேரம் நல்ல நேரம் என்ற லேனா தமிழ்வாணன் எழுதிய புத்தகத்தில் இருந்து தொகுக்க பட்டது.

Tuesday 29 May 2012

செல்போன்ல அந்த படம் வச்சு இருக்கிங்களா?


காலையிலேயே போன்...


ஹலோ சுந்தரி..நான் மலர் பேசுறேன். 


எப்படி இருக்கே...? என்ன காலையிலேயே கூப்புடுறே.... என்ன விஷேசம்.


ஏய்...லாஸ்ட் இயர் ரோகிணி கல்யாணத்துக்கு வந்தே தெரியுமா..


அதுக்கு என்ன இப்போ.


இல்லை..அந்த கல்யாணத்திலே என் ஸ்கூல் பிரண்ட்ன்னு ஒரு பொண்ணை அறிமுகம் செய்து வச்சேன் ஞாபகம் இருக்கா? சிகப்பா..ஒல்லியா..கமலான்னு பேரு.


ஒ...அந்த பொண்ணா... வாய் ஓயாம பேசிச்சே. நான் நடிகர் சூர்யாவைதான் கட்டிக்க போறேன்னு கலாச்சுதே....அந்த பொண்ணா...


அவளேதான்.


அவளுக்கு என்ன இப்போ..கல்யாணமா..


இல்லைடி சூசைடு செய்துகிட்டா..


ஏய்... என்ன சொல்லறே... என்னாச்சு..என்ன பிரச்சனை..? காதல் தோல்வியா? 


இல்லடி... வெளியே யார்கிட்டேயும் சொல்லாதே. அவ... குளிக்கும் போது செல் போன்ல துணி இல்லாம விடியோ எடுத்திருக்கா. 


விட்டிலே யாரும் அந்த படத்தை பார்த்துட்டாங்களா?


இல்லை. படத்தை பார்த்துட்டு அழிச்சுட்டா..ஆனா அந்த படம் நெட்ல வந்துட்டு.


எப்படி?


அதான் தெரியலை. அவங்க சித்தப்பா பார்த்துட்டு விட்டிலே பெரிய ரெகளை. இவ பூச்சு மருந்தை குடிச்சுட்டா. காப்பாத்த முடியலை. 



இந்த செய்தி என்னை பொருந்தவரை அதிர்ச்சிதான். 


இரண்டு நாட்களுக்கு பிறகு என் குடும்ப நண்பர் பாவலன் வீட்டுக்கு வந்திருந்தார். அவர் கம்ப்யுட்டர் சென்டர் வைத்திருக்கிறார். அவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு தகவலை சொன்னார். 


அவரிடம் படிக்கும் பிள்ளை ஓன்று தவறுதலாக கம்ப்யுட்டரில் இருந்த பைல்களை அழித்து விட்டது. எல்லாம் மிக முக்கியமான பைல்கள். அதை ரெகவரி செய்ய வேண்டும் என்றார். 


ரீசைக்கிள்பின்னில் இருந்து எடுப்பதா? 


அது பெரிய பைல். ரிசைக்கிளில் இல்லை. 


அப்பறம் எப்படி எடுப்பது என்ற கேள்விக்கு அவர் தந்த பதில் தான் கமலா இறப்புக்கு இப்படியும் ஒரு காரணம் இருக்குமோ என்று யோசிக்க வைத்து.



மெமரி கார்டுகளில் சேமிக்கப்படும் படத்தை அழித்தாலும், அதை மீண்டும் எடுக்க முடியும். அதற்க்கு தனியாக ஒரு சாப்ட்வேர் இருக்கிறது. இனி விஷயத்திற்கு வருவோம். 



இப்போது தொழில் நுட்பங்கள் வளர்ந்து விட்டது.  எல்லோருடைய கையிலும் விடியோ படம் எடுக்கும் செல் போன் இருக்கிறது. 


போகிற போக்கில் கண்ணில் பட்டதை படம் எடுப்பது ஒன்றும் தவறில்லை. சிலர் கொஞ்சம் விபரீதமாக தங்கள் வீட்டு அந்தரங்க படங்களை கூட ஒரு ஹேபியாக எடுத்து வைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். 


அப்படி எடுக்கிற பழக்கம் உங்களுக்கும் இருந்தால் மிகவும் எச்சரிக்கை தேவை.


நான் தான் உடனே அழித்து விடுவேனே.. என்பது உங்கள் பதிலாக இருந்தாலும், முடியாது.. எப்படியும் படம் வெளியாகி விடும்.


உங்க செல்போனை யாரும் எடுக்க வில்லை என்றாலும், என்றாவது ஒரு நாள் உங்கள் செல்போன் பழுதாகலாம். 






உடனே என்ன செய்வீங்க. பக்கத்தில் இருக்கும் பழுது நீக்கும் கடைக்கு போய் உங்கள் செல்போனை கொடுப்பிங்க. 


அவர் என்ன செய்வார். ரெண்டுமணி நேரம் ஆகும். வந்து எடுத்துகோங்க என்பார். நீங்களும் வந்து விடுவீர்கள். 


நீங்கள் தான் முன்னெச்சரிக்கை முத்தென்னாவாச்சே. மெமரி கார்டில் அந்த வில்லங்க வீடியோவை அழிச்சுட்டுதான் கொடுத்தீங்க. 


ஆனா பாருங்க.. அந்த பழுது நீக்கும் செல்போன் கடை காரருக்கு ஒரு நப்பாசை. இதுக்கு முன்னாடி இந்த மெமரி கார்டில் என்ன இருந்திருக்கும். 


சரி..ரெக்கவரி சாப்ட்டுவேரை போட்டு பார்ப்போம்னு பார்கிறார். அதிலே போன மாசம் உங்க மனைவியை அரைகுறை டெரஸ்ல எடுத்தபடம் ஒப்பன் ஆகுது. 


அவர் என்ன செய்வார். நெட்ல போட்டுவிட்டுடுவார். இது தேவையா?


அதானால.. இப்படி படம் எடுக்கிறதை நிறுத்துறது நல்லது. அப்படியும் படம் எடுக்கும் ஆசை இருந்தால், செல்போன் கடைகளில் மெமரி கார்டோடு கொடுப்பது தவறு. 


இதில் இன்னொரு வில்லங்கம் இருக்கு. மெமரி கார்ட் செல்ல்போனுக்குள்ள இருக்கிற வரைக்கும் வைரஸ் பிரச்சனை வாறது. 


வெளியே எடுத்து மாட்டினா எப்படியும் வைரஸ் வந்துடும்.அதை கிளின் செய்ய கொடுக்கும் போதும் இப்படி நடக்க சான்ஸ் இருக்கு. 


அதனால் ..சொந்த படங்களை எடுக்காமல் இருப்பது தான் புத்திசாலித்தனம்.


இது மிக முக்கியமான கட்டுரை. அதனால் நீங்க மட்டும் படிச்சுட்டு போய்டாம, உங்கள் நண்பர்க்களுக்கும் இந்த கட்டுரையை சேர் செய்யுங்கள். அவர்களும் எச்சரிக்கையாக இருக்கட்டும். 




Monday 28 May 2012

குரு தட்சிணாமூர்த்தி

ஒரு சமயம் படைப்பு தொழிலில் ஆர்வம் இல்லாத பிரம்மா, அதை யாரிடமாவது ஒப்படைக்க நினைக்கிறார். 

