ads

Saturday 9 February 2013

மந்திரங்களின் மகிமை.

மேகங்களற்ற இரவு என்ற வானத்தை, தனிமையில் மொட்டை மாடியில் படுத்த வண்ணம் ரசித்த அனுபவம் உண்டா? பிரமிக்க வைக்கிறது பிரபஞ்ச வெளி. 

கோள்களும், நட்சத்திரங்களும் உலவுகின்ற இந்த அகண்ட பிரபஞ்சம் எவ்வளவு அற்புதமானது. 

இந்த தொலைவானில் எங்கேனும் ஒரு கிரகத்தில் இருந்து ஏதேனும் ஒரு உயிர் நம்மை போலவே, இந்த பூமியை பார்த்து வியந்து கொண்டிருக்குமோ. 

இறைவனின் படைப்பில்தான் எத்தனை  ரகசியங்கள். எத்தனை அதிசயங்கள்.

ஒரு பைத்தியகாரியை போல் தன்னைத்தானே சுற்றிக் கொள்வதோடு சூரியனையும் சுற்றி வருகிறது இந்த பூமி.

சத்தியத்திற்கு கட்டு பட்டது போல், காலம் காலமாக ஒரே மாதிரியாக சுற்றிக் கொண்டிருக்கிறது பூமி.  பூமி மட்டுமா? கிரகங்களும்தான். தலைவனாய். நடுவில் வீற்றிருக்கும் சூரியன் ஒளிவீசி சிரிக்கிறான்.

ஓன்று தெரியுமா? இந்த பூமி இப்போது இருப்பதை விட ஒரு பத்து சதவீத தூரம் சூரியனுக்கு நெருக்கமாய் இருந்தால் எப்போதோ எரிந்து போயிருக்கும்.

இல்லை இப்போது இருப்பதை விட பத்து சதவீத தூரம் விலகி இருந்தால் குளிரால் உறைந்து போயிருக்கும். பூமி என்ன ...சந்திரன் இப்போது இருப்பதை விட ஐந்தில் ஒரு பங்கு தூரம் அருகில் இருந்தால் தினசரி இரண்டு சுனாமிகள் பூமி சந்த்திருக்கும்.

இந்த பிரபஞ்சத்தை படைத்த கடவுள் எவ்வளவு கருணை உள்ளவர்.  மனிதர்களுக்கு எவ்வளவு சௌகரியங்களை செய்து தந்திருக்கிறார்.

இந்த பூமியில்தான்  எத்தனை எத்தனை ஜீவராசிகள். மனிதன் மட்டும் இயற்கையை ரசிக்கிறான். நேற்றை பற்றி நினைத்து பார்க்கிறான்.

நிகழ்காலத்தில் வாழ்க்கையை அனுபவிக்கிறான். எதிர்காலத்தை பற்றி சிந்திக்கிறான்.

கடவுளின் ரகசியத்தை அறிய கடவுளிடம் நெருங்க தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டே இருக்கிறான்.

நம் முன்னோர்கள் நம்மை விட அதிகமாகவே சிந்தித்திருக்கிறார்கள். யோசித்திருக்கிறார்கள். பிறப்பு இறப்புக்கு உட்பட்ட இந்த மனித வாழ்வின் ரகசியத்தை அறிய முயன்றிருக்கிறார்கள்.

இறைவனை நெருங்கும் வழியை அறிந்திருக்கிறார்கள். தியானத்தில் தங்கள் ஸ்தூல உடம்பில் இருந்து வெளிப்பட்டு சூச்சும உடலின் மூலம் மனோ வேகத்தில் பயனபட்டிருக்கிரார்கள்.

இந்த பிரபஞ்சத்தை சுற்றி பார்த்திருக்கிறார்கள். கிரகங்களின் தன்மையை அவற்றின் சஞ்சார மாற்றத்தினால் ஏற்படும் ஈர்ப்பு சக்தியால் பூமியில் உண்டாகும் அதிர்வுகளை கண்டறிந்திருக்கிறார்கள்.

அவை தனி மனித வாழ்வில் எந்த அளவு விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதையும் அறிந்திருக்கிறார்கள்.  இந்த கிரகங்களை வைத்துக் கொண்டு  சூரியன் ஆடும் விளையாட்டு மனிதனின் பிறப்பில்  இருந்து இறப்பு வரையிலான வாழ்க்கை சூழலை நிர்ணயிக்கிறது.

என்பதை அறிந்து அதை நமக்கு ஜோதிட சாஸ்த்திரமாக தந்திருக்கிறார்கள்.  இந்த பூமியில் மனிதர்கள் தலைமுறை தலைமுறையாக பிரச்சனை இன்றி வாழ வழிமுறைகளை கண்டறிந்து வேதங்களாக, உபநிடதங்களாக, சடங்குகளாக சொல்லி வைத்திருக்கிறார்கள்.

வார்த்தைகளின் அதிர்வால் இயற்கையை வசப்படுத்தும் வித்தையை, தெய்வ சக்திகளை ஈர்க்கும் ரகசியங்களை அறிந்து மந்திரங்களாக நமக்கு தந்திருக்கிறார்கள்.

இந்த மந்திரங்களை முறையாக குரு வழி உபதேசம்   பெற்று சொல்லிவந்தால் பிரச்சனைகளில் இருந்து விடுபட மார்க்கம் கிடைக்கும்.

வாயில் நுழையாத சம்ஸ்கிருத மந்திரமா என்று நீங்கள் மலைக்க வேண்டாம். கந்த சஷ்டி கவசம் சொன்னால் கூட போதும். சொல்லி பாருங்கள். 

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...