ads

Saturday 15 March 2014

வேதாளம்!!


தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத வேதியன் புளிய   மரத்தில்   தொங்கிக் கொண்டிருந்த  பிரேதத்தைக்   கீழேத் தள்ளி அதை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். 

 அப்போது அந்த உடலில் குடியிருந்த வேதாளம் பேச ஆரம்பித்தது.
     
அஹோய் வ்£ரும் பிள்ளாய் வேதியனே! மனம் தளரா உன் முயற்சியைப் பாராட்டுகிறேன். என்னைக் கொண்டுப் போவது அவ்வளவு சுலபமானக் காரியம் இல்லை. பார்ப்போம். 

சரி, எனக்குப் பொழுது போகவும் உனக்கும் சலிக்பில்லாமல் இருக்கவும் ஒரு கதைச் சொல்கிறேன் கேள்.

பொதுவாக எப்போது நன்மைகள் விளையும் போது அதில் ஏதேனும் ஒரு தீமையும், தீமைகள் விளையும்போது அதனால் ஏதேனும் ஒரு நன்மையும் ஏற்படும் என்பது ஆன்றோர் வாக்கு.

அமுதம் விளைந்த பாற்கடலில்தான் ஆலகாலமும் விளைந்தது. குருக்ஷேத்ரப்போர்க்களத்தில்தான் பகவத்கீதையும் மலர்ந்தது. 

அசுர வம்சத்தில் தோன்றி அரசனொருவனின் கூடா ஆசையினால் ஒரு மாபெரும் இதிகாசம் உருவானது. அதைப்பற்றியக் கதைதான் நான் சொல்லப்போவது.



முதல் மன்வந்திரத்தில் பிரம்மாவின் மனதில் தோன்றிய பிரஜாபதிகளில் ஒருவர் புலஸ்தியர். சப்தரிஷிகளில் ஒருவராகவும் பிரகாசிக்கிறார். இவரது மகன் வைஸ்ரவ முனிவர். இவர்கள் சாண்டில்ய கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்.

தைத்ய குலத்து அரசர் சுமாலி. அவளது மகள் கைகேசி. சுமாலிக்கு, தன் மகளை ஒரு ஆற்றல் மிக்கவனுக்கேத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும், அதன் மூலம் இணையில்லாத ஒரு அரசனை தன் அசுர குலத்திற்கு உருவாக்க வேண்டும் என்று எண்ணம். 

உலகில் உள்ள அரசர்கள் கைகேசியை மணக்க விரும்பியபோதெல்லாம் அவர்கள் தங்களைவிட வலிமை குறைந்தவர்கள் என சுமாலி மறுத்துவிடுகிறான். 

எனவே தவமுனிவரான வைஸ்ராவை தேடிப்பிடித்து திருமணம்  செய்து கொள்கிறாள் கைகேசி. வைஸ்ரவ முனிவருக்கு வேறொரு பெண்ணின் பிறந்தவரே  குபேரன்.


ஒரு முறை வைஸ்ரவ முனிவர் தன் பூஜை அனுஷ்டானங்களைச் செய்து கொண்டிருந்தச் சமயத்தில் மிகுந்த வேட்கையுடன் அவரை நெருங்குகிறாள் கைகேசி. 

முனிவர் எவ்வளவோ எச்சரித்தும் கைகேசியின் மோக வேகம் அடங்கவில்லை. வேறு வழியின்றி மனைவியின் விருப்பத்தைப் பூர்த்தி செய்கிறறர் வைஸ்ரவ முனிவர். 

இந்த இணைவில் பிறக்கும் குழந்தை ராட்சத குணத்துடன் பிறக்கிறது. அந்தக் குழந்தையே அசுர குலத்திற்கும் பிராமணக் குலத்திற்கும் கலந்து பிறந்த இராணவன். மோகவெறியில் தர்மநெறி தவறி அடுத்தவரின் மேல் ஆசைப்பட்டவன்.



(இராமர் இவனை மகாபிராமணன் என்றே குறிப்பிடுகிறார். போருக்குப்பின் பிராமணனைக் கொன்ற பாவம் தீர யாகமும் செய்கிறார்.)