நினைத்தால் மட்டும் போதுமா...அதற்கு தகுதியான நபர்கள் வேண்டுமே. அப்படி யாரும் இருப்பதாக அவருக்கு தெரியவில்லை. 

அதனால் என்ன? நாம் தான் படைப்பு கடவுளாயிற்றே.... தகுதியானவர்களை நாமே படைப்போம் என்று எண்ணி நான்கு பேரை உருவாக்குகிறார். 

அவர்கள் தான் சநகர், சநந்தனர், சநத்குமாரர், சநாத்சுஜாதர். இவர்கள் பிரமாவினால் உருவாக்கபட்டதால் பிரம்ம புத்திரர்கள் என்று அழைக்க படுகிறார்கள்.

பிள்ளைகள் பிறந்ததும் தொல்லைகள் ஒழிந்தது என்று நிஷ்டையில் ஆழ்ந்து விட்டார். 

அவர் கணக்கு சரிதான். படைப்பு தொழிலுக்கு உரிய அறிவோடு தான் பிறந்து இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் விருப்பம் அதுவல்லவே. 

தங்கள் விருப்பத்தை சொல்லலாம் என்றால் முடியவில்லை. நாரதரின் யோசனை படி மகாவிஷ்ணுவை நாடி செல்கின்றனர்.  

அவர்கள் சென்றது எதற்கு? இன்னும் ஆழ்ந்த ஞானத்தை பெற. 

ஆனால் மகாவிஷ்ணுவோ மகாலக்ஷ்மியோடு கூடி களித்திருந்தார். இல்லறதர்மத்தை கடைபிடிப்பவரிடம் ஞானயோகத்தை பற்றி எப்படி கேட்பது? இந்த குழப்பத்தோடு கைலாயம் வருகின்றனர். 

இவர்கள் வருகையை அறிந்த சிவபெருமான் கல்லால மரத்தின் கீழ் தவக்கோலம் பூண்டு அமர்கிறார். 

வந்தார்கள் நால்வரும். பார்த்தார்கள். அடடா.. இவர் அல்லவா.. குரு. நம் அறியாமையை விளக்க இவரை விட்டால் யாரும் இல்லை என்று முடிவு செய்து அங்கேயே அமர்ந்து விட்டார்கள். 

அவர்களின்  அத்தனை சந்தேகத்திற்கும் விடை தருகிறார் தட்சினாமுர்த்தி. இவர் தென்முக கடவுள் என்று போற்ற படுகிறார். 



இவர் ஒவ்வொரு சிவ ஆலயத்திலும் கருவறை சுவற்றில் கோஷ்ட்டமூர்த்தியாக காட்சி அளிக்கிறார். இவர் சிவனின் அம்சம். 

இவர் நவகிரக வரிசையில் வரும் குருபகவான் அல்ல. அவர் வேறு .....இவர் வேறு.

தென் முக கடவுளான இவர் சில ஆலயங்களில் வித்தியாசமாக காட்சிஅளிக்கிறார். 

சூரியனார்கோவில், திருநெய் தானம், திருவரங்குளம், திருநாவலூர், கீழ்வேளூர், கண்டியூர் முதலிய இடங்களில் நின்ற நிலையில் அருள் பாலிக்கிறார்.

மயிலாடுதுறை வள்ளலார்கோவில், சென்னை திரிசூலம், திருகட்ச்சனம், திருவாய்மூர், ஆகிய இடங்களில்   ரிஷப வாகனத்தில் காட்சி அளிக்கிறார்.

வைதீஸ்வரன் கோவிலில் மேற்கு திசை நோக்கியும், சுக்கிரன் ஆலயமான கஞ்சனூரில் கிழக்கு முகமாகவும் காட்சி அளிக்கிறார்.

கழுகு மலையில் சடாமுகமும், இருக்கையில் தூக்கி வைத்த காலுமாய் காட்சி அளிக்கிறார்.

திருவற்றியூரில் வடக்கு மகம் நோக்கி பிரமாண்ட உருவில் காட்சி அளிக்கிறார்.

லால்குடியில் வீணையை கையில் பிடித்தபடி காட்சி அளிக்கிறார்.

கட்டபள்ளியில் அம்பிகையுடன் காட்சி அளிக்கிறார். திருவையாறில் சூலம், கபாலம் ஏந்தி காட்சி அளிக்கிறார்




Sunday 27 May 2012

பெண்களே உஷார்.

அவள் பேர் சுமிதா. 

பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ( என் பேஸ்புக்கில் அவளும் இருந்தாள். இப்போது இல்லை )

என் நெருங்கிய தோழி. எந்த குற்றம் குறையும் சொல்ல முடியாத குணம். அன்பானவள்,பண்பானவள் அழகானவள். திருமணம் ஆகி ஒரு குழந்தைக்கு தாய்.

பாசத்தை பொழியும் மாமியார், பார்த்து பார்த்து கவனிக்கும் கணவன், அப்பறம் என்ன குறை அவளுக்கு என்பது தான் எல்லோருடைய கேள்வியும். அவளுக்கு வில்லனாக வந்து பேஸ்புக்.

தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று இருந்தவளுக்கு போகாத ஊருக்கு பயணம் செய்த மாதிரி வழி சொல்லியது பேஸ்புக். 

விஷயம் இதுதான். அவள் பேஸ் புக் கணக்கை துவக்கினாள். அவள் பேஸ்புக் வைத்து கொள்ள யாரும் தடை சொல்லவில்லை. 

கொஞ்சம் கொஞ்சமாக அவள் நண்பர்கள் வட்டம் பெருகியது.உங்களுக்குத்தான் தெரியுமே... எப்படி பட்ட குணம் உள்ளவர்கள் எல்லாம் இங்கே இருக்கிறார்கள் என்று. 

எனக்கே அந்த அனுபவங்கள் உண்டு. ஹாட் சாட்டுக்கு அழைக்கும் நபர்கள். 

ஒரு உண்மை சொல்லனும்னா.. பேஸ்புக்கில் அதிகபடியாக நண்பர்களை பிளாக் செய்தவர்கள் பட்டியலை பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டால் அனேகமாக நான் முதல் இடத்தில் இருப்பேன். 

கொஞ்சம் வார்த்தை நாகரீகம் தவறினாலும் அவர்களை பிளாக் செய்து விடுவேன். ஆனால் என் தோழி அதை செய்யவில்லை. விளைவு என்னாச்சு.

அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்பது மாதிரி அவள் மனம் கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சு கலந்தது. 

பெரும்பாலாவர்களின் ஹாட் சாட் என்பது பச்சையாக படுக்கையறை ரகசியத்தை பகிர்ந்து கொள்வது. 

முதலில் தனிப்பட்ட தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்பவர்கள், அடுத்து உன் அனுபவம் என்ற வார்த்தையை வீசி பார்கிறார்கள். 

அதற்கு இடம் கொடுத்து விட்டால் அடுத்து அந்த அனுபவத்தை நாம் பெற்றால் என்ன என்கிற கேள்வி. 

ஆனால் இந்த அளவிற்கு சம்மந்த பட்டவரை அழைத்துவர பொறுமையாக காத்திருப்பது தான் பெரிய விஷயமே. 

