ads

Wednesday 26 June 2013

உங்களைச் சுற்றி உளவாளிகள் - உஷார்


கசக்கிப் போட்ட கதம்பம் மாதிரி கட்டிலில் கிடக்கிறாள் நிஷா. அவளுக்கு பக்கத்தில் கலைந்த தலைமுடி, அழுக்கேறிய சட்டை, மழிக்கப்படாத தாடி, சிகெரட் புகைகளுக்கு மத்தியில் வெறிச்சிட்ட பார்வையும், வெளிறிய முகத்தோடும்  இருப்பது, நிஷாவின் கணவன் அஷ்வின்.
இது கற்பனை கதாபாத்திரங்கள் அல்ல, நிஜம்கட்டுரைக்காக பெயர் மாற்றப்பட்டவர்கள். ஸ்ரீரங்கம் நகரின் மையப்பகுதியில் தனி வீட்டில் தம்பதிகளாக வாழ்பவர்கள்முப்பதை தொட இன்னும் மூன்று மாதம் இருக்கிறது அஷ்வினுக்குஇருபத்தாறில் இருக்கிறாள் நிஷா.
சந்தோஷமாக போய்க் கொண்டிருந்த    இவர்கள் வாழ்க்கையில் விழுந்த ஒரு இடி, ஒட்டு மொத்தமாக புரட்டிப்போட்டு விட்டது வாழ்க்கையை..
அந்த இடி....!
இணையதளத்தில் வெளியான இவர்களின் கட்டிலறை காட்சி. அதன் விளைவு என்ன தெரியுமா? இதோ கந்தல் துணியாய் கட்டிலில் கிடக்கும் நிஷா, மூன்று நாட்களுக்கு முன்பு, தற்கொலைக்கு முயன்று, கடைசி நேரத்தில் அஷ்வினால் கண்டுபிடிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சைக்கு பிறகு, மறு பிறப்பெடுத்து வந்திருக்கிறாள்.
விஷயம் இதுதான்.
அஷ்வின் நிஷா மனமொத்த தம்பதிகள். இருவரும் படித்தவர்கள், பட்டதாரிகள்வேறு வேறு பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிபவர்கள். நல்ல வருமானம், வசதி குறையாத வாழ்க்கைத்தரம், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட தம்பதிகள். சந்தோசத்திற்கு குறைவிருக்குமா என்ன?
யார் கண் பட்டதோ, விதி வேறு ரூபத்தில் விளையாடியது. இவர்களின் அன்றாட அந்தரங்க படுக்கையறை காட்சிகள் படம் பிடிக்கப்பட்டு, ஒரு ஆபாச இணையதளத்தில் வெளிவந்து விட்டது.
தங்களை தாங்களே படம் பிடித்து இணையத்தில் வெளியிடும் வியாதி பிடித்தவர்கள் அல்லஆர்வத்தாலும், அறியாமையாலும், சிறுபிள்ளை தனமாக படம் பிடித்து, தாங்களே பார்த்துக் ரசிக்கும்  அறிவீலிகளும் அல்ல.   ஆனாலும் எப்படியோ இவர்களின் அந்தரங்க படம் வெளிவந்து விட்டது.
இந்த தகவல் கூட, நியூசிலாந்தில் இருக்கும் கல்லூரித்தோழன் ஆகாஷ் சொல்லித்தான் தெரிந்தது.   அதுவும் முட்டாள், ஸ்டுப்பிட், மடையா என்ற ஏக வசனங்களுக்கு பிறகு, கேவலமா இருக்கு, பாவம் நிஷா... அவளையும் சேர்த்து அப்லோடு செய்து அசிங்கப்படுத்தி   இருக்கே என்று திட்டிவிட்டு வைத்து விட்டான் போனை.
ஆகாஷ்,  அஷ்வின்    மெயிலுக்கு  அனுப்பிய லிங்கையை கிளிக் செய்தபோது, அப்பட்டமாய் இவர்கள் படுக்கையறை காட்சிகள். எந்த ஒட்டு வேலையும் இல்லை. தடயவியல்துறைக்கு அனுப்பி வைத்தாலும், இது அஷ்வின் நிஷா தம்பதிகள்தான் என்று கற்பூரம் அணைத்து சத்தியம் செய்வார்கள்.
இந்நிகழ்வுக்கு பிறகு ஒட்டு மொத்தமாக முடங்கிப் போனது இவர்கள் வாழ்க்கை. பள்ளிக்கு நீண்ட விடுப்பு, உண்ண மறந்து, உறங்க மறந்து, உலகமே தங்களைப் பார்த்து கேலியாக சிரிக்குமே என்று தாங்களாகவே போட்டுக்கொண்ட விருப்ப வேலிதான் வீட்டுச் சிறை.
ஆனால் ஆகாஷ் பெரும் முயற்சி செய்து, வீடியோவை வெளியிட்ட இணையதளத்தை மெயில் மூலம் தொடர்பு கொண்டபோது, வீடியோவை நீக்க 50,000 அமெரிக்க டாலர் கேட்டது அதிர்ச்சியின் உச்சகட்டம்.
இந்த தகவல்தான் நிஷாவை தற்கொலை வரை தள்ளிச் சென்றது. ஆனாலும் ஆகாஷின் இடைவிடாத போராட்டம், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கைகளுக்கு பிறகு வீடியோவை நீக்கி இருக்கிறது அந்த இணையதளம்.
படுக்கையறை படம் பிடிக்கப்பட்டது எப்படி என்ற கோணத்தில் ஜன்னல், வென்டிலேட்டர் முதல், சகல இடங்களும் அங்குலம் அங்குலமாக ஆராய்ந்த போது டியூப் லைட் பிரேமில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது ஒரு கையடக்க சைனாகேமரா.
இதை யார் செய்திருக்க முடியும்? இதற்கு பெரிய துப்பறியும் ஆற்றல் எல்லாம் தேவையில்லை. வழக்கமாக பிளம்பர், எலெக்ட்ரிக்  வேலைகளை செய்து தரும் கயவனின் கைவரிசைதான் இது.
தங்களின் எதிர்காலம், குடும்ப கௌரவம் என்ற நோக்கில், வெறும் மிரட்டலோடு தப்பிச் சென்றுக்கிறான் அந்த அயோக்கியன்இவர்களை படம் பிடித்துக் காட்டி பரபரப்பாக்குவது என் நோக்கம் அல்ல. இது போல் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்ற விழிப்புர்ணர்வை ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.
கடந்த ஆண்டு இறுதியில் கேரளாவில் ஒரு பாத்ரூமுக்குள் பதுக்கி வைக்கப்பட்ட கேமரா பற்றிய செய்தி வெளியானது உங்களுக்கு நினைவிருக்கலாம்.