இராவணன் சுமாலி எதிர்பார்த்தபடியே ஆற்றல் மிகுந்தவனாக இருந்தான். இவனது சகோதரர்கள் விபீஷணன் , கும்பகர்ணன். சகோதரி மீனாட்சி என்ற சூர்ப்பணகை.

இராவணன் பிறந்தபோதே அவனுக்கு நவரத்தினங்களால் ஆன பதக்கத்தை அணிவிக்கிறார் வைஸ்ரவர். இதன் ஒளிக் கதிரினால தோன்றியதே இராவணனது பத்துத் தலைகள் என்று புராணக் கதையொன்றில் கூறப்படுகிறது. 

இராவணன் கல்வி கேள்விகளில் மிகச் சிறந்தவனாக இருந்தான். இணையில்லாத ஆற்றல் பெற்றவனாய் இருந்தான்.

நான்கு வேதங்களையும் கற்றுத் தேர்ந்து பண்டிதனாய் திகழ்ந்தான். ஆறு சாஸ்திரங்களையும் ஐயமுறக் கற்றான். சத்திரிய போர்முறையில் ஆற்றல் மிக்கவனானான். சாமவேத கானம் இசைப்பதில் ஆற்றல் மிக்கவரானான். அவனது தந்தை வைஸ்ராவே அவனுக்கு குருவாய் இருந்து போதித்தார்.

தைத்ய சடங்கு சம்பிரதாயங்களைப் பொறுத்த மட்டில் அவனது தாயின் தந்தை சுமலி ராவணனை வழிநடத்தினார். 

அது மட்டுமன்றி இராவணன் வீணையை மீட்டுவதில் வித்தகனாய் திகழந்தான். சாமவேத கானம் இசைப்பதில் நிகரற்றவராய் திகழ்ந்தான். மிகச் சிறந்த சிவ பக்தனாகவும் இருந்தான். 

இத்தவத்தின் போது இராணவன் தன் தலையை சீவி எறிகிறான். உடனே இன்னொரு தலை முளைக்கிறது. இப்படியே தன் நீண்ட தவ காலத்தில் 9 முறை தன் தலையை சீவி எறிகிறான் இராவணன்.

பத்தாவது முறையாக தலையை சீவும் போது அவனது தீவிர தவத்திற்கு மகிழ்ந்த பிரம்மா அவன் முன் தோன்றுகிறார்.  

“இராவணா!  இவ்வளவு கடும்தவம் புரியக் காரணம் என்ன? உனக்கென்ன வரம் வேண்டும் சொல்”  என்று கேட்கிறார் பிரம்மா.

எக்காலத்தும் இறவாத வரம் வேண்டும் ஸ்வாமி!  கேட்கிறான். 

பிரம்மா யோசிக்கிறார். ‘அந்த வரம் தர இயலாது. இதற்கு பதில் சாகும்வரை முதுமையடையாமலிருக்கும்  அமிர்தசக்தியை தருகிறேன்’ என்கிறார்/

இராவணன் பிரம்மனிடத்தில், எவராலும் காயம்படாத வரமும் தெய்வங்கள், தேவலோக ஆத்மாக்கள், அரக்கர்கள், பாம்புகள், கொடும்விலங்குகள் போன்ற எந்த சக்தியாலும் கட்டுப் படுத்த முடியாத, அவர்களினால் பாதிக்கப்படாத வரமும், இவர்கள் அனைவரையும் வெல்லக்கூடிய ஆற்றலையும் கேட்டுப் பெற்றுக் கொள்கிறான்.

பிரம்மா இராவணனுக்கு பத்துத் தலைகளையும், அதீத ஆற்றலையும் தருகிறார்.  மந்திரத்தால் ஆயுதங்களைப் பிரயோகிக்கும் சக்தியையும் அருளுகிறார். 

இதன் பின் தன் தாய்வழிப் பாட்டனார் சுமலியின் படைபலங்களைப் பெற்றுக் கொண்டு இலங்களையில் தன் ஆதிக்கத்தை மேற்கொள்ள  வருகிறான்.

