ads

Thursday 25 October 2012

தங்க நகைகளை பாதுக்காக்க டிப்ஸ் !


முத்துக்களை பராமரிக்க!


வைரநகைகளோடு முத்துபதித்த அணிகலன்களை எப்போதுமே வைக்காதீர்கள். வைரங்களால் முத்துக்களில் கீறல் ஏற்பட்டு விடும். 

முத்துக்களை, முத்து பதித்த நகைகளை சுத்தம் செய்வதாக இருந்தால் மிருதுவான துணியால் எரிசாராயத்தில் நனைத்து சுத்தம் செய்ய வேண்டும். 

முத்துக்கள் வெண்மையாய், அல்லது அதன் இயல்பான நிறத்துடன் எப்போதுமே பளிச்சிட முத்து நகைகளை தண்ணீர் படாமல் பாதுகாக்க வேண்டும். வெண்பூசணி சாறு முத்துக்களை சுத்தம் செய்ய மிக நல்லது. 

கவரிங் நகைகளை பாதுகாக்க!


கவரிங் நகைகளை தங்க நகையுடன் போடாவேக் கூடாது. இது தங்க நகையையும் சேர்த்து பாழாக்கிவிடும். கவரிங் நகையும் கெட்டுப் போகும்.

கவரிங் நகைகளை டிஷ்சு பேப்பரில் சுற்றி காற்று புகாத கண்ணாடி பெட்டியில் வைத்து உடன் ஒரு சாக்பீஸ் போட்டு இறுக்கமாக முடிவிட வேண்டும். இப்படி செய்தால் புதிதாய் வாங்கியது போலவே எப்போதும் இருக்கும். 

தங்கநகைகள் தக தகவென பளிச்சிட !


ஒரு சிட்டிகை சோடா உப்புடன் மஞ்சள்தூளையும் சேர்த்து வெது வெதுப்பான நீரில் கலந்து நகைகளை கழுவினால், அவை புதிது போலவே பள பளக்கும்.

தங்க சங்கிலிகள் சிக்கு மாட்டிக்கொண்டால்( முடிச்சு போட்டுக்கொண்டால் ) முகப்பவுடரை அதன் மேல் தடவி பிறகு சிக்கலை பிரியுங்கள். சுலபமாய் அவிழ்ந்து விடும்.

நிறம் மங்கிப்போன தங்க நகைகள் பளிச்சென்று ஒளி விட வேண்டுமா? மஞ்சள்தூளில் இருக்கிறது மகிமை.

சிறிதளவு மஞ்சள்தூளை நகைகளின் மேல் தடவி மெல்லிய துணியால் துடைங்கள். புதுசு போல் ஜொலிக்கும்.

1 comment:

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...