இதற்கு மானே.. தேனே... பொன்மானே இதையெல்லாம் பேச்சுக்கு இடையே போட்டு இருப்பார்கள்.

என் தோழி இந்த வலையில் தான் விழுந்து விட்டாள். மிக சாதாரணமாய் ஆரம்பித்த பேச்சு வார்த்தை பச்சை மஞ்சள் கருப்பு சிகப்பு என்று கலர் கலராய் பேசும் அளவிற்கு போய்விட்டது. 

இத்துடன் நின்றிருந்தால் பிரச்சனை இல்லை. போன் நம்பர்கள் பரிமாறி போனில் பேசும் அவவிற்கு போன போதுதான் வில்லங்கம் விஸ்வருபம் எடுத்தது. 

இதை எதேச்சையாக கவனித்த மாமியார்... என்ன மருமவ பொண்ணு  போன்ல இப்படி அசிங்க அசிங்கமா பேசுறாலே என்று தான் நினைத்து இருக்கிறது. 

ஒரு வேளை மகனுடன் தான் இப்படி பேசுகிறாளோ என்று மனதை சமாதான படுத்தி கொண்டாலும், இவ்வளவு காலமும் இப்படி பேசியது இல்லையே என்ற கேள்வி மட்டும் மனதை அரிக்காமல் இல்லை.

ஒரு நாள் மகன் வீட்டில் இருக்கும் போதே மருமகள் போனில் பேச ஆரம்பித்தாள். அப்போதுதான் உண்மை தெரிந்தது. பேசுவது மகனுடன் இல்லை... வேறு யாரோ...

பிரச்னை பூதாகரமாக வெடித்த போது கொஞ்சமும் கலங்காமல் இருந்ததுதான் அதிர்ச்சியின் உச்சகட்டம்.

இனிய இல்லறம் நடத்திய கணவனை விட, அன்புடன் கவனித்த மாமியாரை விட எங்கோ இருக்கும் அவனுக்காக தன் வாழக்கையை துறக்கவும் தயார் என்றாள். 

எஸ்.... எனக்கு டைவர்ஸ் வேண்டும் என்றாள். 

பிரச்சனை பொண்ணு வீட்டுக்கு வந்த போது தான் விஷயம் எனக்கும் தெரியும். 

அவன் யார், அவன் குணம் என்ன, என்ன செய்கிறான், என்ன செய்யபோகிறான் என்ற அடிப்படை கேள்விகளுக்கு கூட விடைதேடாமல், தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டு கொண்ட என் தோழியோடு பல முறை பேசி அவள் மனதை மாற்றி இருக்கிறேன். 


அதற்காக நான் எடுத்து கொண்ட முயற்சிகள் பல.நானே ஒரு புதிய கணக்கை உருவாக்கி அந்த நபரை நண்பராக்கி கொண்டேன். 


பின் அந்த கணக்கில் இருந்து அந்த மோசடி நபரோடு என் தோழியை பேச சொன்னேன். புதிய பெயர், புது கணக்கு. 


அந்த நபரும் ஆகா.. சிக்கிச்சுடா புதிய சிட்டு என்கிற ஆவலில் தன் முகத்தை காட்ட துவங்கினார். என் தோழியிடம் பேசிய அதே டயலாக், அதே கொஞ்சல்கள், அதே வர்ணனைகள்.  


அப்போதுதான் அவளுக்கு உண்மை புரிந்தது. இருப்பினும் பிரச்சனை அத்துடன் நின்று விடவில்லை.  அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. 


நல்ல கணவனுக்கு துரோகம் செய்துவிட்டோமே என்று மனசாட்சி உறுத்தி தற்கொலைக்கு முயன்றாள். கடைசி நேரத்தில் கண்டு பிடிக்க பட்டு காப்பாற்ற பட்டாள். 

இதை உங்களோடு பகிர்ந்து கொள்ள காரணமே சமிபத்திய பத்திரிக்கை செய்தி.

இந்த நேரத்திலே ஒரு வேதனையான செய்தி ஒன்றையும் சொல்ல வேண்டும். என் நண்பர்கள் வரிசையில் பல பெண்கள் இருந்தாலும் இதுவரை என்னிடம் பேசியவர்கள் யாரும் இல்லை. நான் இவ்வளவு விழயங்கள் எழுறேன். எந்த பொண்ணாவது கமான்ட் செய்திருக்கா. இல்லை... 

ஏன்...? 

இந்த கேள்விக்கு எனக்கு பதில் தெரியலை. அதுக்காக நான் வருத்தபடலை. மனசுல பட்டதை சொன்னேன்.


சரி..பத்திரிக்கை செய்திக்கு வருவோம்.





myjaffna என்ற வலை தளம் இந்த செய்தியை பிரசுரம் செய்திருக்கிறது. அது இதுதான்.

வேலூர் மாவட்ட கூடுதல் எஸ்.பி. முருகேசனிடம் சென்னை திருவல்லிக்கேணி உலகப்பன் தெருவை சேர்ந்த சுஜித்ரா என்ற பெண் கொடுத்த புகார்.



நான் கடந்த 7 ஆண்டுகளாக தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். 

அங்கு வேலை செய்யும் காயத்ரி தேவிக்கு பேஸ்புக் மூலம் சதீஷ் ஜெயராம் என்பவர் பழக்கமானார். 

அதைத் தொடர்ந்து சதீஷ் மற்றும் அவரது நண்பர் ஆனந்த்பாபு ஆகியோர் காயத்ரி மூலம் எனக்கு பழக்கமானார்கள்.

கடந்த ஜனவரி மாதம் சதீசும், ஆனந்த்பாபு சென்னை வந்து எங்களை வேலூரில் உள்ள கோவிலுக்கு செல்லலாம் என்று கூறி அழைத்துச் சென்றனர். 

ஆனால் கோவிலுக்கு போகவில்லை. வேலூரில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்து சென்றனர். அங்கு காயத்ரி, சதீஷ் ஒரு அறையிலும் நானும் ஆனந்தும் ஒரு அறையிலும் தங்கினோம்.

அப்போது ஆனந்த் என்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறி சத்தியம் செய்து என்னுடன் உல்லாசமாக இருந்தார். மறுநாள் நாங்கள் சென்னை வந்து விட்டோம்.

அதைத்தொடர்ந்து நாங்கள் தொலைபேசியில் பேசி வந்தோம். பிப்ரவரி மாதம் சதீஷ் மீண்டும் என்னைத் தொடர்பு கொண்டு ஆனந்தும் நானும் ஹோட்டலுக்கு வந்து விடுகிறோம். நீயும், காயத்திரியும் வந்துவிடுங்கள் என்றார்.

நாங்களும் சென்று அங்கு அவர்களுடன் 2 நாட்கள் உல்லாசமாக இருந்தோம். 

அதைத்தொடர்ந்து சில நாட்கள் ஆனந்த்பாபு தொலைபேசியில் பேசுவதை நிறுத்தினார். மார்ச் மாதம் மீண்டும் ஹோட்டலுக்கு வருமாறு கூறினார். நான் வர மறுத்து விட்டேன்.

அப்போது ஆனந்த்பாபு நாம் உல்லாசமாக இருந்ததை புகைப்படம் எடுத்து பதிவு செய்து உள்ளேன். நீ சம்மதிக்கவில்லை என்றால் இன்டர்நெட்டில் வெளியிடுவேன் என்று மிரட்டினார். 