அதுவரை இலங்கையை ஆண்டு வந்த குபேரன் தன் தந்தை வைஸ்ரவாவின் ஆலோசனைப் படி ஸ்ரீலங்காவை இராவணனுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு அளகாபுரிக்குச் சென்று விடுகிறான். 

தேவசிற்பி விஸ்வகர்மாவைக் கொண்டு இலங்கையை அழகாய் வடிவமைத்திருந்தான் குபேரன். 

இலங்கையை மேலும் செல்வச் செழிப்பான நகராக மாற்றியமைக்கிறான்.  இராவணனின் ஆட்சியில் மக்கள் துன்பங்களின்றி மிகவும் மகிழ்ச்சியாய் வா£ந்தனர். சிறந்த ஆட்சியாளனாக விளங்கிய இராவணன், எவராலும் வெற்றி பெறமுடியாத வல்லமையும் பெற்றவனாய் விளங்கினான்.

தன் வாழ்நாள் முழுவதும் மிகச்சிறந்த சிவப் பக்தனாகவும் சிவதாண்டவம் என்கிற நடன வழிபாட்டில் இணையில்லாதவனாகவும் சாம கானம் இசைப்பதில் வல்லவனாகவும் திகழ்ந்த இராவணன் கைலாயம் சென்று சிவனையெண்ணி கடுமையான தவம் இயற்றுகிறான். 

அப்போது செய்த யாகத்தில் தன் தலைகளை ஒவ்வொன்றாக கிள்ளி ஆகுதியாய் இடுகிறான். சிவன் இராவணனின் முன் தோன்றி அவனுக்கு வேண்டிய வரம் தருகிறார். அவன் பத்து புஜங்களுக்கும் வலிமை தருகிறார். 

மேலும் வலிமைப் பெற்ற இராவணன் மூவுலகங்களையும் வெல்கிறான். தேவர்கள், ரிஷிகள், நவக்கிரகங்கள், நாகங்கள்  அனைவரையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறான். சூரியனும் இராவணனைக் கேட்டே உதிக்கவும் மறையவும் செய்தான். 

ஈடு இணையற்ற சக்திமிக்கவானாய் திகழ்ந்த இராவணன், ஒரு முறை கைலாய மலையையே தன் புஜவலிமையால் தூக்க முயற்சிக்கிறான்.  பார்வதி பயப்படுகிறார்.

சிவன் தன் பாதபெருவிரலால் அழுத்த இராவணனின் கைகள் மலையின் அடியில் மாட்டிக் கொள்கிறது. நாரதரின் வீணையை வாங்கி சாமகானம் இயற்றி சிவபெருமானின் மனதை குளிரவைத்து தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறான் இராவணன். சிவன் சந்திர ஹாஸா என்ற வாளை இராவணனுக்கு பரிசளிக்கிறார். 

தன் கடுமையான தவத்தால் இராவணன் சிவனிடமிருந்து ஆத்மலிங்கத்தைப் ‘பெற்றுக் கொண்டு இலங்கைச் சென்று கொண்டிருக்கிறான்.

ஆத்மலிங்கத்தை இராவணன் வழிபாடு செய்வதன் மூலம் சாகாநிலையை பெற்றவனாகி விடுவான், அதனால் அனைத்து உலகங்களும் நீண்ட காலம் அவனுக்கு அடிமையாகவே இருக்க நேரிடுமே’ என்று  நினைத்த நாரதர் அதைத் தடுக்க எண்ணுகிறார். 

விஷ்ணு சூரியனை மறைக்கிறார்.  இராவணன் தன் சாயங்கால அனுஷ்டானங்களைச் செய்ய எண்ணுகிறான்.  ஆத்மலிங்கத்தை கீழே வைத்தால் பிறகு அதை எடுக்க முடியாது என்பதினால் அப்போது அங்கே அந்தணச் சிறுவனாய் வந்த வினாயகரிடம் தந்துவிட்டுச் செல்கிறான். விநாயகர்க லிங்கத்தை கீழே வைத்து விடுகிறார். அந்த இடமே கோகர்ணம் என்ற இடமாகும். 

