ads

Thursday 18 April 2013

முஷரப் வீட்டை முற்றுகையிட்டது ராணுவம் - கைதா?




நாணயத்தின் இரண்டு பக்கம்தான் நினைவுக்கு வருகிறது. ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த பர்வேஸ் முஷாரப்புக்கு இப்போது இறங்கு முகம். 

அவர் ஆட்சியில் இருந்த போது செய்த சில தவறுகள் இப்போது அவருக்கு எதிராக பூதமாக நிற்கிறது. 

பலுசிஸ்தான் தலைவர் ஒருவரை கொலை செய்த வழக்கு, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை கூண்டோடு வீட்டுக்கு அனுப்பியது, வக்கீல்களை அவமதித்தல் போன்ற குற்றச்சாட்டுக்கள் தான் இப்போது அவரை ஜெயிலுக்கு அனுப்ப காரணமாக மாறுகிறது. 

இதற்கு பயந்து தான் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக துபை மற்றும் லண்டனில் தங்கி இருந்தார். 

கடந்த சில நாட்களுக்கு முன்  தேர்தலில் போட்டியிடுவதற்காக பாகிஸ்தான் வந்தார். வந்தால் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் இருந்தது. அதோடு தீவிரவாதிகள் அச்சுறுத்தலும் தொடர்ந்தது. இருந்தும் தாய் நாடு திரும்பினார். 

தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்ததில் இவரது 4 மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.  

அப்போதே அவருக்கு  எதிராக காய்கள் நகர்கின்றன என்பதை அரசியல் பார்வையாளர்கள் உணர்ந்து கொண்டார்கள். கார்கில் யுத்தம் என்னால் நடத்தப்பட்ட ஓன்று என்று உள்ளூர் ஆதரவை பெற முயற்சித்தார். இது எதுவுமே  எடுபடவில்லை . 

இந்நிலையில் இவர் மீதான கிரிமினல் வழக்குகள் மூலம் அரசு இவருக்கு நெருக்கடியை கொடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன.



இன்று காலை பாகிஸ்தான் ஐகோர்ட்டில் ஆஜராக முஷாரப் வந்தார். இவரது ஜாமின் நீட்டிப்பு உத்தரவு ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து இவர் உடனடியாக கைது செய்யப்படுவார் என கோர்ட்டில் பரபரப்பு நிலவியது.

இருப்பினும் கோர்ட்டில் இருந்து அவசர, அவசரமாக வெளியேறினார். தற்சமயம் கிடைத்த கடைசி தகவல் படிபர்வேஸ் முஷரப்பின் விட்டை தற்போது ராணுவம் முற்றுகை இட்டுள்ளது.






காரணம் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த இஸ்லாமாபாத் ஹைகோர்ட் அவரை கைது செய்ய உத்தரவிட்டது. அவ்வாறு உத்தவிட்டதை தொடர்ந்து முஷரப்பை கைது செய்வதற்காக அவரது வீட்டை முற்றுகையிட்டுள்ளது ராணுவம்.


No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...