அதனால் நான் பயந்து போய் மீண்டும் ஹோட்டலுக்கு சென்று ஆனந்த்பாபுவுடன் உல்லாசமாக இருந்தேன்.

இந்நிலையில் காயத்ரி தேவியை சதீஷ் ஏமாற்றி விட்டதாகவும், மேலும் அவர்கள் ஒரு கும்பலாக சேர்ந்து பல குற்றங்களில் ஈடுபடுவதாகவும் எனனை போல பலரை இப்படி ஏமாற்றியதும் தெரியவந்தது. 

எனவே ஆனந்த்பாபு மற்றும் அவருக்கு உதவியாக இருந்த சதீஷ், திலீப், லூயிஸ் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.

அவருடன் காயத்ரி தேவியும் எஸ்.பி. அலுவலத்துக்கு வந்து புகார் தந்தார்.

இதையடுத்து போலீசார் விசாரணையில் இறங்கினர். போலீசார் கூறிய யோசனையின்படி மீண்டும் சுஜித்ராவும், காயத்ரி தேவியும் ஆனந்த்பாபு மற்றும் சதீஷிடம் பேசினர்.

அவர்களை ராணிப்பேட்டை விடுதி ஒன்றிற்கு வருமாறு அழைத்தனர். அதை நம்பி நேற்றிரவு 9 மணி அளவில் இருவரும் நிரோத் சகிதமாக அங்கு வந்தனர். இருவரையும் போலீசார் வளைத்துப் பிடித்து கைது செய்தனர்.


இவர்கள் இன்னும் எத்தனைப் பெண்களை ஏமாற்றியுள்ளனரோ தெரியவில்லை. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. 

மேலும் பல நண்பர்களுக்கும் பேஸ்புக் மோசடிகளில் தொடர்பிருக்கலாம் என்று தெரிகிறது. இதனால், அவர்களையும் பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது ஒரு உதாரணம் தான். இது போல் பாதிக்க பட்ட பல்லாயிரம் பேர்கள் இருக்கிறார்கள். 


வெளியே தெரிந்தால் தங்களுக்கும் தங்கள் குடும்பத்துக்கும் இழுக்கு என்று மவுனமாகவே இருப்பவர்கள் பலர். என் தோழி தொடர்புடைய செய்தி கூட, இப்படித்தான் மறைக்கப்பட்டு விட்டது. 


என் நண்பர்கள் வரிசையில் இருந்தும் என்னோடு பேசாத தோழியரே வணக்கம். 


இப்போதும் எப்போதும் மாப்பிள்ளை வீரன் மாதிரி உலா வரும் நபர்கள் பேஸ்புக்கில் அதிகம். அதனால் கவனமாக இருங்கள். 


வார்த்தைகளை வளர்க்கும் நபர்களிடம் எச்சரிக்கை தேவை. நாகரிகம் தவறி பேசும் நபர்களை எக்காரணம் கொண்டும் ஊக்குவிக்க வேண்டாம். உடனே அவர்களை பிளாக் செய்து விடுங்கள். 


18  வயது பையன் 25  வயது பெண்ணிடம் என்னடி என்று மேஜெஸ் அனுப்புகிறான். இவர்களுக்கு மொட்டை மாடும் ஓன்று, கொம்பு மாடும் ஓன்று தான். 


என் தோழியின் நிலை வேறு. நேரடி சந்திப்புக்கள் இல்லை. வெறும் சாட்டிங், மற்றும் போன் வழி பேச்சு மட்டுமே. அதனால் கவனம்...கவனம்....கவனம்...

Friday 25 May 2012

கிருஷ்ணரின் கிறுக்கல் பக்கம்


டென்சன் டென்சன் டென்சன்....

பத்திகிட்டு வருதுன்னு சொல்றாங்களே....அதுக்கு ஒத்த வார்த்தைதான் இது. 

எதிர்பார்ப்புகளுக்கு நேர் மாறாக ஒரு காரியம் நடக்கும் போதும், அல்லது ஒருவர் செயல் பட்டாலும் ஏற்படும் வேதி வினை மாற்றத்துக்கு பெயர்தான் டென்சன்.
உதாரணமாய் அனந்தராமனை எடுத்துகோங்க. ஆபிஸ் உத்தியோகம். ஆனால் காலை நேர பரபரப்பு இருக்கே.. அடடா... கண்கொண்டு பார்க்க முடியாது. அத்தனை களேபரம். 

அனந்தராமனை பொறுத்தவரை திருப்பள்ளி எழுச்சி என்பது 7 to 7 .30 தான். அடுக்களையில் கேட்கும் அணுகுண்டு சத்தம், அதாங்க பாத்திரம் உருளும் ஓசை....கேட்டால் போதும் திடுக்கிட்டு விழிப்பான். 

இந்த இடத்தில் ஒரு விஷயத்தை சொல்லியே ஆகணும். விழிப்பு வந்ததும் வெட்டு பட்ட கோழி மாதிரி வெடுக்குன்னு கிளம்பாம, கண்ணை மூடிக்கிட்டு படுக்கையில் கிடக்கிற சுகம் இருக்கே, என்னத்த சொல்ல... வார்த்தையால வர்ணிக்கவே முடியாது அத்தனை சுகம். 

அந்த சுகத்திற்கு அனந்தராமன் அடிமை. ஆனால் சரியாய் ஒன்பதரைக்குள் ஆபிச்க்குள் நுழையலைனா புலி வாலை பிடிச்ச மாதிரி பிரண்டாம விடமாட்டார் மேனேஜர். இஹும்.

அது ஒரு கிழட்டு புலி. கறார் பேச்சும், கண்டிப்பு தோரணையும் எட்டாம் கிளாஸ்ல படிச்ச கிட்லர் பாடம் தான் நினைவுக்கு வரும். இவர் வில்லன் நம்பர் ஒண்ணு. 

இது அவர் பழக்க தோஷம். அனனந்தராமனை எடுத்துகோங்க... கால்ல சக்கரத்தை கட்டிண்டு கடகடன்னு வேலையை பார்த்தாலும் உதவி ஒத்சாசைக்கு ஒரு மனுஷாள்...ம்ஹும்.

பிரமசாரி என்கிற அவப்பெயரை போக்குறதுக்கு உதவினதை தவிர போன்ஜாதினால ஒரு பிரயோசனமும் இல்லை. அது ஒரு விசித்திர ஜந்து. ஏன்னும் கேட்காது, எடுத்து போட்டும் உடைக்காது. 

வாய் தவறி எதையாவது கேட்டால்...உங்க பசிக்கு நான் சாப்பிட முடியாது...உங்க வேலையை நீங்கதான் பார்த்துக்கணும். வெடுக்குன்னு தேள் கொடுக்கு மாதிரி கொட்டும்.  

அப்ப  ஏறும் பீபியை மேப்பா வரைஞ்சா..செங்குத்து கோடுதான். அது தொலையுது கழுதை. 

பெயர் சொல்ல பிறந்துது பாருங்க ஒரு பிள்ளை. இம்சை அரசன் 24 புலிகேசி. அது ஒரு தினுசு.


மேஜை மேல அசந்து மறந்து பேனாவை வச்சுட்டா போதும்...கால் முளைச்சு காணாமல் போய்டும். 