இராவணனின் பக்தியினால்   சிவன் அவன் மேல் அன்பு கொண்டவராக இருக்கிறார். எனவே இராவணன் கைலாயத்தை தூக்க முயன்றபோதும், நந்தி பகவானிடம் வாதிட்டு இம்சை செய்த போதும் பெரிய தண்டனை எதையும் இராவணனுக்கு அவர் தரவில்லை.

இது மட்டுமல்லாமல் இராவணனுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. அதை பாகவத புராணம் கூறுகிறது.  இராவணனும் கும்ப கர்ணனும் கைலாயத்தில் துவாரபாலகராய் இருந்தவர்கள். ஜெய விஜயர்கள் என்று அழைக்கப்ட்டவர்கள். 

ஒருமுறை சனகாதி முனிவர்கள் விஷ்ணுவை சந்திக்க வரும்போது உள்ளே நுழைய விடாமல் அவர்களை தடுத்து வாதம் புரிகின்றனர். இதனால் எழுந்த சத்தத்தில் விஷ்ணு வெளியே வருகிறார். சனகாதி முனிவர்கள் ஜெய விஜயர்களின் மேல் குற்றம் சாட்டுகின்றனர். 

அவர்களின் மனதைப் புண்படுத்தாமலும், தங்கள் கடமையைச் செய்த  ஜெய விஜயர்களுக்கு  பாதக மில்லாமல் தண்டனை கொடுக்கவும் எண்ணுகிறார். ஏழு ªஜ்ன்மங்கள் மண்ணுலகத்தில் அவதரிக்க வேண்டும். அல்லது மூன்று பிறவிகள் அசுர குலத்தில் பிறந்த என்னை எதிர்த்து என்னால் சம்ஹரிக்கப் படவேண்டும் என்று கூறுகிறார்.

இரண்டாவதைத் தேர்ந்தெடுக்கின்றனர் துவாரபாலகர்கள். 

சத்ய யுகத்தில் ஹிரண்யாக்ஷன், ஹிரண்ய கசிபுவாக தோன்றி விஷ்ணுவை எதிர்த்த துவார பாலகர்களை வராக அவதாரம் எடுத்தும், நரசிம்ம அவதாரம் எடுத்தும் விஷ்ணு சம்ஹாரம் செய்கிறார்.

திரேதாயுகத்தில் இராவண கும்பகர்ணனாக அவதரித்தவர்களை இராம அவதாரம் எடுத்து அழித்து தன்னுடன் சேர்த்துக கொள்கிறார்.  

துவாபர யுகத்தில் சிசுபாலன், தந்தவக்ராவாக அவதரித்தவர்களை கிருஷ்ண அவதாரம் எடுத்த காலத்தில் சம்ஹரிக்கிறார். 

எனவே இராவணன்  சிவ பக்தன் மட்டுமல்லாமல், திருமாலின் சேவகன் என்பது தெரிய வருகிறது. 

இராவணனின் மனைவி மண்டோதரி மாயாசுரன் மற்றும்  ஹோமா என்ற அப்சரஸின் மகளாக கருதப்படுபவள். அயோனிஜா அதாவது  சாதாரண மனிதர்களைப்போல் தாயின் வயிற்றிலிருந்து பிறப்பெடுக்காதவள். 

சாகும்வரை சுமங்கலியாக வாழும் வரம் பெற்றவள். எனவேதான் இராவணன் போரில் தோற்று விழுந்த  போதும் இறந்தவர்களின் லோகம் செல்லாமல் பூலோகத்திலேயே இருந்தான். மண்டோதரியின் மறைவுக்குப் பிறகே அவன் தன் மனைவியுடன் மேலுலகம் சென்றான். 

வேதியா! இதுவரை இராவணனின் பிறப்பினையும், சிறப்பினையும் அறிந்து கொண்டாய். 

