ads

Tuesday 30 July 2013

மங்களம் தரும் மகாலக்ஷ்மி



வாழ்க்கையில் ஒருவருக்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர் மகாலட்சுமியே  ஆகும். செல்வங்களின் தேவதையாக விளங்குபவர். மகாலட்சுமி. அழகு,செல்வம் மகிழ்ச்சி, அன்பு, கருணை அமைதி ஆகியவற்றின் ஆதாரமும் அவர்தான். 

திருமகள் யாகத்தில் தக்ஷ்ணருபியாகவும், தாமரையில் தேஜோ ருபியாகவும், சந்திரனில் சந்திரிகையாகவும், சூரியனில் சுடராகவும் விளங்குகிறாள். எங்கும் எவ்விடத்திலும் சுகமும் சந்தோஷமும் விளங்க இவளே காரணமாகும்.

திருமகள் என்றும், அலைமகள் என்றும் , மலர்மகள் என்றும் மகாலட்சுமி பக்திபரவசத்தோடு பக்தர்களால் போற்றப்படுகிறாள்.

லட்சுமி என்ற சொல்லுக்கு நிகரில்லாத அழகி என்று பெயர். அழகு பிரதிபலிக்கும் இடங்களிலெல்லாம் திருமகள் காட்சி தருகிறாள். 

 இத்தகைய லட்சுமியை விஷ்ணு தன் இதயத்தில் இடமளித்து ஸ்ரீனிவாசன் எனப் பெயர் பெறுகிறார். 

நம் இந்து மதத்தில் மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணு, காக்கும் கடவுளாக அருள் புரிகிறார். உலக உயிர்களின் தாயாக மகாலட்சுமியும் அவரோடு இணைந்திருக்கிறார். மகாவிஷ்ணுவின் ஒவ்வொரு அவதாரத்திலும், மகாலட்சுமி அவரோடு உடன் அவதாரம் செய்கிறார். 

நாராயணன் என்று விஷ்ணு அழைக்கப்படும் போது நாரயணியாக மகாலட்சுமி அவருடன் இணைந்திருக்கிறார். 

மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்தபோது கமலாவாகவும், பரசுராமனாக விஷ்ணு அவதரிக்கும் போது தாரணியாகவும், ஸ்ரீராமனாக அவதரித்தபோது சீதாவாகவும், கிருஷ்ண அவதாரத்தில் ருக்மணியாகவும்,வெங்கடாஜலபதி என்ற பெயரில் விஷ்ணு வணங்கடும்போது அலமேலுவாகவும், மகாலட்சுமிவிஷ்ணு வுடன் தோன்றுகிறாள். 

விஷ்ணுவின் திருத்தலங்களி லெல்லாம் அவருக்கு இடப்புறம் இடம் பெற்றிருக்குக்கும் மகாலட்சுமிக்கு தனி சன்னதிகள் அமைக்கப்பட்டும் வழிபடப்படுகிறார். சில சமயம் விநாயகப் பெருமானுடனும், செல்வ களஞ்சியத்தின் அதிபதியான குபேரனுடனும் காணப்படுகிறார்.

செல்வ தேவதையான மகாலட்சுமியை வழிபட்டு அவரது அருளைப் பெற்று வாழ்வில் செல்வ வளங்களையும், மகிழ்ச்சியையும் பெருக்கிக் கொள்ள, வழிபாட்டு பூஜை முறைகள், மந்திரங்கள் போன்றவை நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டுளளன.    

பாற்கடலில் அவதரித்தவர் மகாலட்சுமி. ஒருமுறை அனுசூயா தேவியின் தவத்தால் அத்ரியின் மகனாய் அவதரித்த துர்வாச முனிவர் பராசக்தியை வழிபட்டு வாடாமலர் மாலையை பிரசாதமாய் பெற்று நடந்து வந்து கொண்டிருக்கிறார். 

அவ்வழியே இந்திரன் யானை மீது தேவர்கள் புடைசூழ பவனி வந்து கொண்டிருக்கிறான். துர்வாசர் இந்திரனிடம் தேவியின் பிரசாதத்தை வழங்க, அவன் அம்மாலையை யானையின் மீதிருந்தவாறே அங்குசத்தால் வாங்கி யானையின் மத்தகத்தில்  வைக்க அது தவறி கீழே விழுந்து விடுகிறது. 

அதைகண்ட துர்வாச முனிவர் கோபப்பட்டு, இந்திரனே ..சகல ஐஸ்வர்யங்களும் உன்னிடமிருப்பதால் நீ இறுமாப்புடன் நடந்து கொண்டு தேவியின் பிரசாதத்தை அவமதித்து விட்டாய்.  இக்கணமே செல்வதேவதை உன்னை விட்டு விலகட்டும் என்று சாபம் கொடுக்கிறார். 