ஒரு சி பி சி டி விசாரணை போட்டு கண்டுபிடிச்சா..பேனாவின் தரத்தை தரையில் எழுதி பரிசோதித்து கொண்டிருக்கும் குழந்தை.

பி பி எகிறுமா எகிறாதா? 

அனந்தராமன் கூட டென்சனை குறைச்சுக்க வழி இருக்கு. ஒத்துபோகாத மனைவின்னு தெரியுது. அதுக்கு தகுந்த மாதிரி தன்னோட வேலைகளை பிளான் போட்டு செஞ்சிக்கனும். 

அதோட சின்ன பிள்ளைங்க வீட்டில் இருந்தா கையில் கிடைகிரத்தை எடுத்துக்கிட்டு விளையாடுறது சகஜம். முனஎச்சரிக்கையா பத்திரபடுத்திட்டா டென்சனை குறைச்சுக்கலாம் இல்லையா? 

நான் சொல்றது சரியா? 

Nanparkal kavanathirkku


Thursday 24 May 2012

சீனாவில் தடை

இரும்புத்திரை நாடு சீனா. அங்கே என்ன நடந்தாலும் அரசாங்கம் சொன்னால் மட்டுமே வெளியே தெரியும்.  கருத்து சுதந்திரம் என்பது இல்லை. ஊடகங்களுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடு. 


ஆனால் இணையதளம் பிரமாண்ட வளர்ச்சி பெற்ற இன்றைய காலகட்டத்திலும் கூட கண்கொத்தி பாம்பாக கண்காணித்து வருகிறது சீனா.

உண்மையில் அதிகம் இணையதளங்களில் உலாவுவோர் பட்டியலில் சீனர்கள்தான் முதலிடத்தில் இருக்கிறார்கள்.  

உலகம் முழுவதும் உள்ள மக்களில் பெரும் பகுதி தங்கள் தேடும் பொறியாக கூகிள் வலை தளத்தையே வைத்திருக்கிறார்கள். 

ஆனால் அந்த கூகிள் வலைத்தளத்தையே சீனா வெளியே போ என்று விரட்டி விட்டது. 

இத்தனைக்கும் சீனாவிற்கு ஆதரவாக இந்திய வரை படத்தையே மாற்றி காட்டிய பெருமை கூகிள்க்கு உண்டு. 

சீனாவில் கூகிள் மட்டும் அல்ல,  தடை செய்ய பட்ட தளங்களின் எண்ணிக்கை ஏராளம். 


அது ஏதோ பிட்டு படம் போடும் தளங்களை மட்டும் தடை செய்திருக்கிறது என்று நினைக்காதீர்கள். 

சீனாவில் பேஸ்புக் இல்லை, utub இல்லை, பெரிய மனிதர்களும், முக்கிய புள்ளிகளும் அதிகம் விரும்பும் twitter இல்லை. 

அதிவிட முக்கியமாக blogspot கள் இல்லை. இப்படி தடை செய்யப்பட்ட தளங்களின் எண்ணிக்கை பல லட்சங்கள் இருக்கும். 

நீங்கள் ஏதாவது ஒரு வலை பூ வைதிருக்கிரிர்களா....அது சீனாவில் தெரிகிறதா இல்லையா என்று எப்படி கண்டு பிடிப்பது? 


இதோ அந்த வலைதள முகவரி இருக்கிறது. அதை கிளிக் செய்து உங்கள் வலைபூவின் முகவரியை கொடுத்தால் நிலவரத்தை சொல்லி விடும். முயன்று பாருங்களேன். லிங்கை கிளிக் செய்யவும்  

Tuesday 22 May 2012

என் பிரியமான ராஜகுமாரா...!


என் பிரியமான ராஜகுமாரா...
பிரியமுடன்  நான்...
நலம்...  நலமா...

முன்பெல்லாம்
எனக்காக பூத்திருக்கும்
பூக்களோடு இருப்பேன்

மெல்லிசை பாக்கள் கேட்பேன்

ஆதித்தியா  சேனலை
அடிக்கடி திறப்பேன்

அது ஒரு காலம்..

இப்போது

தனிமை பிடிக்கிறது

தவிப்பாய் இருக்கிறது

உன்
பெயரை சொல்லும் அந்த
பேரானந்த நொடிகளில்

மின்னல் கீற்று
என் ஜன்னல் திறக்கிறது
ஏன்?


என் பிரியமானவனே
காதல் என்ற வார்த்தையை
கற்று தந்ததே நீ....

சொல்
என் இதய சுவர்களில்
உன் பெயரை எழுதியது எப்படி?

பாராங்கல்லில் எப்படி
பயிர் செய்ய முடிந்தது உன்னால்!

நீ தூரத்தில் இருந்தாலும்
துரத்தி வருகிறது உன் நினைவு

இல்லை ..இல்லை
அருகில் இருப்பதாய்
அடிக்கடி சொல்கிறது மனசு

உண்மையை சொல்லவா...
சில சமயம்
சுவாச பரிமாற்றம் மட்டும்தான்
நான் உயிரோடு இருக்கிறேன் என்பதற்கு
உத்திரவாதம்.

உன்னிடம் இருந்து
அழைப்பு வரும்போதுதான்
பிழைத்து கொள்கிறது உயிர்

என் உள்ளம் கவர் கள்வனே ...
உன்னிடம் சொல்வதற்கு
என்னிடம் ஆயிரம் ஆயிரம்
விஷயங்கள் இருக்கிறது...
ஆனால்
பேச நினைக்கும் போதெல்லாம்
நான் ஊமையாகி விடுகிறேனே எப்படி?


அன்பானவனே....
உயிர் வலிக்கும் உன் நினைவுகளை
ஒருவருக்கும் தெரியாமல் பாதுகாத்தேன்.
இருந்தும்
காற்றுக்கும் தெரிந்து விட்டது
நம் காதல்

நிலா கூட நேற்று விசாரித்து

நட்சத்திரங்கள்
என்னை பார்த்து
நக்கல் செய்கிறது

என் செய்ய...

பிறப்பின் ரகசியம்
பிரம்மாவிற்குத்தான் தெரியுமாம்
யார் சொன்னது?
நான் பிறந்ததே உனக்காக தானடா...

வா..
கட்டிக்கொள்
மூச்சு திணற இறுக்கு
சத்தமில்லாமல் முத்தமிடு
தோளில் துயில இடம் கொடு

கடைசியாய் ஓன்று
இந்திரனாய்
நீ இருந்தால்
இந்திராணி நான்தான்.

Sunday 20 May 2012

சிவபெருமானின் அம்சங்கள்

ஈசனின் அம்சங்களில் ஒருவரான பைரவர்

சிவ கணங்களில் சேத்திர காவலர் என்பார்கள். பைரவர் நீல திருமேனியுடன் காட்சி அளிப்பார். 

நான்கு கரங்கள், முக்கண்களும், சடாமுடியும் கொண்டு சூலம், பரசு, பாசம், உடுக்கை போன்ற ஆயுதங்களை கொண்டு சிவன் கோவிலில் வடகிழக்கு மூளையில் அமர்ந்து அருள் பாலிப்பார்.
அனைத்து உயிர்களும் சிவ பெருமானின் அம்சமான பைரவரிடம் ஒடுங்குவதாக சொல்லப்படுகிறது.  