ஈடு இணையற்ற சிவபக்தனாகவும், மூவுலகங்களையும் ஆள்பவனாகவும், முற்பிறவியில் திருமாலின் மெய்க்காவலனாகவும் இருந்த இராவணன்  சிறந்த பாரம்பரியத்தில் பிறந்தும், வலிமையுள்ள ஏழு புதல்வர்களை பெற்றிருந்தும், ஏன் இறுதியில் துயருற்று இறந்தான்? 

ஏன் இன்றுவரை தீயவனாகவே சித்தரிக்கப்ப்டடு அனைவராலும் வெறுக்கப்படுகிறான்.  இந்தக் கேள்விக்கு பதில் தெரிந்தும் நீ சொல்லா£மல் மௌனம் சாதித்தால் உன் தலை வெடித்து சிதறும்’ என்று கூறுகிறது வேதாளம்.

வேதாளமே!  நீ ஆரம்பத்திலேயே கூறிவிட்டாய் கூடா ஆசையென்று .. அது இராவணனின் அழிவுக்கு காரணம். அவப் பெயருக்குக் காரணம். 

ஆசைகள் இல்லா மனிதன் இலலை. அவை தர்மநெறிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். தன் தவ வலிமையால் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்ளும் இராவணன் அடுத்தவனின் மனைவி மேல் கொண்ட ஆசையில் மட்டும் வெற்றி பெற முடியவில்லை.

அடுத்தவன் மனைவி மேல் ஆசைக் கொள்வது பெரிய பாவம் என்பது புராணக்காலத்திலேயே இருந்த நெறியாகும்.  அப்படி ஆசைப்பட்டவர்கள் அடைந்த தண்டனையையும் நாம் காணமுடிகிறது. 

தேவலோகத்திற்கே அதிபதி இந்திரன். கௌதம முனிவரின் மனைவியான அகலிகை மேல் ஆசைகொண்டு சாபம் பெற்று உடல் முழுதும்கண்களாக மாறி அவமானப்பட்டு ஓடி ஒளிந்து, இறுதியில் சிவனையெண்ணி தவமிருந்து ஒவ்வொரு கண்ணாக மறையப் பெற்றான் என்பதைப் பார்த்தோம். இதனால்தான் தேலோக அதிபதியான இந்திரனின் புகழ் பெரிய அளவில் போற்றப்படுவதில்லை. 

தன் குருநாதர் பிரகஸ்பதியின் பத்தினியான தாரை என்பவளின் மேல் மோகம் கொள்கிறான் சந்திரன். அதனால் தேய்ந்து அழியும் சாபம் அடைகிறான். 

சிவனை சரணடைந்து பின் சாப விமோசனம் பெறுகிறான். இதனான்தான் ‘இந்திரன்  கெட்டதும் பெண்ணாலே சந்திரன் கெட்டதும் பெண்ணாலே’ என்றப் பழமொழியே நிலவுகிறது.

குரங்கினமாக இருந்தாலும் வேத சாஸ்திரங்களைக் கற்றறிந்த வாலி, முன் ஜென்மத்தில் இந்திரனாக இருந்தவன் என்று கூறப்படுகிறது. சிறந்த சிவபக்தன் , சிறந்த அரசனாக, பராக்கிரமசாலியாக இருந்தான். இருப்பினும் தன் சகோதரன் சுக்ரீவனின் மனைவியைக் கவர்ந்து கொண்டதால் இராமனால் வதைக்கப்பட்டான்.  சரித்திரத்திலும் அவன் புகழ் மங்கியே சித்தரிக்கப்படுகிறது. 

இவ்வளவு ஏன்? திருமாலே ஒரு முறை சிவனுக்கு உதவும் பொருட்டு ஜலந்திரன் என்ற சமுத்ரராஜனின் மனைவியான பிருந்தையை ஜலந்திரன் வேஷத்தில் அரவணைக்கிறார். 