காலம் மாறியிருக்கிறது. தொழில் நுட்பம் வளர்ந்திருக்கிறது. உள்ளங்கைக்குள்  ஒளித்து வைத்துக் கொண்டு ஒற்று பார்க்கிற அளவிற்கு, மலிவு விலை சாதனங்கள் வந்து  விட்டன. அடுத்தவரின் அந்தரங்கத்தை அறிந்து கொள்ளும் ஆர்வம், பணம் பறிக்க அல்லது பழிவாங்க என்று பல நிலைகளில் இதுபோன்ற சாதங்கள் பயன்படுத்தப் படுகின்றன.
நாம்தான் விழிப்போடு இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறதுவீட்டுக்குள் நடமாடும் வெளியார்கள் விஷயத்தில் கூடுதல்  கவனம் தேவைஅது  பக்கத்து வீட்டு பையனாக கூட இருக்கலாம், தவறில்லை.


ரிப்பேர் வேலை செய்யவரும் நபர்களை கூடவே இருந்து கண்காணிக்க வேண்டும். வழக்கமாக வருகிற பையன், நம்ம ஆறுமுகத்து மகன் என்கிற ரீதியில் அதீத நம்பிக்கை வேண்டவே வேண்டாம்


ஆடைகளை களையவேண்டிய அவசியம் இருக்கும்  லெட்ரின், பாத்ரூம் மற்றும் பெட்ரூம் போன்றவற்றில் வேலைகள் நடக்கும் போது உடன் இருந்து கவனிக்க தவறக்கூடாது.
சுற்றுலா செல்லும் இளம் தம்பதிகள், தங்கும் இடங்களை  தரமாக பார்த்துக் கொள்ளவேண்டியது மிக அவசியம். இது உள்ளூர், வெளியூர், வெளிநாடு அனைத்திற்கும் பொருந்தும்.
இதுவரை பாதுகாப்பு விஷயத்தில் கோட்டை விட்டிருந்தால் இனியும் அப்படி  இருக்காதீங்க. அதுதான் உங்களுக்கு நல்லது.


No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...