இந்திரன் தன் தவறை உணர்ந்து உடனே அவரது பாதத்தில் வீழ்ந்து மன்னிப்பை வேண்டுகிறான். மனம் அமைதியடைந்த துர்வாசர் இந்திரனே நீ மகாவிஷ்ணுவை வணங்கி இலட்சுமியின் அருளைப்பெறுவாய் என்று கூறி  சென்றுவிடுகிறார்.

இந்திரன் ஆட்சியும் சக்தியும் நிலைகுலைந்து போக, அரக்கர்கள் ஆதிக்கம் பெற்று, தேவர்களை கொடுமைக்கு ஆளாக்குகிறார்கள். தேவர்கள் மகாவிஷ்ணுவை சரணடைந்து, புருஷ சூக்தத்தாலும் அஷ்டாஷர மந்திர ஜபத்தாலும் அவரை துதிக்கின்றனர். 

மகாவிஷ்ணு மனம் மகிழ்ந்து, தேவர்களே, நீங்கள் அசுரர்களுடன் இணைந்து, பாற்கடலை கடையுங்கள், வேண்டியதைப் பெறுவீர்கள் என்று அருளுகிறார். மந்தார மலையை மத்தாக்கி வாசுகி என்ற பாம்பை கயிராக்கி, தேவர்கள் பாற்கடலை கடைகின்றனர்.

இவ்வாறு கடல் கடையப்படும் போது ஆலகால விஷம் முதலில் தோன்றியது. அதை பரமேஸ்வரன் எடுத்து விழுங்கி கண்டத்தில் இருத்திக் கொள்கிறார்.

அதன்பின் பாற்கடல்  கடையப்பட்டபோது காமதேனு என்ற தெய்வீகப் பசு தோன்றியது. அதை ரிஷிகள் எடுத்துக்கொண்டனர். பிறகு உச்சை ச்ரவஸ் என்ற குதிரை வந்தது. அதை பிரஹலாதனின் பேரன் பலி சக்ரவர்த்தி எடுத்து கொண்டான்.

பிறகு ஐராவதம் என்ற வெள்ளை யானை தோன்றியது.    அது இந்திரன் வசம் சென்றது. அதன்பின் கௌஸ்தூபமணி என்ற ரத்தினம் தோன்றியது. அதனை விஷ்ணு தனது ஆபரணமாக்கிக் கொண்டார். 

பிறகு கற்பக விருட்சம், அப்சரஸ் சுந்தரிகள் தோன்றினர் இவர்களை தேவர்கள் எடுத்துக் கொண்டனர். 

அதன் பின் செந்தாமரை மலரைத் திருக்கையில் ஏந்தியவளும் மிக அழகிய ஒளி வீசும் திருமுகத்தை உடையவளும், சகல சௌபாக்கியத்தை தருபவளும், சிவன் விஷ்ணு பிரம்மா போன்ற மும்மூர்த்திகளால் போற்றப்படுபவளும், சங்கநிதி பதுமநிதி இவைகளால் சூழப்பட்டவளும் சந்தனம் மற்றும் வாசனை மலர்களை சூடியவளும், நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டவளுமான மூவுலகங்களுக்கும் ஐஸ்வர்யங்களை வழங்கும் மகாலட்சுமி தேவி தோன்றினாள். 

அவளை விஷ்ணு தன் துணைவியாக ஏற்றுக்கொண்டு தன மார்பில் வாசம் செய்யுமாறு இருத்திக் கொண்டார்.



அவருக்குப் பின்  சீதேவி மூதேவி தோன்றினார்கள். சங்கு, வில்வம், துளசி தோன்றின, வாருணிதேவதை தோன்றினாள். அவளை அசுரர்கள் ஏற்றுக் கொண்டனர். இறுதியாக தன்வந்திரி முனிவர் கையில் அமிர்த கலசத்துடன் தோன்றினார்.

மகாலட்சுமியை தேவர்கள் பலவாறு போற்றித் துதிக்க அவர்கள் கோரிய வரத்தை மகாலட்சுமி அருள, தேவர்கள் மீண்டும் இழந்த சக்திகளைப் பெற்று இந்திர லோகத்தை மீட்டு மகிழ்ந்தனர். 

மகாலட்சுமி பூஜை தோன்றிய விதம்

துர்வாச முனிவரின் சாபத்தினால், மகாலட்சுமி இந்திர லோகத்தை விட்டு நீங்க இந்திரனும் தேவர்களும் அதனால் துன்புற்று மகாவிஷ்ணுவின் ஆலோசனைப்படி மாகாலட்சுமியின் அருளைத் திரும்பப் பெற வேண்டி பாற்கடலை கடைகின்றனர். 