கோவில்களில் தினமும்  பூஜை முடிந்த பின் இரவு கதவை பூட்டி சாவிகளை பைரவ பெருமானிடம் ஒப்படைப்பது  வழக்கம்,  இந்த பழக்கம் இப்போதும் உண்டு. 

கடைசியாக கதவினை மூடுவதற்கு  முன் பைரவர் சன்னதியில் சாவி கொத்தினை வைத்து எடுத்து செல்வதை காணலாம்.

பைரவர் பற்றிய வரலாறுகள் பல இருப்பினும் இது முக்கியமானது. 

பிரம்மனுக்கு ஆரம்பத்தில் 5 தலைகள் இருந்தன. உலக  உயிர்களை எல்லாம் நாம் தானே படைக்கிறோம் என்ற ஆணவம் தலைகேறி சிவபெருமானையே கேலி செய்தார். 

இதை அறிந்த சிவன் பிரம்மாவின் ஆணவத்தை அடக்கி வைக்க, தனது அம்சமான சர்வ சக்தி படைத்த பைரவரை உருவாக்கினார்.

பிறகு சிவபெருமானின் கட்டளைப்படி சிவனின் அம்சமாக தோன்றிய பைரவ மூர்த்தியும் பிரம்மாவின் ஒரு தலையை கில்லி எடுத்தார். பிரம்மாவின் ஆணவம் அழிந்தது.

                                                                     
                                                                 அகோர வீரபத்திரர்
 
பிரம்மாவின் மகன் தட்சன் தான் நடத்தும் யாகத்திற்கு சிவபெருமானை மட்டும் அழைக்காமல் எல்லா தெய்வங்களையும், தேவர்களையும், முனிவர்களையும் அழைத்தான். தந்தையின் இந்த செயல் கண்ட தாட்சாயணி கோபம் கொண்டு குற்றத்தை தந்தைக்கு எடுத்து கூறினாள்.

அகங்காரம் கொண்ட தச்சன்  கேட்கவில்லை. இதை அறிந்த சிவன் கடும் கோவம் கொண்டார்.

அந்த உச்சகட்ட உக்கிர கோவத்தில் அவதரிக்க செய்தவரே அகோர மூர்த்தி என்கிற அகோர வீரபத்திரன்.

64 மூர்த்திகளில் ஒருவருமாக முக்கிய அவதாரம் வீரபத்திர அவதாரமாகும்.

                                                                            சரபேஸ்வரர்
 சிவன், விஷ்ணு,காளி, துர்க்கை என நான்கும் ஒன்றாக இணைத்ததுதான் சரபேஸ்வரர்.

மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யகசிபுவை சம்ஹாரம்  செய்து உதிரத்தை பருகியதால் மிகவும் உக்கிரமாகி வேல்லோரையும் அழித்து வந்தார்.

 அவரை சாந்தபடுத்த தேவர்கள் சிவபெருமானை வணங்கினார்கள். இதனால் சிவபெருமான் யாழி முகத்துடன் 8 கால்கள், 4 கைகள், 2 இறக்கைகள் கொண்ட சரபட்சியாக தோன்றினார்.


பின்  நரசிம்மத்தை தனது வஜ்ஜிராயுததால் கவ்விக்கொண்டு, புவிஈர்ப்பு தளர்த்துக்கு மேலே காற்று மண்டலத்திற்கு சென்றார்.

தனது வஜ்ஜிராயுத்தால் அசுர ரெத்ததை உறுஞ்சி எடுக்கிறார். அது காற்றுடன் கலந்து விடுகிறது. இந்த உருவத்துடன் சரபேஸ்வரர் அருள்பாலிக்கிறார்.

திருமண தோஷமா? கணவன் மனைவி ஒற்றுமை குறைவா? குழந்தை பேரு இல்லையா? வெள்ளிகிழமை ராகு காலத்தில் சரபேஸ்வர் வழிபாடு இக்குறையை நீக்கும்.

தீராத வியாதியா? நீண்டநாள் நோய் பிரச்சனையா? ராகு கேது தோஷம் இருக்கிறதா? சனிக்கிழமை ராகு காலத்தில் சரபேஸ்வர் வழிபாடு இக்குறையை நீக்கும்.

எதிரிகள் தொல்லயா? கோர்ட் வழக்குகள் இருக்கிறதா? அப்படியானால் ஞாயிற்று கிழமை ராகு காலத்தில் சரபேஸ்வர் வழிபாடு இக்குறையை நீக்கும்.

படிப்பு, உத்தியோகம், வியாபாரம், இவற்றில் சிறந்து விளங்க வேண்டுமா திங்கள் கிழமை ராகு காலத்தில் சரபேஸ்வர் வழிபாடு இக்குறையை நீக்கும்.


                                                                       சண்டேஸ்வரர்


திருக்கோவில்களில் கருவறைக்கு வடக்கு பக்கத்தில் அபிழேக தீர்த்தம் விழும் கொமுகியை அடுத்து அமைந்திருக்கும் சிறிய சன்னதியில் சண்டேஸ்வரர் திருவுவத்தை காணலாம்.


கோவிலில் உள்ள தெய்வங்களையெல்லாம் வணங்கிய பின் கடைசியாக இவரை வணங்க வேண்டும் என்பது மரபு. இவரை வணங்கும் போது இவருக்கு இடியூறு செய்யா வண்ணம் நம் வேண்டுதல்களையும் பிராத்தனைகளையும் செய்ய வேண்டும்.


நான் கோவில் இருந்து எதையும் எடுத்து செல்லவில்லை என்று சொல்வதற்காக இருகைகளையும் தட்டி ஓசை எழுப்பி வணங்க வேண்டும் ஒரு கதை சொல்லபடுகிறது. இது முற்றிலும் தவறு.


சண்டேஸ்வரர் சிவபெருமானால் ஏற்று கொள்ளப்பட்ட பிள்ளையாவார்.

மதங்களின் நம்பிக்கை

                                                                ஹிந்துவின் நம்பிக்கை
 
நமக்கும் மேலே ஒரு சக்தி உண்டு. அதுதான் கடவுள். அவர் சகல பொருளிலும் இருக்கிறார். சகல ஜிவராசிகளைளும் படைக்கிறார். அவர் இன்றி அணுவும் அசையாது.
 
 இந்த உலகம் ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற சுழற்சி முறையில் தான் செயல்படுகிறது. 

உயிரின உற்பத்தி கர்மாவின் காரணமாகவே உருவாகிறது. ஊழ்வினை என்பது மிக முக்கியம். அதை அந்த உயிர் அனுபவித்தே ஆக வேண்டும்.
 
மனிதனுக்கு பல பிறவிகள் உண்டு. குறிப்பாக 7 பிறவிகள். மனிதனாக பிறந்தவன் மீண்டும் மனிதனாக பிறப்பான். வேறு பிறப்பு எடுத்து விட்டால் மிண்டும் மனிதனாக பிறக்க வழில்லை.

புராணங்களும், சாஸ்திரங்களும் மனிதன் மனிதனாக வாழ வழிமுறைகளை  சொல்லி தருகிறது. அதை  கடைபிடிக்க வேண்டியது ஒவ்வொரு ஹிந்துவின் கடமை. 

