ads

Wednesday 17 October 2012

வீடு கட்ட போறீங்களா?


வாழும் மனிதனுக்கு எப்படி வயது உண்டோ, அதைபோல் கட்டுகிற வீட்டிற்கும் கட்டாயம் வயது உண்டு. புதிய வீடுகள் கட்டும்போது பழைய வீட்டின் மரப்பாகங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

ஏன்?

அதன் ஆயுள் காலத்தை பழைய வீட்டில் இருந்தே கழித்து விட்ட மரங்கள் புதிய விட்டில் பொலிவை தராது. 

சரி...

இன்று நேரடியாக மரங்களை கடையில் வாங்கியே கட்டிடங்களை கட்டுகிறோம். அவசர உலகத்தில் அதற்கே நேரம் இல்லை. ஆனால் மரங்களை வாங்குவதற்கென்றே சில குறிப்புகள் இருக்கிறது.

என்னவோ?


நம்ம ஊரு பெரிசு.... நாடு விஞ்ஞானிகள் கிட்டே கேட்போம் வாருங்கள்.
வணக்கம் பெரியவரே..

வணக்கம் தம்பி என்ன விசேஷம்.

விட்டு நிலைப்படி ஜன்னலுக்கு மரம் வாங்கணும். அதைபத்தி கொஞ்சம் குறிப்புகள் கொடுத்திங்கன்னா நல்லா இருக்கும்.

சொல்றேன். மரம் என்று பொதுவா சொன்னாலும், அதிலே ஆண் மரம், பெண் மரம், அலி மரம்ன்னு மூணு வகை இருக்கு தெரியுமா?

தெரியாதையா...

சொல்றேன்.  ஆண் மரம் என்பது வேர்  பகுதில்  இருந்து கிளை பரப்புகிற பகுதி வரை உள்ள தண்டு பகுதி ஒரே அளவா இருக்கும். அப்படி இருந்தால் அதை ஆண் மரம் என்று சொல்வார்கள்.

இந்த ஆண் மரத்தை வச்சு நிலைப்படி அறுகால் செய்ய உத்தமம்.

அடிப்பகுதி பெருத்தும் முனிப்பகுதி சிறுத்தும்  இருந்தால் அது பெண் மரம் என்று பெயர்.

இந்த பெண் மரத்தில் இருந்து வரும் மரங்களை வைத்து ஜன்னல், அலமாரி, கட்டில் போன்றவை செய்யலாம்.

அடிப்பகுதியும் மேல்பகுதியும் ஒரே அளவாகவும், நடுப்பகுதி பெருத்தும் முடிச்சுமாக இருந்தால் அது அலை மரம் என்று பெயர்.

இந்த மரத்தில் இருந்து சட்டங்கள், உத்திரம், கூறைப்பகுதி போன்றவற்றிற்கு  உகந்தவை.  சரியா..

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...