மகாலட்சுமி திருப்பாற்கடலில் அவதரித்த நாள் துவாதசியில் சூரியோதய நாள் முதல்நாள் ஏகாதசியில் தேவ அசுரர்கள் பாற்கடலை கடையும் போது ரிஷிகளெல்லாம் உபவாசம் இருந்து ஸ்ரீசூக்த மந்திர ஜபம் , லட்சுமி ஸ்ஹஸ்ரநாமம், லட்சுமி தோத்திரங்கள் ஆகியவற்றை பாராயணம் செய்து லட்சுமியைத் தொழுதனர்.

லட்சுமியின் தோற்றம் நிகழ்ந்து அவர் திருமாலின் திருமார்பில் அமர்கிறார். நாரயாணன் மனம் மகிழ்ந்து ரிஷிகளே நீங்கள் மகாலட்சுமியின் தரிசனத்திற்காக உபவாசமிருந்து என்னையும் மாகாலட்சுமியையும் தரிசித்து மகிழ்ந்தீர்கள். 

இதனால் இன்றுமுதல் பிரதி ஏகாதேசியன்று உபவாசமிருந்து மறுநாள் துவாதசி விடியற்காலையில் என்னையும் மகாலட்சுமியையும் பூஜிப்பவர்கள் தாங்கள் விரும்பியதை அடைவார்கள் என்று அருளுகிறார். 

மகாலட்சுமியும் இந்திரனைப் பார்த்து இரண்டு வரங்கள் தருகிறாள். 
 
ஒன்று மூவுலகங்களையும் விட்டு இனிநான் நீங்க மாட்டேன் என்றும். தன்னை பக்தியோடு பூஜிப்பவர்களின் வாழ்க்கைக்கு வேண்டிய சகல செல்வ வளத்தினையும் வழங்குவேன் என்றும் வாக்குத் தருகிறாள். 

அதன் பிறகு மக்கள் தங்களின் வாழ்க்கைவளத்திற்காகவும் மகிழ்ச்சிக்காகவும் மகாலட்சுமியை வழிபடத் துவங்கினார்கள்.

மகாலட்சுமியை வழிபட்டே இராவணன் இலங்காபுரியை செல்வ செழிப்பான நகராக மாற்றியமைத்தான் என்று ‘இராவண   சம்ஹிதா’கூறுகிறது. 

துவாரகையில் வாழும்  மக்களும் கிருஷ்ணரின் ஆலோசனைப்படி மகாலட்சுமியை வழிபட்டு துவாரகையை செல்வம் கொழிக்கும் நகராக மாற்றியமைத்ததாக  ‘கோரக் சம்ஹிதா’ எனும் நூல் குறிப்பிடுகிறது.

எனவே மகாலட்சுமி வழிபாடு ஒருவருக்கு வாழ்க்கையில் செல்வ வளத்தினை, லட்சுமி கடாட்சத்தை வழங்கும் என்பதை உணரலாம்.

ஸ்ரீசூக்தத்தில் மகாலட்சுமியின் திருப்பெயர்கள்

ரிக்வேதத்தின் ஒரு அம்சமே ஸ்ரீசூக்தம் பாற்கடலை கடையும் போது ரிஷிகள் ஸ்ரீசூக்தம் பாடியே மகாலட்சுமியை வழிபட்டனர் அதில் திருமகள் பல திருநாமகளால் வழிபடப்படுகிறாள். 

ஹரிணி   -பசுமையான மேளியழகைப் பெற்றவள்

சூர்யா   -கதிரவனை நிகர்த்த ஒளி மயமானவள்

ஹிரண்மயி  - பொன்னி

ஈஸ்வரி   - எல்லா உயிர்களிலும் உறைபவள்

ஹிரண் வர்ணா   - பொன்னிற மேளியாள் 

சந்திரா    -   மதிநிகர்த்த முகத்தினள்

அன்பகா முனிம்    - நிலை தவறாதவள்

ஆர்த்திரா    - நீரில் தோன்றியவள்

பத்மே ஸ்திதா   -  தாமரையில் வாசம் செய்பவள்

பத்ம வர்ணா  - சூரிய காந்தி உடையவள்

வருஷோ பில்வ   - கூவளத்தில் தோன்றியவள்

கரிஷிணி   - பெருகும் பசுஞ் செல்வமுடையவள்

புஷ்கரிணி   - யானைகளால் வணங்கப்பட்டவள்

பிங்கள   - செம்மைநிறம் கொண்டவள்

யக்கரிணி  -  தர்ம தேவதை

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...