ads

Saturday 17 November 2012

பில்லி சூனியம் செய்வினை கோளாறுகள் அகல!


narasimmar
சிங்கமுகம், மனித உடல், பார்ப்பதற்கு பயம் காட்டும் கோரை பற்கள் கொண்டவர்தான் நரசிம்மர். 

அவதார நாயகன் விஷ்ணு பகவான் எடுத்த அவதாரங்களில் இவருக்கென்று தனி சிறப்பு உண்டு. 

அப்படி என்ன சிறப்பு?

சொல்றேன். தெய்வ தரிசனங்கள் எப்போது கிடைக்கும். தவம் செய்த பிறகும், பிராத்தனைகள் செய்த பிறகும் கிடைத்ததாய் புராணங்கள் சொல்கிறது. 

அதாவது மேலான பக்தி கொண்டவர்களுக்கு மட்டும். அதனால் தான் ரிஷிகள், ஞானிகள், முனிவர்கள் அந்த பாக்கியத்தை பெற்றார்கள். 

ஆனால் எந்த வேண்டுகோளும் இல்லாமல், வேண்டுதலும் இல்லாமல் ஒரு சிறுவனுக்காக வந்த அவதாரம் தான் நரசிம்மம். 

ஹிரண்ய கசிபுவின் கோவமான கேள்விக்கு பதில் சொன்ன பிரகலாதன், நான் வணங்கும் ஹரி...  தூணிலும் இருப்பார் , துரும்பிலும் இருப்பார் என்று நம்பிக்கையோடு சொன்னான். 

narasimmar and hiranya hasipu
அந்த நம்பிக்கையை மெய்யாக்க தூணில் இருந்து வெளி வந்தவர்தான் நரசிம்மர்.

பைரவர், சக்கரத்தாழ்வார் போன்று நரசிம்மரும் பக்தர்க்களுக்கு பாதுகாவலானாக இருக்கிறார். இவரை வணங்க எந்த தயக்கமும் தேவையில்லை. நம்பிக்கை ஒன்றே பிரதானம். 

pairavar


sutharsanam
பார்ப்பவர்களுக்கு பயம் காட்டும் உருவமாக இருந்தாலும் தன்னை நாடியவர்களுக்காக ஓடிவருபவர்தான் நரசிம்மர்.

சிங்கம் குருர குணம் கொண்ட கொடூர விலங்குதான். பசி என்று வந்தால் எந்த விலங்காக இருந்தாலும் கொன்று தின்னும் குணம் கொண்டதுதான். ஆனால் அந்த கொடிய சிங்கத்தினுள்ளும் ஒரு மென்மையான மனம் உண்டு. 

தான் ஈன்ற குட்டிகளிடம் கடுமை காட்டுவதில்லை. கொஞ்சி விளையாடும், துள்ளி ஓடி விளையாட்டு காட்டும். 

அதுபோல் தான் நரசிம்மரும். அரக்கர்களுக்கு, அநீதி இழைப்பவர்களுக்கு, நயவஞ்சக பேர்வழிகளுக்கு எமனாக இருக்கும் நரசிம்மர், தன்னை வணங்கும் பக்தர்களுக்கு இனியவர். 

சிவ ரூபங்களில் பைரவர் ஆலய பாதுகாப்பிற்கு உரியவர். கோவில் நடை சாத்த பட்ட பிறகு, இவரிடம் கோவில் சாவியை வைத்து பிராத்தனை செய்து விட்டு செல்வது ஆதிகால பழக்கம்.

ஆனால் இன்று பைரவர் வழிப்பாடு குறைந்து விட்டது. காரணம் கபாலிகா வழிபாடு என்று சொல்லி கொண்டு நரமாமிச படையல் போடும் அகோரிகளால் இந்த வழிபாடு குறைந்து விட்டது.

அவர்கள் பைரவரை தான் வணங்குகிறார்கள். பைரவருக்குத்தான் மாமிச படையல் செய்கிறார்கள்.

இந்த பைரவர் ஆலய பாதுகாப்பிற்கு உரியவர் என்றால், ஆலயத்திற்கு கும்பாபிழேகம் செய்யும் போது, மூலவிக்கிரகங்களை எடுத்து பின் மருந்திட்டு பிரதிஷ்ட்டை செய்யும் போது நரசிம்ம மந்திரம் சொல்லித்தான்  செய்வார்கள்.

சரி.. நரசிம்மரை வழிபட்டால் கிடைக்கும் நன்மை  என்ன?

எந்த நிலையிலும் பில்லி, சூனியம், செய்வினை கோளாறுகள் உங்களை தீண்டாது. உங்கள் ஜாதகத்தில் ராகு திசையோ, கேது திசையோ நடந்தால் இது போன்ற மாந்திரிக கோளாறுகள் பாதிக்க இடம் உண்டு.

அதனால் ராகு கேது திசைகள்  நடந்தால் நரசிம்ம வழிபாடு செய்யலாம்.

உங்கள் வீட்டில் துஷ்ட்ட சத்திகள் இருந்தாலோ, உங்கள் வீட்டில் துர்மரணங்கள் நடத்து ( மருந்து குடித்தல், தூக்கு மாட்டி கொள்லுதல், கொலை போன்ற சம்பவங்கள் ) இருந்தாலோ அதனால் எந்த பாதிப்பும் வராது.

எதிரிகள், எதிர்ப்புகள், பொய்வழக்கு தொல்லைகள், புனைகதைகளால் பாதிக்கப்படும் சூழல் இவற்றை முற்றிலும் விலக்கும்.

ஜய ஜய நரஸிம்ஹாய ஸர்வக்ஞாய 
மஹாதே ஜோபல வீர்யாய சுவாஹா 


ஐம் கிலீம் ஸ்ரீம் ஹும்பட்


நரசிம்ம வழிபாடு  செய்து நலம் பெற வாழ்த்துகிறோம்.



No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...