வழிபாடு, சடங்குகள், இவற்றை கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும். சம்சார வாழ்க்கை என்பது சந்ததி விருத்திக்கு. தன் வாழ்நாளின் இறுதில் துறவற வாழ்க்கை என்னும் பற்றற்ற வாழ்க்கை நெறிகளை பின்பற்ற வேண்டும்.
 
 நீ நன்மை  செய்தால் நற்கதி அடைவாய். தீமை செய்தால் நரகத்துக்கு போவாய். 

                                                       இஸ்லாமியர் நம்பிக்கை
 
அல்லா தவிர வேறு கடவுள் இல்லை. அல்லாதான் எல்லாம். அவர்தான் படைக்கிறார். அவர்தான் காக்கிறார். 

இந்த உலகத்தில் மேலான ஓன்று வேறில்லை. முகம்மது,  அல்லாவின் இறைத்தூதர். 

 அவர் திருவாய் மொழியாக சொல்லிய திருகுரானை என் வாழ்நாள் முழுவதும் கடை பிடிப்பேன்.

என் வாழ்நாளில் கடை பிடிக்க வேண்டிய கர்மங்கள் இவை.
 
1 . ஐந்து முறை தொழுகை.
2 . இல்லாதவருக்கு தானங்கள் செய்வது.
3 . புனித நோம்பு இருப்பது.
4 . வாழ் நாளில் மெக்கா போவது.
5 . வேறு மத வழி மார்க்கத்தை நாடாமல் இருப்பது.
 
இறைவனை வழிபட இடைத்தரகர்கள் தேவை இல்லை. அவர் அனைவரையும் சரி சமமாக பார்க்கிறார்.  இறைவனை உருவமாக பார்க்க முடியாது. அவர் எல்லாமாக இருக்கிறார்.
 
ஆன்மா அழியாது. உடலோடு தோன்றிய ஆன்மா மீண்டும் அவர் செய்த பலனுக்கு ஏற்ப, சொர்க்கத்துக்கோ அல்லது நரகத்துக்கு போகிறது. கடவுள் கருணை இருந்தால் மோட்சம் பெறலாம். 

                                                             கிருஸ்தவர்கள் நம்பிக்கை 

ஆன்மாவிற்கு அழிவில்லை. இருப்பினும் ஆன்மா ஒரு முறைதான் பிறப்பெடுக்கும். 

பிறப்பெடுக்கும்  ஒவ்வொரு மனிதனும் பாவிதான். உலகை காக்கும் ரட்சகர் எசுகிருஸ்து ஒருவரால்தான் மனிதனுக்கு மோட்சம் அளிக்க முடியும். 

அவர் ஒருவரே பிதா. அவரின் மாதா கன்னிமேரி.
 
 இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் பெற்ற பிறகு அழிவில்லாதவர்..  

இந்த பூமியில் பிறந்த எல்லா உயிர்களும் பரம  பிதாவிற்கு கட்டு  பட்டவை. அவருக்கு பதில் சொல்லும் கடமை உண்டு. 



வேத நூலில் சொல்லிய பிரகாரம் வாழ வேண்டும்.
 
 நீ ஏசுவை முழு மனதோடு நம்பினால் உன் எல்லா பாவங்களும் கழுவப்படும்.

இறைவனே உனக்கு கடைசி தீர்ப்பை வழங்குவார். பாவ விடுதலை பெற்றவர்கள் சொர்க்கம் போவார்கள்.  

இறைவனால் ரட்சிக்க படாதவர்கள் நரகம் போவார்கள்.  தீமை, துன்பம், ஏமாற்றம் இவற்றின் உருவமாக சைத்தான் இருக்கிறது.  

செய்த செயல் பவம் என்று தெரிந்தால் உடனே பாவ விமோச்சனம் பெற வேண்டும்.

                                                                   
                                                             புத்தமத நம்பிக்கை
 

இறைவன் இருக்கிறாரா.. தெரியாது. ஒரு வேலை இல்லாமலும் இருக்கலாம். 

இறைவன் இல்லையா.. அதுவும் தெரியாது ஒரு வேலை இருக்கலாம். 

நீ அதை பற்றி கவலை படாதே. இந்த உலகம் ஒரு சூனியம்.
 
 உலக வாழ்க்கை துன்பம் நிறைந்தது. ஆசையே துன்பத்திற்கு காரணம்.ஆசைகளை அடியோடு துறப்பது ஒன்றே விடுதலைக்கு வழி.
 
ஒவ்வொரு மனிதனும் எட்டு நெறிகளை தன் வாழ்நாளில் கடை பிடிக்க வேண்டும்.



1 .நம்பிக்கை.
2 . குறிக்கோள்
3 . பேச்சு
4 . செயல்
5 . முயற்சி
6 . தொழில்
7 .சிந்தனை
8 . தியானம்
எல்லா உயிர்களையும் நேசி. அன்பும் இரக்கமும் முக்கியமானது. 

இருக்கிறாரா இல்லையா என்று தெரியாத இறைவனுக்கு நீ படைக்கும் பொருளை விட புனிதமானது. புண்ணியம் நிறைந்தது.
 
 அதிகமான ஆடம்பரத்தையும், துறவையும் தவிர்த்து சாதாரணமாக வாழ கற்றுகொள். 

தர்மா கர்மா அதாவது பிறப்பு இறப்பு என்ற வேறுபட்ட சுழச்சில் இருந்து விடுபட இந்த வாழ்வு ஒரு வாய்ப்பு.

Saturday 19 May 2012

என்ன படிக்க போறீங்க?

தம்பி வா.. 

உன்னோடு கொஞ்சம் தனிமையில் பேச வேண்டும்...... உட்கார். 

ஏன் உன் முகத்தில் பிரகாசம் இல்லை.

ஒ.. ரிசல்ட் வரப்போவுதா... 

எனக்கு நீ நிச்சயம் நல்ல மார்க் வாங்கி பாஸ் பண்ணிடுவே. அதிலே ஒன்னும் சந்தேகம் இல்லை.
 அட...... உட்கார் தம்பி.  ஒ... உனக்கு வேற கவலையா... நீ வாய் விட்டு சொல்லா விட்டாலும் எனக்கு தெரியும். 

மேற்கொண்டு என்ன படிக்கிறதுன்னு குழப்பமா இருக்கா? உன்னை சுற்றி பல வசனங்கள் கேட்டு இருக்குமே.

நீ இஞ்சினியருக்கு படி.  வெளிநாட்டில் நல்ல கிராக்கி. 

டாக்டருக்கு படி.. பத்தே வருஷத்திலே பணக்காரனா ஆயிடலாம். காலத்துக்கும் கவலை இல்லை. 

ஆடிட்டருக்கும் நல்ல மவுசுதான். நம்ம மாரிமுத்து மவன் படிச்சுட்டு மெட்ராசுலேயே செட்டிலாயிட்டான். 

வாத்தியாருக்கு படிச்சா வாழ்க்கை ஓடும். இருந்தாலும் இப்போ கிராக்கி கம்மி. நிறைய பேர் படிச்சுட்டு சும்மா இருக்காங்க.

