ads

Monday 24 December 2012

கும்கி திரை விமர்சனம்



காட்டில் இருந்து கிராமங்களுக்குள் வந்து பயிர்களை துவம்சம் செய்யும் யானையை விரட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் யானைக்கு பெயர்தான் கும்கி. 

அப்படி வரவழைக்ப்படும் ஒரு யானை… அதன் யானைப் பாகனுக்கு வந்த இடத்தில் ஏற்படும் காதல் பற்றி சொல்லியிருக்கிறது கும்கி.

ஆதிகாடு என்னும் மலைவாழ் கிராமத்தில் வருடம் தோறும் நெல் அறுவடை செய்யும்  நேரத்தில்  காட்டு யானை ஒன்று வந்து பயிர்களை துவம்சம் செய்து விடுகிறது.


அரசாங்கத்தின் உதவியும் இல்லாத நிலையில் அந்த ஊர் பெரியவர்கள், அந்த காட்டு யானையை விரட்டுவதற்காக கும்கி யானையை அழைத்து வரச் சொல்லுகிறார்கள். 

முதல் சிக்கல் அங்கேதான் ஆரம்பமாகிறது. கும்கி யானையின் பாகன் மகள் விஷம்  குடித்து விட்டாள் என்கிற நிலையில் உடனே போக முடியாத நிலை.

தன் யானையை காட்டு இலாக்கா அதிகாரியிடம் இருந்து காப்பாற்றிய இடைதரகருக்கு உதவி செய்யவும், கும்கி யானை வரும் வரைக்கும் சமாளிக்கவும் தன் யானையை அந்த கிராமத்திற்கு கொண்டு செல்கிறார் விக்ரம் பிரபு.

விக்ரம் பிரபுவின் யானை...... கோயில், திருமணங்களுக்கு மட்டுமே பயன்படுத்தும்  யானை.


போன இடத்தில்   மலைவாழ் பெண் லஷ்மி மேனனை பார்க்கிறார். அப்பறம் என்ன பாழாய் போன காதல் வந்து தொலைக்கிறது.

கும்கி யானை வர தயாரான  பிறகும் . காதலிக்காக தொடர்ந்து அங்கேயே இருப்பது என்று முடிவு செய்கிறார் விக்ரம் பிரபு. அது மட்டும் அல்ல கும்கி யானை பாகனை அழைத்து தனது யானையை கும்கி யானையாக மாற்றுவதற்கான பயிற்சியை ஆரம்பிக்கிறார்.

விக்ரம் பிரபு  தனது யானையை கும்கி யானையாக மாற்றினாரா? காட்டுயானையை துரத்தி அந்த கிராமத்து மக்களைக் காப்பாற்றினாரா? இவைகளுக்கு மத்தியில் விக்ரம் பிரபுவின் காதல் என்னவாகிறது என்பது தான்   க்ளைமேக்ஸ்.


படம் ஆரம்பம் முதல் படம் முடியும் வரை விறுவிறுப்பாக நகரும் திரைக்கதை. எந்த இடத்திலும் தொய்வே இல்லாமல் கொண்டு சென்ற பிரபு சாலமனுக்கு வாழ்த்து சொல்லவேண்டும்.

படத்தின் ஹீரோ விக்ரம் பிரபுதான் என்றாலும் அந்த இடத்தை ஆக்கிரமித்து கொள்வது மாணிக்கமாக வரும்  அந்த யானைதான்.

நெல் அறுவடைக்கு தயாராகும் நேரத்தில் மாணிக்கத்திற்கு மதம் பிடிக்க போகிறது என்று சொல்லும் போது, உச்சகட்ட அதிர்ச்சியை தருகிறது.

அந்த நிலையிலும் காட்டு யானையும் சண்டை போட்டு வெற்றி பெரும் போது அப்பாடா  என்று நிமிர்ந்து உட்கார்ந்தால் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது.

தம்பி ராமையா வரும் காட்சிகளை எல்லாம் காமெடியாக நகர்கிறது . அவர் படத்திற்கு பெரிய பலமான தூன்.


விக்ரம் பிரபு கதாபாத்திரத்திற்கு ஏற்ற நல்ல தேர்வு. யானை காலடியில் படுத்திருப்பது, தந்தங்களை பிடித்துக்கொண்டு பயிற்சி செய்வது என்று கொஞ்சம் கூட பயம் இல்லாமல் செமையாக நடித்திருக்கிறார்.

விக்ரம் பிரபுவுக்கு இது முதல் படம். முதல் படம் என்று சொல்கிற மாதிரி இல்லாமல் யானை பாகன் பொம்மனாகவே அவர் தெரிவதை மறுப்பதற்கில்லை.  சிவாஜி குடும்ப வாரிசு அப்படித்தான் இருக்கும். 

லஷ்மி மேனன், படத்தின் முக்கியமான கதாபாத்திரம்  இவருடையது. குறைந்த அளவே வாய்ப்பாக இருந்தாலும் வெளுத்து வாங்குகிறார். பிரமாதம்.

பெரிய மேக்கப் இல்லை, இருந்தாலும் அந்த நூல் புடவையிலும் அழகு ராச்சசியாகவே லட்சுமி மேனன்.    ஒரு மலைகிராமப் பெண்ணாகவே மாறியிருக்கிறார். அந்தக் கண்கள், உதடுகள் ஏக இம்சை செய்கின்றன! 

தம்பி ராமையாவுக்கும் ஒரு சபாஷ். மாப்ளே மாப்ளே என இவர் விக்ரம் பிரபுவை சுற்றி வரும் ஒவ்வொரு காட்சியும் கலக்கல்  காமடி. 

அதுவும் இவரை விக்ரம் பிரபு வேண்டும் என்றே உசுப்பேற்றுகிற  இடங்கள், அதனால் மனம் நொந்து தம்பி ராமையா தனக்குத் தானே பேசிக் கொள்ளுகிற காட்சிகளில் தியேட்டர் கலகலக்கிறது.

படம் ஓகே தான். வேறு வித்தியாசமான முடிவை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் போது முடிவு வேறு விதமாக இருக்கிறது.

சரி... பார்க்க வேண்டிய படம்தான். பார்க்கலாம்.



No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...