ஏனென்றால் பிருந்தையின் பதிவிரதாதன்மை  காரணமாக ஜலந்தரனை சிவபெருமானால் அழிக்க இயலவில்லை.  எனவே விஷ்ணு ஜலந்திரன் உருவிலேயே வந்து பிருந்தையின் பதிவிரதத் தன்மையை கலங்கப்படுத்த ஜலந்திரன் கொல்லப்படுகிறான்.  

ஆனால் வந்தது விஷ்ணு என்பதை அறிந்ததும், விஷ்ணு பக்தையாக இருந்தும், தன் பதிவிரதத் தன்மை களையக் காரணமாக விஷ்ணுவின் மேல் சினமுற்று சாபமிடுகிறாள். 

‘போலிவேடத்தில் இன்னொருவனின் மனைவியைக் களங்கப்படுத்தியதால் நீயும், உன் மனைவியை இழந்து அழுது கலங்குவாய் என்று சாபமிடுகிறாள். அதை ஏற்றுக் கொள்கிறார் விஷ்ணு. அதனால்தான் இராம அவதாரத்தில் தன் மனைவியை இழந்து கலங்குகிறார். 

இராவணன் அழகான மனைவிகளைப் பெற்றிருந்தும் குபேரனனின் மகனுக்கா நிச்சயிக்கப்பட்ட ரம்பையை வலிய அபகரிக்கிறார்.’ நான் உன் அண்ணன் மகனின் மனைவியாகப் போகிறவள், உனக்கு மகள் என்ற ஸ்தானத்துக்குரியவளாகிறவள் என்னை விட்டுவிடு’ என்கிறாள் ரம்பை. 

ஆனாலும அவளைக் கவர்ந்து வருகிறான் இராவணன். எனவே கோபமுற்ற குபேரனின் மகன், ‘உன்னை விரும்பாத எந்த பெண்ணையும் நீ வலுக்கட்டாயமாகத் தொட்டாலும் அக்கணமே உன் தலை வெடித்து போகட்டும்’ என்று சபிக்கிறான்.

இவ்வளவு நிகழ்ந்திருந்தும், நான்கு வேதங்களைக் கரைத்துக் குடித்திருந்தும், ஆறு சாஸ்திரங்களில் வல்லவனாக இருந்தும், சிவனின் தீவிரப் பக்தனாயிருந்தும், நவக்கிரங்களையும் தன் படிக்கட்டுகளாய் அமைத்துக் கொள்ளும் ஆற்றல் மிக்கவனாக இருந்தும், தர்மநெறியை மீறி பஞ்ச பத்தினிகளில் ஒருவரான சீதையைக் கடத்தி வருகிறான் இராவணன். அதானாலேயே அழிவைத் தேடிக்கொள்கிறான். இழிந்தவனாக சித்தரிக்கப்படுகிறான்.  

வேதாளமே! இங்கு நாம்  இரண்டு விசயங்களை அறிந்து கொள்ள முடிகிறது. ஒன்று தகாத பெண்ணாசை அழிவையேத் தரும். அடுத்து கைகேசி மோக வெறி கொண்டு, இறைவனை வழிபடும நேரத்தில் வைஸ்ரவாவுடன் தாம்பத்ய உறவு கொண்டதால் உதித்தவன் கைகேசியின் முதல் குழந்தையான இராவணன். அவன் மோக வெறியாலேயே அறிவிழக்கிறான். 

இதிலிருந்து தாம்பத்ய உறவு கொள்வதற்கும் நேரம் காலம் இருக்கிறது என்பது தெரிகிறது. எனவேதான் திருமணம்ஆனதும் முதலில் சாந்தி முகூர்த்தம் என்ற நேரத்தை கணிக்கின்றனர் என்பதும் தெரிய வருகிறது.

வேதாளத்தின் கேள்விக்கு சரியான பதிலை சொல்லியதன்  மூலம் வேதியனின் மௌனம் கலைந்ததால்  வேதாளம் அவனிடமிருந்து விடுபட்டு மீண்டும் புளிய மரத்திற்குச்  சென்று,   கிளையொன்றைப் பற்றிக்கொண்டு   தலைகீழாக தொங்க ஆரம்பித்தது.

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...