இப்படி மாறி மாறி வசனங்கள்  உன்னை சுற்றி ஒலித்திருக்காலாம். அடுத்த வீடு, எதிர்த்த வீடு, பக்கத்து வீடு, சித்தப்பா, பெரியப்பா....இப்படி யாராவது அறிவுரை வழங்கும் அறிவுடை நம்பியாக மாறி, அட்வைஸ் வழங்கி இருக்கலாம்.

ஏய் வக்கீலுக்கு படிக்க ஆசை பட்டேன் முடியலை. எனக்கு ஒரே பிள்ளை நீ. உன்னை வைக்கிலாக்கி பார்ப்பது என் கனவு - ஒரு அப்பா.

பச்சிலை அரைச்சு குடிச்சே எங்க காலம் ஓடி போச்சு. எங்கப்பனுக்கு வசதி இருந்திருந்தா நான் வைத்தியம் படிச்சு இருப்பேன். வயலை பார்க்கவே ஆள் இல்லை. வாயை மூடிக்கிட்டு  போடான்னு என் பாட்டன் சொன்னார். என் காலம் கடைசி வரை மண்ணை கிண்டியே ஓடி போச்சு.

நம்ம குடும்பத்திலே ஒரு டாக்டர் இருந்தா நமக்கு பெருமையா இருக்கும்- வயதான தாத்தாவின் விருப்பம். 

நான் போஸ்ட்மேனா குப்பை கொட்டுறேன். நீயாவது படிச்சு உருப்புடு. கம்யூட்டர் சயன்ஸ் படிக்கலாம் - இது அண்ணாவின் அபிப்பிராயம். 

இப்படி ஆளாளுக்கு ஒன்னை சொல்லி உன்னை குழப்பி விட்டுட்டாங்களா.

யாராவது உனக்கிட்டே கேட்டாங்களா? இல்லையா...சரி... நான் கேட்கிறேன் சொல்லு. உன் மனசுல என்ன இருக்கு. 

எதிர்காலத்திலே என்னவாகன்னும்னு ஆசை. நீ பெரிய பிஸ்னஸ்மேனா வரணும் அதனால பி. பி. எ படிக்கணும்னு நினைச்சியா?  

பெரிய ஹோட்டல் கட்டனும் அதனால ஹோட்டல் மேனேஜ்மென்ட் தான் ஓகேன்னு முடிவு செய்தியா? இல்லை வேற  ஏதாவது ஐடியா இருக்கா.  

தம்பி பெருசுங்க எல்லாம்... பணம் சம்பாதிக்கிறது எப்படின்னு தான் ஐடியா கொடுக்குது.

வாழ்க்கையில பணம் முக்கியம்தான். ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை. 

ஆத்ம திருப்தி வேண்டாமா? 

நீ என்ன மிஷினா . பட்டனை தட்டினால் ஓட.  

வாழ்க்கை. 

உனக்கு பிடிக்காத வேலையில காலத்துக்கும் கஷ்ட பட முடியாது. அதனால் உன் விருப்பத்தை சொல்லு. புரிய வை.. 

பெற்றோர்களே.. உங்களின் தனிப்பட்ட விருப்பங்களை பிள்ளைகளின் மேல் திணிக்காதீர்கள். 

உங்கள் விருப்பம் நிறைவேறலாம். ஆனால் பையனின் எதிர்காலம் கேள்வி குறியாகி விடும். 

இன்று வயதில் இளையவன்.. என் கட்டுப்பாட்டில் பையன் இருக்கிறான். அவன் எதிர்காலத்தை தீர்மானிக்க எனக்கு தெரியாதான்னு, நீங்களா ஒரு முடிவுக்கு வராதீங்க. 

நிறைய பேர் இப்படிதான் அதிகாரத்தை கையில் எடுத்துகிறாங்க.  என் பிள்ளை என் இஷ்ட படித்தான் படிக்கணும். இப்படி யோசிச்சா... தப்பா  நினைக்காதிங்க முட்டாள் தனமான முடிவு.

மறைந்த ஜோதிட மேதை P . S . P சொன்னதா ஒரு கதையை என் அண்ணா கிருஷ்ணர் சொன்னார். அந்த கதையை உங்களுக்கு சொல்றேன். கேளுங்க.

உங்களுக்கு சச்சின் டெண்டுல்கரை தெரியும். கிரிக்கெட்டில் ஜாம்பவான். சதத்தில் சதம் கண்டவர். இன்று அவர் என்ன செய்தாலும் சாதனை தான். 

 உலகம் முழுவதும் அவருக்கு ரசிகர் கூட்டம் இருக்கு. ஒரே வரியில் சொல்லனும்னா தொடமுடியாத தூரத்திற்கு போய்ட்டார்.

ரஜினிகாந்தை தெரியும். அவர் சினிமாவில் சூப்பர் ஸ்டார். படம் நடிக்கிறேன்னு சொன்னால் போதும் பணத்தை மூட்டை கட்டி கிட்டு வாசல்ல தவம் இருக்காங்க. அவரும் தொடமுடியாத தூரத்திற்கு போய்ட்டார். 

 இப்போ டெண்டுல்கர் சினிமாவில் நடிச்சா எப்படி இருக்கும்? 

ரஜினிகாந்த் கிரிக்கெட் விளையாடினா எப்படி இருக்கும். 

ரெண்டு பேருமே வாழ்க்கைலே தோத்து போயிருப்பாங்க இல்லையா? 

 நீ இப்போ சொல்லு என்ன முடிவு எடுக்க போற..

பெற்றோர்களே .... உங்க பிள்ளை எப்படி ஆகணும். அவங்க திறமைக்கு தகுந்த மாதிரி உருவகட்டுமா... இல்லை.. டெண்டுல்கர் சினிமாவில் நடிச்ச மாதிரி ஒன்னும் இல்லாம அக்க போறிங்களா?
 தம்பி வா... தனித்து முடிவெடு. தைரியமாக முடிவெடு.






செல்லுக்கு வந்த SMS


Friday 18 May 2012

பேஸ்புக்கில் பார்த்தது

பேஸ்புக்கில் சில சமயம் நல்ல விஷயங்களும்  வரும். சிரிக்கவும் சிந்திக்கவும் செய்கிற மாதிரி இருக்கும். 

அப்படி நான் கண்ட சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இது எல்ல்லாம் அவர்களின் சொந்த கருத்தா.. அல்லது வேறு வலை தளத்தில் இருந்து எடுத்தார்களா என்பது தெரியாது. 

அதனால் வெளி இட்டவர்கள் போட்டோ போட்டே வெளி இடுகிறேன். வேறு வலை தளத்தில் இருந்து எடுக்க பட்டதாக இருந்தால் அந்த வலைதள உரிமையாளர்கள் அருள் கூர்ந்து பொருத்து கொள்ளுங்கள்.

சில பொண்ணுங்க கவிதை இவர் சொன்னது AS- sivabalan



billa kumar
இவர் பில்லா குமார். இவர். அந்த கவிதையின் பின் பக்கத்திலேயே அந்த வலை தள முகவரி இருக்கிறது. நன்றி 

senthil
 இவர் செந்தில்குமார். இவர் வெளியிட்ட  ஒரு அழகான அட்டவனை இது.



இவர் கார்த்திக் aska . வார்த்தைகள் இல்லாமல் ஒரு வாழ்க்கையை சொல்கிறது. வெல்டன்  




 இவர் nizamdeen இவர் அனுப்பிய  படம்  இதோ   



   

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...