ads

Monday 7 May 2012

Ruthratcha Greatness

ஜெர்மன் ஆய்வு கூடத்தில் இடைவிடாமல்  நடக்கிறது ஒரு ஆய்வு. 

எதை பற்றி? 

சிவனின் அம்சமான ருத்ராச்சத்தை பற்றிதான். ருத்ராச்சத்தில் இருந்து எந்நேரமும் ஒரு மின்காந்த அலைகள் எழுகிறதாம். 

 காலை வெயில் கண்ணுக்கு நல்லது. மாலை வெயில் மனதுக்கு  இதம் என்பது போல், ருத்ராச்சத்தில் இருந்து வெளி வரும் காந்த அலைகள் மனிதனுக்கு ஆரோக்கியத்தை தரும். 

அலைபாயும் மனதை அடக்கியாள உதவுகிறது. சுய கட்டுப்பாட்டை உருவாக்கும். மனிதன்  மனிதனாக வாழவைக்கிறது என்கிறார்கள். 

இதை பற்றிதான் ஜெர்மனியில் ஆய்வு நடக்கிறது.


இந்த இடத்தில நாம் ஒன்றை யோசித்து பார்க்க வேண்டி இருக்கிறது. ஞானிகளும், ரிஷிகளும், முனிவர்களும், தவ சித்தர்களும் ஏன் இந்த ருத்ராச்சத்தை அணிந்து கொண்டார்கள் என்பது புரிகிறது.

 ஒரு மனிதனுக்கு மனக்கட்டுப்பாடு வந்து விட்டால், அவன் வழி தவறி போக வழியில்லை.  மனிதம் உணர்ந்தவன் அந்த மகேசனுக்கு இணையாக இருக்கிறான். அதனால் தான் ஞானிகள் ருத்ராச்சத்தை அணிந்து இருக்கிறார்கள்.

இந்து மதம் சொல்கிறது. எண்ணிய காரியங்கள் ஈடேற புண்ணிய நதியில் நீராடு. புண்ணிய நதியில் நீராடினால் செய்த பாவங்கள் தீரும். 

புண்ணிய நதிகள் என்னென்ன? 

கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, சிந்து, காவேரி. இந்த ஏழு நதிகளில் நீராடினால் ஈரேழு 14 பிறவியிலும் செய்த பாவங்கள் தீரும். புண்ணியம் சேரும். சிவலோக பதவி கிட்டும் என்கிறது இந்து சாஸ்த்திரம்.

 ஆனால் இந்த நதிகளில் நீராடும் பாக்கியம் எத்தனை பேருக்கு கிட்டும்? ஆயிரத்தில் ஒருவர், இல்லை லட்ச்சத்தில் ஒருவருக்கு கூட இந்த பாக்கியம் கிட்டுமா என்பது சந்தேகம். 

அப்படியானால்... மற்றவர்கள் ஊழ்வினை பலனில் இருந்து விடுபட்டு கடைதேறுவது எப்படி? அதற்குதான் ருத்ராச்சம்.

பிரம்ம முகூர்த்தம்  என்று சொல்லக்கூடிய சூரிய உதயத்திற்கு ஒன்னரை மணி நேரத்திற்கு முன்பு, ருத்ராச்சம் அணிந்து கொண்டு நீராடினால் புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும்.  

அது மட்டும் அல்ல. இந்து தர்மம் சொல்கிறது. வேதத்தால் ரிஷிகளையும், ஹோமத்தால் தேவர்களையும், சிரார்த்தத்தால் பிதிர்களையும், அன்னத்தால் அதிதிகளையும், தரிசனத்தால் தெய்வங்களையும் திருப்தி செய். உன் வாழ்க்கை ஒளி மயமாகும் என்று.

அத்தனை பலன்களையும் மொத்தமாக தருவதுதான் ருத்ராச்சம்.

 புருஷர்களில் விஷ்ணு, 

கிரகங்களில் சூரியன், 

குதிரைகளில் உச்சராஸ், 

 தேவர்களில் மகாதேவர், 

தேவிகளில் கௌரி, 

பசுவில் காமதேனு, 

யானைகளில் ஜராவதத், 

மந்திரங்களில் காயத்ரி, 

உலோகங்களில் தங்கம், 

ரத்தினங்களில் வைரம், 

அதை போல் மணிகளில் ருத்ராச்சம் சிறந்தது.

பொதுவாக ருத்ராச்சம் சிவனருளை பெற்று தருகிறது என்பது இருக்கட்டும். மறுபுறம் நோய் எதிர்ப்பு சக்தியையும் பெற்று தருகிறது. உடலோடு ஒட்டி உறவாடும் ருத்ராச்சம் ரத்த ஓட்டத்தை சீர்படுத்தி நோய் தொல்லையில் இருந்து பாது காக்கிறது. இதை பற்றி இன்னும் விரிவாக வேறு பதிவில் காண்போம்.

1 comment:

  1. dear sir,
    im just new to ur blog. ur blog is awesome. lot of informations ,which are i searched and i learn many new facts. i read ur all posts in ur blog stil date. very very fantastic

    particularly spiritual posts are really great. infinte crore thanks to u i search most like this sir & thanks again sir.

    1 request to u sir. please create subscribing button in ur blog. thatis very useful for all geting posts via mail.

    plz give the name of ur facebook page .
    that is very easy for getting, SHARE, like ur page.

    particularly share with my friends. that also increase ur blog traffic.

    thank u sir,


    -sathish kumar

    ReplyDelete

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...